மேலும் அறிய

கேரள முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் விமானப்படை ஊழியர் சேலத்தில் கைது

2004 ஆம் ஆண்டு வரை இந்திய விமான படையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிரேம்ராஜ் நாயார், முந்திரி வியாபாரம் செய்து பெரும் நஷ்டம் அடைந்தால் அதற்கு கடனை கட்ட முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டானா அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் ஹோட்டல் முழுவதும் சோதனை நடத்தினர். இருப்பினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சேலம் மாநகர சைபர் கிரைம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தினர். ஹோட்டலில்  வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் இலவச வைஃபை மூலம் மின்னஞ்சல் அனுப்பி ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது. 

இதேபோன்று மாமாங்கத்தில் உள்ள  மற்றோரு தனியார் ஓட்டலுக்கும் இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இரண்டு ஓட்டல்களுக்கும் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் இரண்டு ஓட்டல்களுக்கும் ஒருநபர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது தெரியவந்தது.

கேரள முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் விமானப்படை ஊழியர் சேலத்தில் கைது
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் கோவை மாவட்ட ஆட்சியருக்கு செல்போன் மூலமாக பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதேபோன்று கேரள மாநிலத்தில் உள்ள கேரள முதலமைச்சர் வீடு, தலைமைச் செயலகம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட 5 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை ஆராய்ந்ததில் இரும்பாலை அருகே உள்ள சிற்றூரில் பழைய பேப்பர் கடை வைத்திருக்கும் கிருஷ்ணன் என்பவரது செல்போன் என்று தெரியவந்தது. கிருஷ்ணனை பிடித்து விசாரணை செய்தபோது அவரது செல்போன் திருட்டுப் போனதாக தெரிவித்துள்ளார். செல்போனை திருடி சென்ற நபர் இந்த மிரட்டல் விடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் மாநகர காவல்துறை காவல்துறையினர் தனிப்படை அமைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டிலில் ஈடுபட்ட நபர் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரேம்ராஜ் நாயர் என்பதும் அவர் பெங்களூருவில் வசித்து வருவதும் தெரியவந்தது. 

கேரள முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் விமானப்படை ஊழியர் சேலத்தில் கைது

இதையடுத்து சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தனிப்படை காவல்துறையினரால் பிரேம் ராஜ் நாயர் கைது செய்யப்பட்டார். 1994 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை இந்திய விமான படையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிரேம்ராஜ் நாயார், பின்னர்  முந்திரி வியாபாரம் செய்து பெரும் நஷ்டம் அடைந்தால் அதற்கு கடனை கட்ட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பணத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையறிந்த கேரள காவல் துறையினர் சேலம் விரைந்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிரேம் ராஜ் நாயர் கேரளா அழைத்து சென்று விசாரணை செய்யும் முடிவு செய்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

கிரிவலம் செல்லும் பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய கொடூர கும்பல்; திருவண்ணாமலையில் பயங்கரம் - நடந்தது என்ன?
கிரிவலம் செல்லும் பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய கொடூர கும்பல்; திருவண்ணாமலையில் பயங்கரம் - நடந்தது என்ன?
மாணவிகள் பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ்! - எஸ்பி ஸ்டாலின் - கலெக்டர் ஸ்ரீகாந்த் காட்டிய அதிரடி ஆக்ஷன்!
மாணவிகள் பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ்! - எஸ்பி ஸ்டாலின் - கலெக்டர் ஸ்ரீகாந்த் காட்டிய அதிரடி ஆக்ஷன்!
" இரு ஆண்களுடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் " இறுதியில் நேர்ந்த கொடூர சம்பவம்
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை !! இளம் பெண்ணை ஏமாற்றிய த.வெ.க நிர்வாகிகள் கைது

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Trump New Tariff: மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
Inverter Battery Tips: கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
Embed widget