மேலும் அறிய

மகன் வாங்கிய கடனை கட்ட முடியாததால் விஷம் குடித்த பெற்றோர் - கரூரில் சோகம்

மகன் வாங்கிய கடனை கட்ட முடியாததால் விஷம் குடித்த பெற்றோர்.

கரூர் மாவட்டத்தில் தளவாபாளையம் அருகே பரிதாபம்.

கரூர் மாவட்டம் நொய்யல் தளவாபாளையம் அருகே மகன் வாங்கிய கடனை கட்ட முடியாததால் பெற்றோர் விஷம் குடித்தனர். இதில் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார். தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 



மகன் வாங்கிய கடனை கட்ட முடியாததால் விஷம் குடித்த பெற்றோர் - கரூரில் சோகம்

 

தொழில் நஷ்டம்

கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 62). இவரது மனைவி பாப்பாத்தி (58). இந்த தம்பதியின் மகன் மோகன்ராஜ் (வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும், ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார். இதில் ஷேர் மார்க்கெட்டில் மோகன்ராஜுக்கு நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. அதேபோல் வங்கியில் வாங்கிய கடனையும் கட்ட முடியவில்லை.

 


மகன் வாங்கிய கடனை கட்ட முடியாததால் விஷம் குடித்த பெற்றோர் - கரூரில் சோகம்

 

 

புதுவீடு கட்டியதற்கு வாங்கிய கடனையும் கட்ட முடியாததால் புது வீட்டை விற்பனை செய்து விட்டார். அதனால், மோகன்ராஜ் அய்யம்பாளையத்தில் தனது தாய், தந்தையுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். தற்போது நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள தனது மாமியார் வீட்டில் மனைவியுடன் தங்கி குடும்பம் நடத்தி வருகிறார்.

விஷம் குடித்த பெற்றோர்.

இந்நிலையில் மோகன்ராஜ் இரவு அய்யம்பாளையம் வந்து தனது தாய் தந்தையை பார்த்துவிட்டு பரமத்தி வேலூருக்கு சென்று விட்டார். காலை அய்யம்பாளையத்தை சேர்ந்த உறவினர்கள் மோகன்ராஜுக்கு போன் செய்து உனது பெற்றோர் நீ விற்பனை செய்த புதிய வீட்டின் வாசலில் மயங்கி கிடக்கின்றனர். மேலும், பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) டப்பாவும் அருகில் கிடைக்கிறது என்று கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜ் விரைந்து வந்து பார்த்தார். அப்போது தந்தை ரங்கசாமி இறந்து கிடந்தார். தாய் பாப்பாத்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தனது மகனிடம் நீ வாங்கிய அதிக கடனை உன்னால் கட்ட முடியாததால் உன்னை நினைத்து கஷ்டப்பட்டு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டோம் என்று கூறியுள்ளார்.

தாய்க்கு சிகிச்சை.

இதையடுத்து பாப்பாத்தியை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரங்கசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ் சரவணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


குடும்பத்த தகராறில் வெல்டிங் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.

க.பரமத்தி அருகே குடும்ப தகராறு வெல்டிங் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் முருகேசன் வயது 25 என்பவர் க.பரமத்தி அடுத்த மொஞ்சனுர் அருகே அகிலாண்டபுரம் பகுதியில் வாடகை வீட்டில் மனைவி தனியா வயது 20 உடன் வசித்து வந்தார். முருகேசன் வெல்டிங் கூலி தொழிலாளி. வியாபாரி முருகேசன் மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

 

 


மகன் வாங்கிய கடனை கட்ட முடியாததால் விஷம் குடித்த பெற்றோர் - கரூரில் சோகம்

 

குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வெல்டர் மனைவியுடன் தகராறு செய்தார். பின்னர் வீட்டில் உள்ள விட்டத்தில் சேலையால் தூக்கு மாட்டி உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முருகேசன் இறந்து விட்டதாக கூறினார். மேலும், இது குறித்து இறந்தவர் மனைவி தன்யா கொடுத்த புகாரின் பேரில் தென்னிலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தலைப்பு செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை
" பேரப் பிள்ளைகள் உள்ள வயதில் சிறுமியுடன் காதல் திருமணம் " முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
"என் உயிர் போனாலும் பரவாயில்லை.." சீர்காழியில் தமிழருக்காக தன் வாழ்வைப் பணயம் வைத்த வடமாநில கேட் கீப்பர்..!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget