மேலும் அறிய

கேரள முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் விமானப்படை ஊழியர் சேலத்தில் கைது

2004 ஆம் ஆண்டு வரை இந்திய விமான படையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிரேம்ராஜ் நாயார், முந்திரி வியாபாரம் செய்து பெரும் நஷ்டம் அடைந்தால் அதற்கு கடனை கட்ட முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டானா அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் ஹோட்டல் முழுவதும் சோதனை நடத்தினர். இருப்பினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சேலம் மாநகர சைபர் கிரைம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தினர். ஹோட்டலில்  வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் இலவச வைஃபை மூலம் மின்னஞ்சல் அனுப்பி ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது. 

இதேபோன்று மாமாங்கத்தில் உள்ள  மற்றோரு தனியார் ஓட்டலுக்கும் இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இரண்டு ஓட்டல்களுக்கும் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் இரண்டு ஓட்டல்களுக்கும் ஒருநபர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது தெரியவந்தது.

கேரள முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் விமானப்படை ஊழியர் சேலத்தில் கைது
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் கோவை மாவட்ட ஆட்சியருக்கு செல்போன் மூலமாக பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதேபோன்று கேரள மாநிலத்தில் உள்ள கேரள முதலமைச்சர் வீடு, தலைமைச் செயலகம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட 5 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை ஆராய்ந்ததில் இரும்பாலை அருகே உள்ள சிற்றூரில் பழைய பேப்பர் கடை வைத்திருக்கும் கிருஷ்ணன் என்பவரது செல்போன் என்று தெரியவந்தது. கிருஷ்ணனை பிடித்து விசாரணை செய்தபோது அவரது செல்போன் திருட்டுப் போனதாக தெரிவித்துள்ளார். செல்போனை திருடி சென்ற நபர் இந்த மிரட்டல் விடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் மாநகர காவல்துறை காவல்துறையினர் தனிப்படை அமைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டிலில் ஈடுபட்ட நபர் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரேம்ராஜ் நாயர் என்பதும் அவர் பெங்களூருவில் வசித்து வருவதும் தெரியவந்தது. 

கேரள முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் விமானப்படை ஊழியர் சேலத்தில் கைது

இதையடுத்து சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தனிப்படை காவல்துறையினரால் பிரேம் ராஜ் நாயர் கைது செய்யப்பட்டார். 1994 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை இந்திய விமான படையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிரேம்ராஜ் நாயார், பின்னர்  முந்திரி வியாபாரம் செய்து பெரும் நஷ்டம் அடைந்தால் அதற்கு கடனை கட்ட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பணத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையறிந்த கேரள காவல் துறையினர் சேலம் விரைந்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிரேம் ராஜ் நாயர் கேரளா அழைத்து சென்று விசாரணை செய்யும் முடிவு செய்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget