மேலும் அறிய

பிள்ளைகளை கொன்று தாய் தற்கொலை.....பாச போராட்டத்தால் கரூரில் ஏற்பட்ட துயர சம்பவம்

மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். குழந்தைக்கு மூச்சு திணறல் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக பெற்றோர்கள் மனமுடைந்து உள்ளனர். 

கரூரில் நிஷாந்தி (30 வயது) என்ற பெண் தனது 4 வயது மகள் மற்றும் 2 வயது மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கெந்தப் பொடிக்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (35) - நிசாந்தி (30) தம்பதி. இவர்களது மகள் தியாழினி (வயது 4), மகன் பூபன் பார்க்கவன் (வயது 2). இவர்களது மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். குழந்தைக்கு மூச்சு திணறல் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக பெற்றோர் மனமுடைந்து உள்ளனர். 


பிள்ளைகளை கொன்று தாய் தற்கொலை.....பாச போராட்டத்தால் கரூரில் ஏற்பட்ட துயர சம்பவம்

இந்த நிலையில், காலை நிஷாந்தியின் கணவர் வெங்கடேசன் அவரது சகோதரர் குமார் ஆகிய இருவரும் ஈரோடு மாவட்டம், அரச்சலூரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்கு தயாரானார்கள். அப்போது நிஷாந்தனி மற்றும் அவரது குழந்தைகள் மூன்று பேரும் கோவிலுக்கு வரவில்லை எனவும் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணம் காட்டி வீட்டில் இருந்துள்ளார். கூட்டு குடும்பமாக இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.



பிள்ளைகளை கொன்று தாய் தற்கொலை.....பாச போராட்டத்தால் கரூரில் ஏற்பட்ட துயர சம்பவம்

இந்த நிலையில் அவர்கள் கோயிலுக்கு சென்ற பிறகு மாலை 4:00 மணியளவில் நிஷாந்தி தனது மகன் மற்றும் மகள் ஆகிய இருவரையும் தனது சேலையில் தூக்கிட்டு தொங்க வைத்து, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்கு முன்பாக, அக்கம் பக்கத்தினர் வெகு நேரம் கதவு சாத்தப்பட்டு இருப்பது கண்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இவர்கள் தூக்கில் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக வெங்கடேஷ் மற்றும் குமார் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். தகவல் கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்தனர். 

இந்த சம்பவம் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த நிஷாந்தி மற்றும் அவரது குழந்தைகள் ஆகிய மூன்று பேரின் உடல்களையும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.


மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் தனது மகளையும், மகனையும் தான் கட்டிய சேலையால் தூக்கிலிட்ட பின்னர் தானும் மனம் உடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தாயின் தற்கொலை முடிவால் தற்போது அந்தப் பகுதியே கண்ணீர் கடலில் நீந்துகிறது. தனது மகளின் நோயை குணப்படுத்த முடியவில்லை என்ற சோகத்தில் தாய் எடுத்த விபரீத முடிவால் இளம் பெண்ணின் குடும்பத்தாரும் மனைவி இழந்து வாடும் கணவரின் குடும்பத்தாரும் துயரத்தில் உள்ளனர்.

தற்போது விஞ்ஞான உலகில் தீர்க்க முடியாத பிரச்சனைக்கும் மருத்துவ ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இந்த உலகில் தனது மகளின் உடல் ரீதியான பிரச்சனையை தீர்க்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலையில் இளம் பெண் எடுத்த முடிவை வேறு யாரும் சிந்திக்க கூட வேண்டாம் என சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464005


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி : இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Embed widget