மேலும் அறிய

பேஸ்புக் காதலால் ஏமாந்த கேரள பெண்: கிருஷ்ணகிரி அருகே எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!

கிருஷ்ணகிரி அருகே காதலனை தேடிவந்த இடத்தில் தீக்காயங்களுடன் கேரளாவை சேர்ந்த இளம்பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளார். அவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் போலீசார் காதலனை தேடிவருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே எரிந்த நிலையில் தீக்காயங்களுடன் சடலமாக கிடந்த பெண்ணின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனா்.காவேரிப்பட்டணம் அருகே கச்சேரி மேல்கொட்டாய் மலையடிவாரத்தில் இளம்பெண் ஒருவா் எரிந்த நிலையில் சடலமாகக் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையிரனுக்கு  தகவல் தெரிவித்தனா்.

அதன் பேரில், காவல்துறை சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் அந்த பகுதியில் இருந்த ஒரு பையும், செல்போன் மற்றும் ஒரு கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர்  இது குறித்து மேற்கொண்ட விசாரணையில், இறந்த பெண்ணின் பெயா் ரஞ்சனி என்றும், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் எனவும் தெரியவந்தது.  

 


பேஸ்புக் காதலால் ஏமாந்த கேரள பெண்: கிருஷ்ணகிரி அருகே எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!

 

மேலும் அந்த கடிதத்தில் என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை  என்றும், யார் மேலும் வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்றும்,  எனக்கு வாழ பிடிக்கவில்லை என குறிப்பிட்டு இருந்தது. மேலும் என் உடல் கிருஷ்ணகிரி தான் வரும், வரும்போது என்னை பார்க்காதே என எழுதிய கடிதம் உள்ளது.மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த வேலம்பட்டி பகுதியை சேர்ந்த சூர்யா,வயது (22) என்ற வாலிபர், ஐந்து வருடங்களாக பேஸ்புக்கில் ரஞ்சனியுடன் நண்பர்களாக பழகிவந்துள்ளார். நாள் அடைவில் அது காதலாக மாறியுள்ளது.

கார் டிரைவரான சூர்யா ரஞ்சினியை பார்க்க கேரளாவிற்கு சென்றுள்ளார் அதனைத்தொடர்ந்து இருவரும் சந்தித்தனர். அப்போது காதலியிடம் சூரியா  வீட்டின் வருமையை கூறி காதலியிடம் இருந்து நகை மற்றும் பணத்தை வாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர் ரஞ்சனியுடன் தொடர்பை துண்டித்த சூர்யா வேறு ஒரு பெண்ணுடன் பழகிவந்ததாக கூறப்படுகிறது.


பேஸ்புக் காதலால் ஏமாந்த கேரள பெண்: கிருஷ்ணகிரி அருகே எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!

 

சூர்யாவை தேடி ரஞ்சனி கிருஷ்ணகிரி  வந்த நிலையில், அவருக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன்  தொடர்ப்பு இருப்பது தெரியவந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.  மேலும் கடந்த ஆண்டு சூர்யா தனை ஏமாற்றி நகை மற்றும் பணம் பரித்ததாகவும், அவருடன் தனை சேர்த்து வைக்குமாறும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் சூரியா மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறுது.

அதனைத்தொடர்ந்து கேரளாவுக்கு திரும்பி செல்லாமல் காவேரிப்பட்டணத்தில் உள்ள சூப்பர் மார்கெட்டில் கடந்த நான்கு மாதமாக வேலை பார்த்து வந்த நிலையில் திடீரென எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவேரிப்பட்டினம்  காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணின் காதலன் சூர்யாவை  தேடி வருகின்றனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
Virat Kohli:
Virat Kohli: "நம்பவே முடியல.. எல்லாத்தையும் கொடுத்துருக்கேன்.." கண்கலங்கிய சாம்பியன் விராட் கோலி
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
Virat Kohli:
Virat Kohli: "நம்பவே முடியல.. எல்லாத்தையும் கொடுத்துருக்கேன்.." கண்கலங்கிய சாம்பியன் விராட் கோலி
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
Embed widget