மேலும் அறிய

Crime: கன்னியாகுமரியில் மொட்டைமாடியில் ஒருவர் கொலை..! ஒருவர் கைது..! இருவர் சரண்.! காரணம் என்ன?

ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும் தக்கலை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை செய்யும் போது தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரிய வரும்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு அருகே அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (38). இவர் வெளிநாட்டில் பிளம்பராக பணியாற்றி வந்தார். ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற மகேஷ் கடந்த ஒரு வருடத்திற்கு முன் சொந்த ஊர் திரும்பியுள்ளதாக தெரிகிறது. வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் வரும் போது விமான நிலையத்தில் பழக்கமான சென்னையை சேர்ந்த சோபி என்பவரை கடந்த 5 மாதத்திற்கு முன் திருமணம் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் மனைவியை சென்னைக்கு அனுப்பி வைத்த மகேஷ் கடந்த ஞாயிற்றுகிழமை மதியம் வரை வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்று பார்த்த போது மகேஷ் வீட்டு மொட்டை மாடியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். 

தகவல் அறிந்து வந்த தக்கலை காவல்துறையினர் மகேஷ் சடலத்தை கைப்பற்றினர். சனிக்கிழமை இரவு வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கொலை செய்தவர்களை தேடி வந்த நிலையில் சம்பவம் நடந்த வீட்டிற்கு செல்லும் பாதையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சம்பவம் நடந்த அன்று இரவு 11 மணியளவில் 2- மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்வது பதிவாகியிருந்தது தெரியவந்தது.. இதன் அடிப்படையில் திருவிதாங்கோடை சேர்ந்த மெக்கானிக் பெனிட் கிளேஸ் (29), இவரது உறவினரான அதே ஊரை சேர்ந்த பிபின் ஜேக்கப் (23),  திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த டெறன்ஸ் (21) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் முதல் கட்ட விசாரணையில் முன்விரோதத்தில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து தலைமறைவாகியிருந்த குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய பிபின் ஜேக்கப் என்பவரை, இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் பள்ளியாடி ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட பிபின் ஜேக்கப்பை பத்மநாபபுரம் கோர்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.  இச்சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பெனிட் கிளேஸ் மற்றும் அவரது உறவினரான டெறன்ஸ் ஆகியோரை பிடித்தால் தான் முன்விரோதத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்பதால் அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில்  நேற்று அந்த இருவரும் பத்மநாபபுரம் கோர்டில் சரணடைந்தனர்.  இவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி பிரவின் ஜீவா, சரணடைந்த இருவரையும் 15 நாள்கள் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரையும் போலீஸ் அழைத்து சென்று நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும் தக்கலை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை செய்யும் போது தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரிய வரும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Congress Candidate List: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார்? எங்கு போட்டி? பரபரப்பு பட்டியல் இதோ!
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார்? எங்கு போட்டி? பரபரப்பு பட்டியல் இதோ!
TN Election 2026 Survey: திமுக கோட்டையைத் தக்கவைக்குமா? தவெகவுக்கு சர்ப்ரைஸ்- 3 சர்வே முடிவுகள் சொல்வது என்ன?
TN Election 2026 Survey: திமுக கோட்டையைத் தக்கவைக்குமா? தவெகவுக்கு சர்ப்ரைஸ்- 3 சர்வே முடிவுகள் சொல்வது என்ன?
Anbumani: விஜய்க்கு எதிராக இறங்கும் அன்புமணி! பெரம்பூரில் எப்போ பரப்புரை?
Anbumani: விஜய்க்கு எதிராக இறங்கும் அன்புமணி! பெரம்பூரில் எப்போ பரப்புரை?
Iran Hit List: பழிக்குப் பழி, பாலத்துக்கு பாலம்.! வளைகுடாவில் 8 டார்கெட்டுகளை அறிவித்த ஈரான்; உச்சகட்ட பதற்றம்
பழிக்குப் பழி, பாலத்துக்கு பாலம்.! வளைகுடாவில் 8 டார்கெட்டுகளை அறிவித்த ஈரான்; உச்சகட்ட பதற்றம்
Annamalai: தேர்தலில் சீட் இல்லை, கல்தா கொடுத்த கட்சி; பாஜக அண்ணாமலை பரபரப்பு ட்வீட்!
Annamalai: தேர்தலில் சீட் இல்லை, கல்தா கொடுத்த கட்சி; பாஜக அண்ணாமலை பரபரப்பு ட்வீட்!
BJP Candidate List: 27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு - யார்? எங்கு? போட்டி - அண்ணாமலை அவுட்
BJP Candidate List: 27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு - யார்? எங்கு? போட்டி - அண்ணாமலை அவுட்
மதுரை சித்திரைத் திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் & தேரோட்டம் தேதிகள் அறிவிப்பு!
மதுரை சித்திரைத் திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் & தேரோட்டம் தேதிகள் அறிவிப்பு!
BJP Candidate List: பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிர்ச்சி! அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு: அரசியல் நகர்வு என்ன?
பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிர்ச்சி! அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு: அரசியல் நகர்வு என்ன?
Embed widget