மேலும் அறிய

மகன் வாங்கிய கடனை கட்ட முடியாததால் விஷம் குடித்த பெற்றோர் - கரூரில் சோகம்

மகன் வாங்கிய கடனை கட்ட முடியாததால் விஷம் குடித்த பெற்றோர்.

கரூர் மாவட்டத்தில் தளவாபாளையம் அருகே பரிதாபம்.

கரூர் மாவட்டம் நொய்யல் தளவாபாளையம் அருகே மகன் வாங்கிய கடனை கட்ட முடியாததால் பெற்றோர் விஷம் குடித்தனர். இதில் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார். தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 



மகன் வாங்கிய கடனை கட்ட முடியாததால் விஷம் குடித்த பெற்றோர் - கரூரில் சோகம்

 

தொழில் நஷ்டம்

கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 62). இவரது மனைவி பாப்பாத்தி (58). இந்த தம்பதியின் மகன் மோகன்ராஜ் (வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும், ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார். இதில் ஷேர் மார்க்கெட்டில் மோகன்ராஜுக்கு நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. அதேபோல் வங்கியில் வாங்கிய கடனையும் கட்ட முடியவில்லை.

 


மகன் வாங்கிய கடனை கட்ட முடியாததால் விஷம் குடித்த பெற்றோர் - கரூரில் சோகம்

 

 

புதுவீடு கட்டியதற்கு வாங்கிய கடனையும் கட்ட முடியாததால் புது வீட்டை விற்பனை செய்து விட்டார். அதனால், மோகன்ராஜ் அய்யம்பாளையத்தில் தனது தாய், தந்தையுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். தற்போது நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள தனது மாமியார் வீட்டில் மனைவியுடன் தங்கி குடும்பம் நடத்தி வருகிறார்.

விஷம் குடித்த பெற்றோர்.

இந்நிலையில் மோகன்ராஜ் இரவு அய்யம்பாளையம் வந்து தனது தாய் தந்தையை பார்த்துவிட்டு பரமத்தி வேலூருக்கு சென்று விட்டார். காலை அய்யம்பாளையத்தை சேர்ந்த உறவினர்கள் மோகன்ராஜுக்கு போன் செய்து உனது பெற்றோர் நீ விற்பனை செய்த புதிய வீட்டின் வாசலில் மயங்கி கிடக்கின்றனர். மேலும், பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) டப்பாவும் அருகில் கிடைக்கிறது என்று கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜ் விரைந்து வந்து பார்த்தார். அப்போது தந்தை ரங்கசாமி இறந்து கிடந்தார். தாய் பாப்பாத்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தனது மகனிடம் நீ வாங்கிய அதிக கடனை உன்னால் கட்ட முடியாததால் உன்னை நினைத்து கஷ்டப்பட்டு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டோம் என்று கூறியுள்ளார்.

தாய்க்கு சிகிச்சை.

இதையடுத்து பாப்பாத்தியை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரங்கசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ் சரவணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


குடும்பத்த தகராறில் வெல்டிங் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.

க.பரமத்தி அருகே குடும்ப தகராறு வெல்டிங் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் முருகேசன் வயது 25 என்பவர் க.பரமத்தி அடுத்த மொஞ்சனுர் அருகே அகிலாண்டபுரம் பகுதியில் வாடகை வீட்டில் மனைவி தனியா வயது 20 உடன் வசித்து வந்தார். முருகேசன் வெல்டிங் கூலி தொழிலாளி. வியாபாரி முருகேசன் மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

 

 


மகன் வாங்கிய கடனை கட்ட முடியாததால் விஷம் குடித்த பெற்றோர் - கரூரில் சோகம்

 

குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வெல்டர் மனைவியுடன் தகராறு செய்தார். பின்னர் வீட்டில் உள்ள விட்டத்தில் சேலையால் தூக்கு மாட்டி உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் உடனே தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முருகேசன் இறந்து விட்டதாக கூறினார். மேலும், இது குறித்து இறந்தவர் மனைவி தன்யா கொடுத்த புகாரின் பேரில் தென்னிலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சென்னை: பள்ளிக்கு சென்ற தாய், மகள் லாரி மோதி பரிதாப மரணம்! பெரும்பாக்கத்தில் சோகம்!
சென்னை: பள்ளிக்கு சென்ற தாய், மகள் லாரி மோதி பரிதாப மரணம்! பெரும்பாக்கத்தில் சோகம்!
காதலனா? காசு? - இயக்குநரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற துணை நடிகை! முன்னாள் காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய வெறிச்செயல்!
காதலனா? காசு? - இயக்குநரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற துணை நடிகை! முன்னாள் காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய வெறிச்செயல்!
கூடுவாஞ்சேரியில் சோகம்: கொசுவத்தி சுருளால் சிதைந்த குடும்பம்! அதிர்ச்சியில் மக்கள், காரணம் என்ன?
கூடுவாஞ்சேரி சோகம்: கொசுவத்தி சுருளால் சிதைந்த குடும்பம்! அதிர்ச்சியில் மக்கள், காரணம் என்ன?
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Embed widget