மேலும் அறிய

தலைக்கேறிய போதை... நடுரோட்டில் 2 இளைஞர்கள் செய்த செயலால் பரபரப்பான கரூர்

காவலரை தகாத வார்த்தையில் பேசி அராஜகத்தின் உச்சத்தில் ஈடுபட்ட இருவரையும், போலீசார் அழைத்துச் சென்றனர்.

கரூரில் மது போதையில் சொகுசு விடுதியில் உள்ளே நுழைந்த 2 இளைஞர்கள் சாப்பாடு தர மறுத்ததால் சாலை மறியல்  ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரூர் - கோவை சாலையில் தனியார் சொகுசு விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியின் வளாகத்திலேயே உயர்ரக சைவ - அசைவ உணவகமும் அமைந்துள்ளது. அப்பகுதிக்கு வந்த 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் அதீத மதுபோதையில் உள்ளே நுழைந்து, உணவகத்தில் சாப்பிடுவதற்கு அசைவ உணவுகள் கேட்டதாக கூறப்படுகிறது. 

 


தலைக்கேறிய போதை... நடுரோட்டில் 2 இளைஞர்கள் செய்த செயலால் பரபரப்பான கரூர்

 

அப்போது பணியில் இருந்த ஊழியர்கள் அவர்களுக்கு சாப்பாடு தர மறுத்துள்ளனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் விடுதி ஊழியர்களை தரக்குறைவாக பேசியதால், கரூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் அப்பகுதிக்கு வந்துள்ளனர்.

 


தலைக்கேறிய போதை... நடுரோட்டில் 2 இளைஞர்கள் செய்த செயலால் பரபரப்பான கரூர்

 

மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களையும் போலீசார் வெளியே அழைத்து வந்தபோது, சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவரை இளைஞர்கள் தகாத வார்த்தையில் தரக்குறைவாக பேசியதோடு, சாலையில் அமர்ந்து திடீரென்று மறியல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.


தலைக்கேறிய போதை... நடுரோட்டில் 2 இளைஞர்கள் செய்த செயலால் பரபரப்பான கரூர்

 

 

அதை போலீசார் கண்டித்ததும், ஆத்திரமடைந்த இருவரும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்து வாகனங்களை மறித்து அராஜகத்தின் உச்சத்தில் ஈடுபட்டனர்.

 

 


தலைக்கேறிய போதை... நடுரோட்டில் 2 இளைஞர்கள் செய்த செயலால் பரபரப்பான கரூர்

இந்த சம்பவத்தை அடுத்து, மேலும் சில காவலர்கள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, தலைக்கேறிய மதுபோதையில் இருந்த இரண்டு இளைஞர்களையும், காவல்துறை வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக கரூர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

மது போதையில் அராஜகத்தில் ஈடுபட்ட இளைஞர்களை, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பியதை அடுத்து அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

 


தலைக்கேறிய போதை... நடுரோட்டில் 2 இளைஞர்கள் செய்த செயலால் பரபரப்பான கரூர்

மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களில் ஒரு நபர் கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்த விக்கி என்றும், அவர் சம்பந்தப்பட்ட தனியார் சொகுசு விடுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பணியாற்றி வந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் காரணமாக கரூர் - கோவை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து- துளிர்விடும் நம்பிக்கை
ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து- துளிர்விடும் நம்பிக்கை
'கார் பந்தயம் நடத்த காசு இருக்கு; கற்பிக்கும் ஆசிரியர்களுக்குக் கொடுக்க இல்லையா?'- திமுக அரசிடம் ஈபிஎஸ் கேள்வி
'கார் பந்தயம் நடத்த காசு இருக்கு; கற்பிக்கும் ஆசிரியர்களுக்குக் கொடுக்க இல்லையா?'- திமுக அரசிடம் ஈபிஎஸ் கேள்வி
கிட்டத்தட்ட 1 கோடி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.. ஒரே ஆண்டில் இந்தியாவுக்கு இத்தனை பேர் விசிட்டா?
கிட்டத்தட்ட 1 கோடி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.. ஒரே ஆண்டில் இந்தியாவுக்கு இத்தனை பேர் விசிட்டா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Samantha Divorce Controversy : ‘’சமந்தாவை வைத்து டீல் !’’காங். அமைச்சர் சர்ச்சை பேச்சுBJP Cadre issue : ”மன்னிப்பு கேட்டுட்டு போ” பாஜக நிர்வாகி பாலியல் தொல்லை? சுற்றிவளைத்த மக்கள்Pradeep Yadhav IAS : ”தம்பியை பார்த்துக்கோங்க”சீனியர் IAS-ஐ அழைத்த ஸ்டாலின்!யார் இந்த பிரதீப் யாதவ்?Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து- துளிர்விடும் நம்பிக்கை
ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து- துளிர்விடும் நம்பிக்கை
'கார் பந்தயம் நடத்த காசு இருக்கு; கற்பிக்கும் ஆசிரியர்களுக்குக் கொடுக்க இல்லையா?'- திமுக அரசிடம் ஈபிஎஸ் கேள்வி
'கார் பந்தயம் நடத்த காசு இருக்கு; கற்பிக்கும் ஆசிரியர்களுக்குக் கொடுக்க இல்லையா?'- திமுக அரசிடம் ஈபிஎஸ் கேள்வி
கிட்டத்தட்ட 1 கோடி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.. ஒரே ஆண்டில் இந்தியாவுக்கு இத்தனை பேர் விசிட்டா?
கிட்டத்தட்ட 1 கோடி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.. ஒரே ஆண்டில் இந்தியாவுக்கு இத்தனை பேர் விசிட்டா?
Vettaiyan Movie: 'வேட்டையன்' படத்திற்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு  !
Vettaiyan Movie: 'வேட்டையன்' படத்திற்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு  !
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: தமிழ்நாட்டுச் சிறைகளில் சாதிய பாகுபாடுகளை அகற்றுக- ரவிக்குமார் எம்.பி.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: தமிழ்நாட்டுச் சிறைகளில் சாதிய பாகுபாடுகளை அகற்றுக- ரவிக்குமார் எம்.பி.
Isha Row: ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான காவல் விசாரணை: முறையிட்ட சத்குரு- தடைவிதித்த உச்ச நீதிமன்றம்!
ஈஷா மைய குற்ற வழக்குகள் மீதான காவல் விசாரணை: முறையிட்ட சத்குரு- தடைவிதித்த உச்ச நீதிமன்றம்!
Mahavishnu: சர்ச்சை பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன்: கைதாகி ஒரு மாதம் கழித்து நீதிமன்றம் உத்தரவு
Mahavishnu: சர்ச்சை பேச்சாளர் மகா விஷ்ணுவுக்கு ஜாமீன்: கைதாகி ஒரு மாதம் கழித்து நீதிமன்றம் உத்தரவு
Embed widget