மேலும் அறிய

சிறையில் நண்பர்களாகிய இருவர்... வெளிவந்து கூட்டுசேர்ந்து செய்த செயலால் மீண்டும் கம்பி எண்ணும் நிலை..!

திங்கள்நகர் அருகே வழக்கு செலவுக்காக செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சிறை நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம்  திங்கள்நகர் அடுத்த தலக்குளம் புதுவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜம். இவர் கடந்த புதன்கிழமை இரவு வீட்டின் அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள்  வண்டியை நிறுத்தி ராஜத்திடம் வழி கேட்பது போல் பேசியுள்ளனர். அப்போது ராஜம் அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில் கண் இமைக்கும் நொடியில் அவர்  கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.  செய்வதறியாது நின்ற அவர் இது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின்  அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் குறித்து விசாரணை நடத்தி ஆய்வு செய்தனர். 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராஜத்திடம் வழிப்பறியில் ஈடுபட்டது தக்கலை பகுதியை சேர்ந்த ஜெகதீஷன் மற்றும் மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்த பெலிக்ஸ் ஆகிய இருவர் என்பது தெரியவந்தது. இதை அடுத்து தக்கலை அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருந்த இருவரையும் இரணியல் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து இரணியல் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை  நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. 

TN TRB Assistant Professor: ரூ.1.82 லட்சம் ஊதியம்; 4000 உதவிப் பேராசிரியர் இடங்கள்- தகுதி, வயது வரம்பு..!

குறிப்பாக ஜெகதீஷ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் இருந்துள்ளார். இந்த நிலையில் தான் சிறையில் இருக்கும் பொழுது பெலிக்ஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் நண்பர்களான நிலையில் கடந்த 15 நாட்கள் முன் சிறையில் இருந்து இருவரும் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். பின் இருவரும் கூட்டு சேர்ந்து வழக்கு செலவிற்கு பணம் இல்லாத காரணத்தினால் திட்டம் தீட்டி இந்த சம்பவத்தில் இறங்கியுள்ளனர். இதற்காக கடந்த 4 ஆம் தேதி இரணியல் பகுதியை சேர்ந்த அஜின் என்பவரது இருசக்கர வாகனத்தை திருடியுள்ளனர். அதை எடுத்துக் கொண்டு வரும் வழியில் ராஜத்திடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்ததுள்ளது.  இதை அடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறையில் நண்பர்களாகி ஜாமினில் வந்து வழக்கு செலவிற்காக இருசக்கர வாகன திருட்டு, வழிப்பறியில் போன்றவற்றில் ஈடுபட்டு இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைக்குள்ளே கம்பி எண்ணும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget