மேலும் அறிய

காஞ்சிபுரம்: டன் டன்னாக கடத்தப்படும் ரேஷன் அரிசிகள்.. என்ன நடக்கிறது? எப்படி நடக்கிறது?

தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை திருவேங்கையப்பன் நகர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் ரேஷன் அரிசி கொண்டு வந்து வைக்கப்படுவதாக, காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
 
அரிசி பறிமுதல்..
 
ரகசிய தகவலின் அடிப்படையில் அந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்து சோதனை செய்த போது காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் ரேஷன் கடைகளில், வாங்கும் அரிசியை கிலோ ஒன்றுக்கு ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கி வந்து வட மாநில தொழிலாளர்களுக்கும், டிபன் கடைகளுக்கு கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய ஏழு டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்து பதுக்கி இருப்பு வைத்திருப்பதை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த, காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த மாலிக் பாஷா, கிஷோர் ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

காஞ்சிபுரம்: டன் டன்னாக கடத்தப்படும் ரேஷன் அரிசிகள்.. என்ன நடக்கிறது? எப்படி நடக்கிறது?
 
மற்றொரு சம்பவம்
 
குடியாத்தத்தை அடுத்த வேப்பூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு வேனும், ஜல்லிக் கற்களை ஏற்றிச் சென்ற டிப்பா் லாரியும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டாசியா் என்.வெங்கட்ராமன் மற்றும் குடியாத்தம் நகரப் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தியபோது, சுமாா் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் அந்த வேனில் இருப்பது தெரிய வந்தது. வேன் ஓட்டுநரும் உடன் இருந்தவரும் தப்பியோடி விட்டனா். காயமடைந்த டிப்பா் லாரி ஓட்டுநா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
 
அரிசியை கடத்துவது ஏன் ?
 
தமிழகத்தில் நியாய விலை கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை சிலர் கள்ளச் சந்தையில் விற்று விடுவது வழக்கமாக உள்ளது. அதேபோல சில நேரங்களில் நியாய விலை கடையை சேர்ந்த ஊழியர்களும் , கள்ளச் சந்தையில் அரிசி விற்று வருவது, வாடிக்கையாக இருக்கிறது. இதுபோன்ற அரிசியை சில இடைத்தரகர்கள் குறிப்பிட்ட விலைக்கு பெற்று, அவற்றை தமிழகத்தில் இருக்கும் ஹோட்டல்கள் மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு குறிப்பிட்ட விலையில் விற்று வருவது தொடர் கரையாகியுள்ளது. இதேபோல தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இடைத்தரகர்கள் மூலம் அதிக அளவு ரேஷன் அரிசிகளை , ஆந்திர மாநிலத்தில் சேர்ந்த இடைத்தரகர்களுக்கு விற்று விடுகிறார்கள். 

காஞ்சிபுரம்: டன் டன்னாக கடத்தப்படும் ரேஷன் அரிசிகள்.. என்ன நடக்கிறது? எப்படி நடக்கிறது?
 
அவர்கள் அந்த அரிசியை பாலிஷ் செய்து, அரிசி தேவை இருக்கும் மாநிலங்களுக்கு விற்பதும் தொடர்கதை உள்ளது. இதுகுறித்து தமிழக அரசை தொடர்ந்து, கண்காணித்து நடவடிக்கை எடுத்து அவ்வப்பொழுது டன் கணக்கில் அரிசிகளை பறிமுதல் செய்தாலும், இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிற மாநிலங்களில் இருக்கும் அரிசி தேவையை, கருத்தில்கொண்டே இது போன்ற பெரிய குழுக்கள் செயல்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Pocso: நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
CM Vijay Bday: பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
TN Weather Update: மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
Embed widget