மேலும் அறிய

காஞ்சிபுரம்: டன் டன்னாக கடத்தப்படும் ரேஷன் அரிசிகள்.. என்ன நடக்கிறது? எப்படி நடக்கிறது?

தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை திருவேங்கையப்பன் நகர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் ரேஷன் அரிசி கொண்டு வந்து வைக்கப்படுவதாக, காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
 
அரிசி பறிமுதல்..
 
ரகசிய தகவலின் அடிப்படையில் அந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்து சோதனை செய்த போது காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் ரேஷன் கடைகளில், வாங்கும் அரிசியை கிலோ ஒன்றுக்கு ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கி வந்து வட மாநில தொழிலாளர்களுக்கும், டிபன் கடைகளுக்கு கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய ஏழு டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்து பதுக்கி இருப்பு வைத்திருப்பதை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த, காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த மாலிக் பாஷா, கிஷோர் ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

காஞ்சிபுரம்: டன் டன்னாக கடத்தப்படும் ரேஷன் அரிசிகள்.. என்ன நடக்கிறது? எப்படி நடக்கிறது?
 
மற்றொரு சம்பவம்
 
குடியாத்தத்தை அடுத்த வேப்பூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு வேனும், ஜல்லிக் கற்களை ஏற்றிச் சென்ற டிப்பா் லாரியும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டாசியா் என்.வெங்கட்ராமன் மற்றும் குடியாத்தம் நகரப் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தியபோது, சுமாா் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் அந்த வேனில் இருப்பது தெரிய வந்தது. வேன் ஓட்டுநரும் உடன் இருந்தவரும் தப்பியோடி விட்டனா். காயமடைந்த டிப்பா் லாரி ஓட்டுநா் சிகிச்சை பெற்று வருகிறாா்.
 
அரிசியை கடத்துவது ஏன் ?
 
தமிழகத்தில் நியாய விலை கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை சிலர் கள்ளச் சந்தையில் விற்று விடுவது வழக்கமாக உள்ளது. அதேபோல சில நேரங்களில் நியாய விலை கடையை சேர்ந்த ஊழியர்களும் , கள்ளச் சந்தையில் அரிசி விற்று வருவது, வாடிக்கையாக இருக்கிறது. இதுபோன்ற அரிசியை சில இடைத்தரகர்கள் குறிப்பிட்ட விலைக்கு பெற்று, அவற்றை தமிழகத்தில் இருக்கும் ஹோட்டல்கள் மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு குறிப்பிட்ட விலையில் விற்று வருவது தொடர் கரையாகியுள்ளது. இதேபோல தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இடைத்தரகர்கள் மூலம் அதிக அளவு ரேஷன் அரிசிகளை , ஆந்திர மாநிலத்தில் சேர்ந்த இடைத்தரகர்களுக்கு விற்று விடுகிறார்கள். 

காஞ்சிபுரம்: டன் டன்னாக கடத்தப்படும் ரேஷன் அரிசிகள்.. என்ன நடக்கிறது? எப்படி நடக்கிறது?
 
அவர்கள் அந்த அரிசியை பாலிஷ் செய்து, அரிசி தேவை இருக்கும் மாநிலங்களுக்கு விற்பதும் தொடர்கதை உள்ளது. இதுகுறித்து தமிழக அரசை தொடர்ந்து, கண்காணித்து நடவடிக்கை எடுத்து அவ்வப்பொழுது டன் கணக்கில் அரிசிகளை பறிமுதல் செய்தாலும், இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிற மாநிலங்களில் இருக்கும் அரிசி தேவையை, கருத்தில்கொண்டே இது போன்ற பெரிய குழுக்கள் செயல்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
LIVE | Kerala Lottery Result Today (12.08.2026): தனலட்சுமி தேடி வருவாளா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (12.08.2026): தனலட்சுமி தேடி வருவாளா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
Embed widget