மேலும் அறிய

Sathankulam murder : சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு.. முக்கிய சாட்சியான அரசு மருத்துவர் சாட்சியம்.. சொன்னது என்ன?

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் முக்கிய சாட்சியான அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மகன் கொலை வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் போலீசார் அழைத்து சென்றனர். சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர்கள் முருகன், முத்துமுருகன் உள்பட 9 போலீஸ்காரர்கள் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி பத்மநாபன் முன்பு விசாரணைக்கு வந்தது.


Sathankulam murder : சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு.. முக்கிய சாட்சியான அரசு மருத்துவர் சாட்சியம்.. சொன்னது என்ன?

அப்போது சாட்சியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன் ஆஜராகி, சாட்சியம் அளித்தார். அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. எதிர்தரப்பினரும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.  பின்னர் இந்த வழக்கு விசாரணை வருகிற 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த இரட்டைக்கொலை வழக்கு விசாரணையில் முக்கிய சாட்சியாக அரசு டாக்டர் பாலசுப்பிரமணியன் கருதப்படுகிறார். அவர் கோர்ட்டில் ஆஜராகி கூறியிருப்பதாவது, படுகாயங்களுடன் ஜெயராஜும், பென்னிக்சும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்தேன். அப்போது இந்த காயங்கள் ஏற்பட்டது எப்படி என்று கேட்டோம்.


Sathankulam murder : சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு.. முக்கிய சாட்சியான அரசு மருத்துவர் சாட்சியம்.. சொன்னது என்ன?

அதற்கு அவர்கள் இருவரும், சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் வைத்து எங்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கினர். இதில் நாங்கள் இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளோம். போலீசாரின் தாக்குதலால்தான் இந்தநிலைக்கு ஆளாகியுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்ததாக டாக்டர் பாலசுப்பிரமணியன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அடுத்ததாக வருகிற 5-ந் தேதி அதே மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்சு புகழ்வாசுகி என்பவர் சாட்சியம் அளிக்கிறார். இதற்கிடையே ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கனவே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார். ஆனால் அவரும் இந்த இரட்டைக்கொலை வழக்கில் குற்றவாளி ஆவார். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் தாக்கப்பட்ட சம்பவத்தில் ரவிச்சந்திரனுக்கும் தொடர்பு உள்ளது. எனவே அவரையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்த்து உரிய விசாரணையை நடத்த வேண்டும் என்று இந்த இரட்டைக்கொலை வழக்கில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ள தலைமைக்காவலர் முருகன் என்பவர் மனு தாக்கல் செய்து உள்ளார்.

தலைப்பு செய்திகள்

சோழபுரத்தில் அதிரடி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ புகையிலைப் பொருட்கள் குழிதோண்டி அழிப்பு
சோழபுரத்தில் அதிரடி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ புகையிலைப் பொருட்கள் குழிதோண்டி அழிப்பு
கள்ளக் காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறு ; 2 - வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்
கள்ளக் காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறு ; 2 - வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்
" கணவரைப் பற்றி பேசனும் " தனியாக வரவழைத்து அத்துமீறல் - சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் அதிரடி கைது
Pune Murder Case: புனே கொடூரம்: ஹுடியால் சிக்கிக் கொண்ட கொலையாளி? 20 வயது பெண்ணின் கொடூர ஸ்கெட்ச்!
Pune Murder Case: புனே கொடூரம்: ஹுடியால் சிக்கிக் கொண்ட கொலையாளி? 20 வயது பெண்ணின் கொடூர ஸ்கெட்ச்!

வீடியோ

CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK EV VELU FIR CASE : எ.வ.வேலு மீது வழக்கு பதிவு.! லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை ஏன்.? FIR- யில் வெளியான ஷாக் தகவல்கள்
எ.வ.வேலு மீது வழக்கு பதிவு.! லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை ஏன்.? FIR- யில் வெளியான ஷாக் தகவல்கள்
மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல நாங்க.. இதைவிடப் பெரிய அடக்குமுறை பார்த்தவங்க- சீறிய ஸ்டாலின்
மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல நாங்க.. இதைவிடப் பெரிய அடக்குமுறை பார்த்தவங்க- சீறிய ஸ்டாலின்
DVAC Raid: ஸ்டாலினின் தளபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - 13 இடங்கள், தவெக அரசின் முதல் அதிரடி
ஸ்டாலினின் தளபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - 13 இடங்கள், தவெக அரசின் முதல் அதிரடி
DMK BJP: திமுகவை சூப்பர் என பாராட்டி ஆந்திராவில் இருந்து தூது..! NDAவில் இணைக்க பாஜக போடும் கணக்கு
திமுகவை சூப்பர் என பாராட்டி ஆந்திராவில் இருந்து தூது..! NDAவில் இணைக்க பாஜக போடும் கணக்கு
TN Govt: ஷாக் அடிக்குமா மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை? டார்கெட் செந்தில் பாலாஜி? TVK அரசிடம் சிக்குவது யார்?
ஷாக் அடிக்குமா மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை? டார்கெட் செந்தில் பாலாஜி? TVK அரசிடம் சிக்குவது யார்?
Swift CNG: ரூ.9000 பட்ஜெட்டில் 33KM மைலேஜ் ப்ரீமியம் ஹேட்ச்பேக்.. அசத்தலான பாதுகாப்பு, முழு EMI விவரங்கள்
ரூ.9000 பட்ஜெட்டில் 33KM மைலேஜ் ப்ரீமியம் ஹேட்ச்பேக்.. அசத்தலான பாதுகாப்பு, முழு EMI விவரங்கள்
MK Stalin: உசுப்பேற்றிய விஜய்.. கொதித்த திமுகவினர்.. மீண்டும் சட்டமன்றம் வரும் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: உசுப்பேற்றிய விஜய்.. கொதித்த திமுகவினர்.. மீண்டும் சட்டமன்றம் வரும் மு.க.ஸ்டாலின்!
TVK IT Wing: வாயைத் திறந்தாலே பால்டாயில் வாடை.. உதயநிதியை மீண்டும் வம்பிழுத்த தவெக!
TVK IT Wing: வாயைத் திறந்தாலே பால்டாயில் வாடை.. உதயநிதியை மீண்டும் வம்பிழுத்த தவெக!
Embed widget