மேலும் அறிய

பிள்ளைகளை கொன்று தாய் தற்கொலை.....பாச போராட்டத்தால் கரூரில் ஏற்பட்ட துயர சம்பவம்

மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். குழந்தைக்கு மூச்சு திணறல் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக பெற்றோர்கள் மனமுடைந்து உள்ளனர். 

கரூரில் நிஷாந்தி (30 வயது) என்ற பெண் தனது 4 வயது மகள் மற்றும் 2 வயது மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கெந்தப் பொடிக்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (35) - நிசாந்தி (30) தம்பதி. இவர்களது மகள் தியாழினி (வயது 4), மகன் பூபன் பார்க்கவன் (வயது 2). இவர்களது மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். குழந்தைக்கு மூச்சு திணறல் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக பெற்றோர் மனமுடைந்து உள்ளனர். 


பிள்ளைகளை கொன்று தாய் தற்கொலை.....பாச போராட்டத்தால் கரூரில் ஏற்பட்ட துயர சம்பவம்

இந்த நிலையில், காலை நிஷாந்தியின் கணவர் வெங்கடேசன் அவரது சகோதரர் குமார் ஆகிய இருவரும் ஈரோடு மாவட்டம், அரச்சலூரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்கு தயாரானார்கள். அப்போது நிஷாந்தனி மற்றும் அவரது குழந்தைகள் மூன்று பேரும் கோவிலுக்கு வரவில்லை எனவும் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணம் காட்டி வீட்டில் இருந்துள்ளார். கூட்டு குடும்பமாக இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.



பிள்ளைகளை கொன்று தாய் தற்கொலை.....பாச போராட்டத்தால் கரூரில் ஏற்பட்ட துயர சம்பவம்

இந்த நிலையில் அவர்கள் கோயிலுக்கு சென்ற பிறகு மாலை 4:00 மணியளவில் நிஷாந்தி தனது மகன் மற்றும் மகள் ஆகிய இருவரையும் தனது சேலையில் தூக்கிட்டு தொங்க வைத்து, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்கு முன்பாக, அக்கம் பக்கத்தினர் வெகு நேரம் கதவு சாத்தப்பட்டு இருப்பது கண்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இவர்கள் தூக்கில் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக வெங்கடேஷ் மற்றும் குமார் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். தகவல் கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்தனர். 

இந்த சம்பவம் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த நிஷாந்தி மற்றும் அவரது குழந்தைகள் ஆகிய மூன்று பேரின் உடல்களையும், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.


மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் தனது மகளையும், மகனையும் தான் கட்டிய சேலையால் தூக்கிலிட்ட பின்னர் தானும் மனம் உடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தாயின் தற்கொலை முடிவால் தற்போது அந்தப் பகுதியே கண்ணீர் கடலில் நீந்துகிறது. தனது மகளின் நோயை குணப்படுத்த முடியவில்லை என்ற சோகத்தில் தாய் எடுத்த விபரீத முடிவால் இளம் பெண்ணின் குடும்பத்தாரும் மனைவி இழந்து வாடும் கணவரின் குடும்பத்தாரும் துயரத்தில் உள்ளனர்.

தற்போது விஞ்ஞான உலகில் தீர்க்க முடியாத பிரச்சனைக்கும் மருத்துவ ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இந்த உலகில் தனது மகளின் உடல் ரீதியான பிரச்சனையை தீர்க்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலையில் இளம் பெண் எடுத்த முடிவை வேறு யாரும் சிந்திக்க கூட வேண்டாம் என சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464005


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

காதலனா? காசு? - இயக்குநரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற துணை நடிகை! முன்னாள் காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய வெறிச்செயல்!
காதலனா? காசு? - இயக்குநரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற துணை நடிகை! முன்னாள் காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய வெறிச்செயல்!
கூடுவாஞ்சேரியில் சோகம்: கொசுவத்தி சுருளால் சிதைந்த குடும்பம்! அதிர்ச்சியில் மக்கள், காரணம் என்ன?
கூடுவாஞ்சேரி சோகம்: கொசுவத்தி சுருளால் சிதைந்த குடும்பம்! அதிர்ச்சியில் மக்கள், காரணம் என்ன?
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
டிவியில் பிடித்த பாடலை போடாத கணவர்.. ஆத்திரத்தில் மனைவி விபரீத முடிவு: அதிர்ச்சியில் ஆத்தூர் - நடந்து என்ன?
டிவியில் பிடித்த பாடலை போடாத கணவர்.. ஆத்திரத்தில் மனைவி விபரீத முடிவு: அதிர்ச்சியில் ஆத்தூர் - நடந்து என்ன?
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Shortage: வெடித்த சிலிண்டர் பிரச்னை; இனி பதுக்க முடியாது.! அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு; அது என்ன.?
வெடித்த சிலிண்டர் பிரச்னை; இனி பதுக்க முடியாது.! அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு; அது என்ன.?
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Top 10 News Headlines: சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
Senthil Balaji: தப்பு தப்பா சொல்லாதீங்க..! சிபிஐ சம்மன், நான் ரெடியா இருக்கேன் - செந்தில் பாலாஜி விளக்கம்
Senthil Balaji: தப்பு தப்பா சொல்லாதீங்க..! சிபிஐ சம்மன், நான் ரெடியா இருக்கேன் - செந்தில் பாலாஜி விளக்கம்
Gold and silver rate today : திடீரென ரூ.10,000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஷாக்- ஒரு சவரன் எவ்வளவு.?
திடீரென ரூ.10,000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஷாக்- ஒரு சவரன் எவ்வளவு.?
Embed widget