மேலும் அறிய

Live in Murder: தமிழ்நாட்டில் லிவ் - இன், காட்டில் படுகொலை - காதலியை வெட்டி 50 துண்டுகளாக்கிய கொடூர காதலன்

Live in Murder: லிவ் - இன் உறவில் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்னை 50 துண்டுகளாக வெட்டிக் கொன்ற இளைஞரை, ஜார்கண்ட் போலீசார் கைது செய்துள்ளனர்.

Live in Murder: தமிழ்நாட்டில் லிவ் - இன் உறவில் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்னை, ஜார்கண்ட் இளைஞர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலியை 50 துண்டுகளாக வெட்டிய காதலன்

பெண்களுக்கு வீடுகளிலும், நெருங்கிய உறவினர்களிடமிருந்தே அதிக ஆபத்துகள் நிகழ்வதாக, அண்மயில் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதை நிரூபிக்கும் விதமாக தான், ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் ஒரு கொடூர கொலை அரங்கேறியுள்ளது. வெளியாகியுள்ள தகவலின்படி,  கசாப்பு கடையில் கறி வெட்டும் பணி செய்து வந்த 25 வயது வந்த இளைஞர், லிவ்-இன் உறவில் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த இளம்பெண்ணை கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணின் உடலை 40 முதல் 50 துண்டுகளாக வெட்டியுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

பெண் கொல்லப்பட்ட சுமார் பதினைந்து நாட்களுக்குப் பிறகு, கடந்த 24ம் தேதியன்று ஜரியாகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட,  ஜோர்டாக் கிராமத்திற்கு அருகில் ஒரு தெரு நாய் மனித உடல் உறுப்புகளுடன் கண்டுபிடிக்கப்பட்டபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, விசாரணையின் முடிவில் அடையாளம் காணப்பட்ட குற்றவாளியான நரேஷ் பெங்கரா கைது செய்யப்பட்டுள்ளார்.

நடந்தது என்ன?

காவல்துறையின் விசாரணையின்படி, குந்தி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுடன் சேர்ந்து,  கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாட்டில் லிவ் - இன் முறையில் வசித்து வந்துள்ளார். சிறிது காலத்திற்கு முன்பு, மீண்டும் ஜார்கண்டிற்கு சென்ற நரேஷ், தனது காதலியிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து, மனைவியை ஊரிலேயே விட்டுவிட்டு மீண்டும் தமிழகத்திற்கு வந்து, தனது காதலியுடன் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார்.

அப்போது, நரேஷ் உடன் சேர்ந்து அவரது வீட்டில் வசிக்க காதலி வற்புறுத்த தொடங்கியுள்ளார். வேறு வழியின்றி சொந்த ஊருக்கு இருவரும் திரும்பினாலும், காதலியை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல நரேஷ் விரும்பவில்லை. இதையடுத்து, ஜோர்டாக் கிராமம் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, கழுத்தை நெறித்து கொன்று கொலை செய்துள்ளார். தொடர்ந்து பெண்ணின் உடலை 40 முதல் 50 துண்டுகளாக வெட்டி வீசியுள்ளார். காட்டு மிருகங்கள் உடல்பாகங்களை தின்றுவிடும் என நினைத்து அங்கிருந்து நரேஷ் தப்பிச் சென்று தனது மனைவியுடன் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார்” என காவல்துறை தெரிவித்துள்ளது.

குற்றவாளி சிக்கியது எப்படி?

இதனிடையே, கொல்லப்பட்ட இளம்பெண் தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டபோதே, தான் ரயில் ஏறிவிட்டதாகவும், தனது காதலனுடன் சேர்ந்து வாழ இருப்பதாகவும் தனது தாய்க்கு தகவல் தெரிவித்துள்ளார். அதேநேரம், உடல்பாகங்களை கைப்பற்றிய காவல்துறை, அந்த பெண்ணின் உடைமைகளையும் காட்டுப்பகுதியில் இருந்து கண்டெடுத்துள்ளனர். அதிலிருந்து கண்டெடுத்த ஆதார் அட்டையில் இருந்த பெண்ணின் முகவரியின் மூலம், அவரது தாயை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அவரும் கொல்லப்பட்டது தனது மகள் தான் என்பது உறுதி செய்ததோடு, நரேஷ் உடனான பழக்கம் தொடர்பாகவும் காவல்துறைக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை பிடித்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், காதலியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றதை நரேஷ் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

" கூடவே இருந்து இப்படி பண்ணிட்டாளே " தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு
ட்ரைவருடன் தீராக் காதல், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ், பாம்பை கொண்டு கணவருக்கு ஸ்கெட்ச் - மனைவி பலே ப்ளான்
ட்ரைவருடன் தீராக் காதல், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ், பாம்பை கொண்டு கணவருக்கு ஸ்கெட்ச் - மனைவி பலே ப்ளான்
" பெண் வங்கி மேலாளரை ஏமாற்றிய காவலர் " ஜெயிலுக்கு போறேன் , கல்யாணம் பண்ண மாட்டேன் - காவலர்
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Embed widget