மேலும் அறிய

ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய அத்தை மகனுக்கு 32 ஆண்டுகள் தண்டனை - பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு

கரூர் அருகே சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த ஜேசிபி ஆபரேட்டருக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு.

கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த மணச்சனப்பட்டியை சேர்ந்தவர் கலாராணி. இவரது மகள் இப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கடந்த 2018ம் ஆண்டு 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தொடர்ந்து 9ம் வகுப்பு படிக்க சிறுமியை அவரின் அத்தை வீடு அமைந்துள்ள புரசம்பட்டிக்கு அனுப்பி வைத்தனர் பெற்றோர். அங்கிருந்து திருச்சி மேலப்புதூரிலுள்ள பள்ளியில் 9ம் வகுப்பு சேர்ந்து படித்து வந்துள்ளார்.

 


ஆசை வார்த்தை கூறி  ஏமாற்றிய அத்தை மகனுக்கு 32 ஆண்டுகள்  தண்டனை - பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு

சிறுமியின் அத்தை மகனும், ஜேசிபி ஆபரேட்டருமான சேகர், 15.01.2018 அன்று சிறுமியின் பிறந்த நாளை முன்னிட்டு பரிசுப் பொருட்கள் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, திருச்சி அழைத்துச் சென்று பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். பிறகு புரசம்பட்டிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

 


ஆசை வார்த்தை கூறி  ஏமாற்றிய அத்தை மகனுக்கு 32 ஆண்டுகள்  தண்டனை - பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு

பின்னர், சேகர் வேலைக்காக மலேசியா செல்ல இருப்பதாக சிறுமியிடம் கூறியுள்ளார். ஆனால், சிறுமி அங்கு வேலைக்கு சென்று வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டால் நான் என்ன செய்வது என கேட்டதற்காக, கடந்த 02.04.2018 அன்று காலை 11 மணியளவில் சின்னப்பனையூரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கடத்திச் சென்று 13 வயதே நிரம்பிய சிறுமியை குழந்தை திருமணம் செய்துள்ளார்.

 


ஆசை வார்த்தை கூறி  ஏமாற்றிய அத்தை மகனுக்கு 32 ஆண்டுகள்  தண்டனை - பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு

 

அதன் பிறகு, சிறுமியிடம்  திருமண வயது வந்தவுடன் வீட்டில் சொல்லிக் கொள்ளலாம் எனக் கூறி கட்டிய தாலியை கழட்டி வாங்கி வைத்துக் கொண்டார். மலேசியா சென்று விட்டு கடந்த 2020 அன்று ஊர் திரும்பிய சேகர், சிறுமியிடம் நான் தான் உன்னை திருமணம் செய்து கொண்டேனே எனக் கூறி கட்டாயபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்பு, ஈரோட்டிற்கு வேலைக்காக செல்வதாக கூறி சிறுமியை  கடந்த 10.11.2021 அன்று அவரது அம்மா வீட்டில் விட்டு விட்டு சென்று உள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11.11.2021 அன்று சேகர், மீலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 


ஆசை வார்த்தை கூறி  ஏமாற்றிய அத்தை மகனுக்கு 32 ஆண்டுகள்  தண்டனை - பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு

இந்த தகவல் சிறுமிக்கு 17.11.2021 தெரிய வந்துள்ளதை அடுத்து, சேகர் திருமணம் செய்து கொண்டது, பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக தன் தாயிடம் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து சிறுமியின் தாய் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சேகர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

 


ஆசை வார்த்தை கூறி  ஏமாற்றிய அத்தை மகனுக்கு 32 ஆண்டுகள்  தண்டனை - பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு

இதுதொடர்பான வழக்கு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி நசீமா பானு, போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், கடத்திக் கொண்டு போய் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தை திருமணம் செய்து கொண்டதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்சம் நிவாரண நிதி அரசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார். இதனை தொடர்ந்து  சேகரை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Embed widget