மேலும் அறிய

Crime: கடன் உதவி தருவதாக கூறி பண மோசடி; கரூரில் 3 பேர் கைது

பணக்கட்டுகளில் மேல் பகுதியில் மட்டும் ஒரிஜினல் 500 நோட்டும், அடிப்பகுதியில் வெள்ளை தாள் இருந்ததை கண்டு அதிர்ச்சி.

கடன் உதவி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் காரும் பறிமுதல் செய்யப்பட்டன.


Crime: கடன் உதவி தருவதாக கூறி பண மோசடி; கரூரில் 3 பேர் கைது

கடன் உதவி தருவதாக ஏமாற்ற முயற்சி பொன்னம் சத்திரம் அருகே மூலமங்கலம் நாட்டுகல் மூன்றாவது வீதியைச் சேர்ந்தவர் வடிவேல் வயது 32, இவரை கரூர் காந்திகிராமம் மூன்றாவது கிராஸ் இந்திரா நகர் பகுதி சேர்ந்த ஜெயச்சந்திரன் 34, ராமேஸ்வரம்பட்டி புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்கின்ற சுந்தரமூர்த்தி, கரூர் வையாபுரி நகர் பகுதியில் சேர்ந்த கார் டிரைவர் பாலகிருஷ்ணன் 21 ஆகியோர் தொடர்பு  கொண்டு உங்களுக்கு கடன் உதவி செய்து வருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை தொடர்ந்து வடிவேல் கடன் பெற்றுக்கொள்ள சம்பாதித்தார்.  பின்னர் ஜெயச்சந்திரன் தலைமையிலான மூன்று பேரும் கரூர்- ஈரோடு செல்லும் சாலையில் உள்ள வேட்டமங்கலம் அருகே ஆசாரி பட்டறை பஸ் நிறுத்தம் அருகில் வரும்படி கூறியுள்ளனர். அப்போது மூன்று பேரும் காரில் வந்தனர், பின்னர் மூன்று பேரும் சேர்ந்து வடிவேல் இடம் கடன் பெறுவதற்கான ஆவணங்களை கொண்டு வருமாறு கேட்டுள்ளனர், வடிவேல் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

போலீஸ் நிலையத்தில் புகார் 


Crime: கடன் உதவி தருவதாக கூறி பண மோசடி; கரூரில் 3 பேர் கைது

அப்போது ஜெயச்சந்திரன் உட்பட மூன்று பேர் காரில் இருந்த பேக்கை எடுத்து அதில் இருந்த பணத்தை காண்பித்து டாக்குமெண்ட் கட்டணத்தை கேட்டுள்ளனர்.  பணக்கட்டுகளை பார்த்த வடிவேல் அவர்கள் காட்டிய பணக்கட்டுகளில் மேல் பகுதியில் மட்டும் ஒரிஜினல் 500 நோட்டும், அடிப்பகுதியில் வெள்ளை தாள் இருந்ததை பார்த்து தான் ஏமாற்றப்படுகிறோம் என்று சந்தேகப்பட்டு தான் வீட்டிற்கு சென்று பணம் எடுத்து வருவதாக தெரிவித்துவிட்டு வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு வந்து இது குறித்து புகார் செய்தார்.

 புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிவு செய்து, போலீசார் பொன்னர் சத்திரம் பகுதிக்கு சென்றனர். அங்கு அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது காருக்குள் ஜெயச்சந்திரன், கார் டிரைவர் பாலகிருஷ்ணன் சுந்தர் என்கின்ற சுந்தரமூர்த்தி ஆகிய மூன்று பேரும் இருந்தனர், காரை நிறுத்தியதும் சுந்தர் என்கின்ற சுந்தரமூர்த்தி தம்பி ஓடி விட்டார்


Crime: கடன் உதவி தருவதாக கூறி பண மோசடி; கரூரில் 3 பேர் கைது

பின்னர் கார் டிரைவர் பாலகிருஷ்ணன், ஜெயச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 500 ரூபாய் நோட்டுகள் 500 ரூபாய் நோட்டு போல உள்ள வெள்ளைத் தாள்கள், கார், பல்வேறு வங்கிகளின் ஏராளமான ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஏராளமான ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இரண்டு பேரும்  கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மூன்று பேர் கைது.
  
கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள  இடையப்பட்டி ஊரின் அருகே உள்ள வனப்பகுதியில்முன்தினம் இரவு துப்பாக்கிச் சூடும் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்ட வனச்சரக அலுவலர் தண்டபாணி மற்றும் வனவர்கள் இரவு நேரத்தில் துப்பாக்கி சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று பார்த்த பொழுது தலையில் பேட்டரி லைட் பொருந்திய நிலையில் கையில் துப்பாக்கியுடன் மூன்று பேர் சுற்றுத்திரிவதை பார்த்து உள்ளனர். 

இதை அடுத்து உடனடியாக அவர்களை வனச்சரக அலுவலர் மற்றும் வனக்காப்பாளர்கள் பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர்கள் கடவுள் அருகே உள்ள தேக்கமலை கோவில்பட்டியைச் சேர்ந்த சிவகுமார் 31, மகாமுனி 55, மாணிக்கம் 45. என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மூன்று பேரும் வனப்பகுதியில் உள்ள முயல் உடும்பு மற்றும் அவர்கள் கண்களுக்கு தெரியக்கூடிய வனவிலங்குகளை துப்பாக்கியால் சுட்டு பிடிக்க வந்தது தெரிய வந்துள்ளது. மூன்று பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த துப்பாக்கித் துப்பாக்கியில் சுடுவதற்கு பயன்படுத்தக்கூடிய கான்ட்ரஸ் குண்டுகள், பேட்டரி லைட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 மேலும் இது தொடர்பாக அந்த மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி  சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget