மேலும் அறிய

Crime: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி; தந்தை, மகள் உயிரிழப்பு - கரூரில் சோகம்

கரூரில் கணவன், மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்சனை ஏற்பட்டதாகவும், முகமது பரீத்  பெயர் தெரியாத விஷம் குடித்துவிட்டு  தனது மனைவிக்கும், மகளுக்கும் தெரியாமல் தண்ணீரில் கலந்து கொடுத்துள்ளார்.

கரூரில் குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் தந்தை முகமது பரீத் (46) மகள் ஜீகினாஜ் (17) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தாய் நஸ்ரின் பானு (39) மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Crime: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி; தந்தை, மகள் உயிரிழப்பு - கரூரில் சோகம்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் கிழக்கு, அமராவதி நகரை சேர்ந்தவர் முகமது பரீத் (46) கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நஸ்ரின் பானு (39), மகள் ஜுகினாஜ் (17) வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.


Crime: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி; தந்தை, மகள் உயிரிழப்பு - கரூரில் சோகம்

 

கணவன், மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்சனை (தற்பொழுது போக்குவரத்து நகரில் புதிதாக வாங்கிய வீட்டினால் ஏற்பட்ட கடன்) ஏற்பட்டதாகவும், இதனால் முகமது பரீத்  பெயர் தெரியாத விஷம் (சல்பாஸ் மாத்திரை என்கிறார்கள்) குடித்துவிட்டு தனது மனைவிக்கும், மகளுக்கும் தெரியாமல் தண்ணீரில் கலந்து கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் கேள்விப்பட்டு முகமது பரீத் அண்ணன் சாதிக் பாட்ஷா என்பவர் ஆட்டோ மூலம் 3 பேரையும் வடிவேல் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவி  சிகிச்சை பெற்ற பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை ராயல் கேர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். ஆனால், மகள் ஜுகினாஜ் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். 


Crime: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி; தந்தை, மகள் உயிரிழப்பு - கரூரில் சோகம்

 

மற்ற இருவரையும் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியில் முகமது பரீத் இறந்துவிட்டார். முகமது பரீத் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நஸ்ரின் பானு தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் உள்ளார்.

கரூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கூடுவாஞ்சேரியில் சோகம்: கொசுவத்தி சுருளால் சிதைந்த குடும்பம்! அதிர்ச்சியில் மக்கள், காரணம் என்ன?
கூடுவாஞ்சேரி சோகம்: கொசுவத்தி சுருளால் சிதைந்த குடும்பம்! அதிர்ச்சியில் மக்கள், காரணம் என்ன?
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
டிவியில் பிடித்த பாடலை போடாத கணவர்.. ஆத்திரத்தில் மனைவி விபரீத முடிவு: அதிர்ச்சியில் ஆத்தூர் - நடந்து என்ன?
டிவியில் பிடித்த பாடலை போடாத கணவர்.. ஆத்திரத்தில் மனைவி விபரீத முடிவு: அதிர்ச்சியில் ஆத்தூர் - நடந்து என்ன?
கணவனை கொன்று 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் மர்ம கும்பல் அட்டூழியம்!
கணவனை கொன்று 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் மர்ம கும்பல் அட்டூழியம்!
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cylinder Issue Hotels Closed: என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
Trump Furious Warning: “மரணம், நெருப்பு, ஆக்ரோஷம்.! 20 மடங்கு கடுமையா தாக்குவோம்“; ஈரானுக்கு ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை
“மரணம், நெருப்பு, ஆக்ரோஷம்.! 20 மடங்கு கடுமையா தாக்குவோம்“; ஈரானுக்கு ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை
Senthil Balaji: விஜயை விடுங்க..! சைலண்டா செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச் போடும் சிபிஐ - டீம் போட்டு ஆலோசனை
Senthil Balaji: விஜயை விடுங்க..! சைலண்டா செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச் போடும் சிபிஐ - டீம் போட்டு ஆலோசனை
TVK Vijay: விஜய்க்கு லீவு கொடுத்த சிபிஐ..! சாஃப்ட் டீலிங்கிற்கு ஒகே சொன்ன தவெக? டெல்லிக்கு முக்கிய கோரிக்கை
TVK Vijay: விஜய்க்கு லீவு கொடுத்த சிபிஐ..! சாஃப்ட் டீலிங்கிற்கு ஒகே சொன்ன தவெக? டெல்லிக்கு முக்கிய கோரிக்கை
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், விதிகள் என்ன? மத்திய அரசு அறிவிப்பு
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், விதிகள் என்ன? மத்திய அரசு அறிவிப்பு
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
Embed widget