மேலும் அறிய

லாரி மீது மோதி பற்றி எரிந்த பேருந்து..! 2 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு..! 12 பேர் படுகாயம்..!

கர்நாடகாவில் தனியார் பேருந்து விபத்திற்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தததில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கோவாவில் இருந்து தனியார் பேருந்து ஒன்று நேற்று நள்ளிரவு ஹைதராபாத்திற்கு புறப்பட்டுச் சென்றது. படுக்கை வசதிகளுடன் கூடிய அந்த பேருந்தில் சுமார் 35 பயணிகள் பயணித்தனர்.

இன்று காலை சுமார் 6.30 மணியளவில் பேருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி மாவட்டத்தில் கமலாபூர் தாலுகாவில் அமைந்துள்ள பிதார் – ஸ்ரீரங்கபட்டிணம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரியுடன் மோதியது. பயங்கர சத்தத்துடன் நடைபெற்ற இந்த விபத்தில் நிலைகுலைந்த பேருந்து பின்னர் அங்கே இருந்த பாலத்தில் மோதி அப்படியே நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது.



லாரி மீது மோதி பற்றி எரிந்த பேருந்து..! 2 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு..! 12 பேர் படுகாயம்..!

இதில், சில பயணிகள் தப்பித்தாலும் சில பயணிகள் பேருந்தின் உள்ளே சிக்கிக் கொண்டனர். சிலர் விபத்தில் அடிபட்டவுடன் மயங்கினர். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு முன்னரே பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மளமளவென பற்றி எரிந்து பேருந்து முழுவதையும் தீக்கிரைக்கியாக்கியது. இதில், பேருந்தின் உள்ளே சிக்கி 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்த தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். ஆனாலும், பேருந்து முழுவதும் கருகிவிட்டது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


லாரி மீது மோதி பற்றி எரிந்த பேருந்து..! 2 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு..! 12 பேர் படுகாயம்..!

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக, கர்நாடக போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்டு கோவாவில் வசித்து வரும் அர்ஜூன்குமார் என்பவரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக அவரது நண்பர்களும், உறவினர்களும் இந்த பேருந்தில் சென்றுவிட்டு திரும்பியதாக தெரியவந்துள்ளது. பேருந்து விபத்துக்குள்ளாகி ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த மாநிலத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மருத்துவமனையில் 12 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget