மேலும் அறிய

கேரள முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் விமானப்படை ஊழியர் சேலத்தில் கைது

2004 ஆம் ஆண்டு வரை இந்திய விமான படையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிரேம்ராஜ் நாயார், முந்திரி வியாபாரம் செய்து பெரும் நஷ்டம் அடைந்தால் அதற்கு கடனை கட்ட முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டானா அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் ஹோட்டல் முழுவதும் சோதனை நடத்தினர். இருப்பினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சேலம் மாநகர சைபர் கிரைம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தினர். ஹோட்டலில்  வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் இலவச வைஃபை மூலம் மின்னஞ்சல் அனுப்பி ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது. 

இதேபோன்று மாமாங்கத்தில் உள்ள  மற்றோரு தனியார் ஓட்டலுக்கும் இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இரண்டு ஓட்டல்களுக்கும் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் இரண்டு ஓட்டல்களுக்கும் ஒருநபர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது தெரியவந்தது.

கேரள முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் விமானப்படை ஊழியர் சேலத்தில் கைது
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் கோவை மாவட்ட ஆட்சியருக்கு செல்போன் மூலமாக பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதேபோன்று கேரள மாநிலத்தில் உள்ள கேரள முதலமைச்சர் வீடு, தலைமைச் செயலகம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட 5 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை ஆராய்ந்ததில் இரும்பாலை அருகே உள்ள சிற்றூரில் பழைய பேப்பர் கடை வைத்திருக்கும் கிருஷ்ணன் என்பவரது செல்போன் என்று தெரியவந்தது. கிருஷ்ணனை பிடித்து விசாரணை செய்தபோது அவரது செல்போன் திருட்டுப் போனதாக தெரிவித்துள்ளார். செல்போனை திருடி சென்ற நபர் இந்த மிரட்டல் விடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் மாநகர காவல்துறை காவல்துறையினர் தனிப்படை அமைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டிலில் ஈடுபட்ட நபர் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரேம்ராஜ் நாயர் என்பதும் அவர் பெங்களூருவில் வசித்து வருவதும் தெரியவந்தது. 

கேரள முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் விமானப்படை ஊழியர் சேலத்தில் கைது

இதையடுத்து சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தனிப்படை காவல்துறையினரால் பிரேம் ராஜ் நாயர் கைது செய்யப்பட்டார். 1994 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை இந்திய விமான படையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிரேம்ராஜ் நாயார், பின்னர்  முந்திரி வியாபாரம் செய்து பெரும் நஷ்டம் அடைந்தால் அதற்கு கடனை கட்ட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பணத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையறிந்த கேரள காவல் துறையினர் சேலம் விரைந்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிரேம் ராஜ் நாயர் கேரளா அழைத்து சென்று விசாரணை செய்யும் முடிவு செய்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget