மேலும் அறிய

காஞ்சிபுரம்: டன் டன்னாக கடத்தப்படும் ரேஷன் அரிசிகள்.. என்ன நடக்கிறது? எப்படி நடக்கிறது?

தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை திருவேங்கையப்பன் நகர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் ரேஷன் அரிசி கொண்டு வந்து வைக்கப்படுவதாக, காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
 
அரிசி பறிமுதல்..
 
ரகசிய தகவலின் அடிப்படையில் அந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்து சோதனை செய்த போது காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் ரேஷன் கடைகளில், வாங்கும் அரிசியை கிலோ ஒன்றுக்கு ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கி வந்து வட மாநில தொழிலாளர்களுக்கும், டிபன் கடைகளுக்கு கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய ஏழு டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்து பதுக்கி இருப்பு வைத்திருப்பதை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த, காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த மாலிக் பாஷா, கிஷோர் ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

காஞ்சிபுரம்: டன் டன்னாக கடத்தப்படும் ரேஷன் அரிசிகள்.. என்ன நடக்கிறது? எப்படி நடக்கிறது?
 
மற்றொரு சம்பவம்
 
குடியாத்தத்தை அடுத்த வேப்பூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு வேனும், ஜல்லிக் கற்களை ஏற்றிச் சென்ற டிப்பா் லாரியும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டாசியா் என்.வெங்கட்ராமன் மற்றும் குடியாத்தம் நகரப் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தியபோது, சுமாா் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் அந்த வேனில் இருப்பது தெரிய வந்தது. வேன் ஓட்டுநரும் உடன் இருந்தவரும் தப்பியோடி விட்டனா். காயமடைந்த டிப்பா் லாரி ஓட்டுநா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
 
அரிசியை கடத்துவது ஏன் ?
 
தமிழகத்தில் நியாய விலை கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை சிலர் கள்ளச் சந்தையில் விற்று விடுவது வழக்கமாக உள்ளது. அதேபோல சில நேரங்களில் நியாய விலை கடையை சேர்ந்த ஊழியர்களும் , கள்ளச் சந்தையில் அரிசி விற்று வருவது, வாடிக்கையாக இருக்கிறது. இதுபோன்ற அரிசியை சில இடைத்தரகர்கள் குறிப்பிட்ட விலைக்கு பெற்று, அவற்றை தமிழகத்தில் இருக்கும் ஹோட்டல்கள் மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு குறிப்பிட்ட விலையில் விற்று வருவது தொடர் கரையாகியுள்ளது. இதேபோல தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இடைத்தரகர்கள் மூலம் அதிக அளவு ரேஷன் அரிசிகளை , ஆந்திர மாநிலத்தில் சேர்ந்த இடைத்தரகர்களுக்கு விற்று விடுகிறார்கள். 

காஞ்சிபுரம்: டன் டன்னாக கடத்தப்படும் ரேஷன் அரிசிகள்.. என்ன நடக்கிறது? எப்படி நடக்கிறது?
 
அவர்கள் அந்த அரிசியை பாலிஷ் செய்து, அரிசி தேவை இருக்கும் மாநிலங்களுக்கு விற்பதும் தொடர்கதை உள்ளது. இதுகுறித்து தமிழக அரசை தொடர்ந்து, கண்காணித்து நடவடிக்கை எடுத்து அவ்வப்பொழுது டன் கணக்கில் அரிசிகளை பறிமுதல் செய்தாலும், இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிற மாநிலங்களில் இருக்கும் அரிசி தேவையை, கருத்தில்கொண்டே இது போன்ற பெரிய குழுக்கள் செயல்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!
மயிலாடுதுறை கஞ்சா வேட்டை: பிடிபட்டது 50 கிலோதானா? காவல்துறை கணக்கில் முறைகேடா?
மயிலாடுதுறை கஞ்சா வேட்டை: பிடிபட்டது 50 கிலோதானா? காவல்துறை கணக்கில் முறைகேடா?
மயிலாடுதுறையில் இந்த ஆண்டில் மட்டும் 19 பேருக்கு நேர்ந்த கதி: காவல் துறையின் அதிரடி ரிப்போர்ட்!
மயிலாடுதுறையில் இந்த ஆண்டில் மட்டும் 19 பேருக்கு நேர்ந்த கதி: காவல் துறையின் அதிரடி ரிப்போர்ட்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget