Crime: உடலுறவுக்கு சம்மதிக்காத மனைவி..! கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்..! உ.பி.யில் கொடூரம்...
முதல் வழக்கில், உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது நபர் தனது மனைவியைக் கொன்றுள்ளார்.

இரண்டு வெவ்வேறு வினோதமான சம்பவங்களில், ஒரு நபர் தனது மனைவியைக் கொன்றுள்ளார், அதே நேரத்தில் ஒரு பெண் தனது துணையை டேட்டிங் செய்யும் போது கத்தியால் குத்தியுள்ளார். முதல் வழக்கில், உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது நபர் தனது மனைவி, இரவில் இரண்டு முறை உடலுறவு கொள்ள மறுத்ததால் கழுத்தை நெரித்து கொன்றார்.மற்றொரு சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. இருவரும் சண்டையிட்ட பிறகு அந்தப் பெண் அவரைக் கத்தியால் குத்தியுள்ளார்.
உடலுறவுக்கு சம்மதிக்காத மனைவி கொலை:
குற்றம் சாட்டப்பட்ட முகமது அன்வர், காவல்துறையிடம் வீடியோ அறிக்கை மூலம் குற்றத்தைச் செய்ததை ஒப்புக்கொண்டார். பத்திரிகையில் வெளியான செய்தியின்படி, திங்களன்று அன்வர் தனது மனைவியை உடலுறவு கொள்ள எழுப்பினார். சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் மனைவியை உடலுறவுக்கு அழைக்க அவரது மனைவி மறுத்துவிட்டார்.
அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர், கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் அன்வர் அவரது உடலை மூட்டை கட்டி தனது வீட்டில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் வீசியுள்ளார். பின்னர், தனக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் மனைவி காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார்
இந்த நிலையில், தகுர்த்வாராவில் உள்ள ரதுபுரா கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் இருந்து போலீஸார் அவரது மனைவியின் சடலத்தைக் கண்டெடுத்தனர். தாகுர்த்வாரா காவல் நிலையத்தில் கொலைக்கான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு, போலீசார் உடலின் படங்களை மற்ற காவல் நிலையங்களில் பகிர்ந்து கொண்டனர். விவரங்கள் பொருந்தியபோது, அம்ரோஹாவில் காணாமல் போன புகாருடன், மொராதாபாத் போலீசார் அடையாளம் காண உடனே அன்வரை அழைத்தனர். விசாரணையில் கொலையை அவர் ஒப்புக்கொண்டார்.
தனது பார்ட்னரைக் கொன்ற பெண்
ஒரு நபர் தனது காதலரைக் கையில் இருந்த சிறிய கத்தியால் குத்தியதால் கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டது. புதன்கிழமை இரவு அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். இருப்பினும் அந்த நபர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இருவரும் ஆறு மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் செவ்வாயன்று தனது பிறந்தநாளைக் கொண்டாட சந்திக்க திட்டமிட்டிருந்தனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, அந்த நபர் சரியான நேரத்தில் வரவில்லை, தாமதமாக அவர் வந்து பெண்ணை பிறந்தநாள் கொண்டாட அழைத்திருக்கிறார். ஆனால் அவர் போக மறுத்துவிட்டார்.
காதலன் குடிபோதையில் இருந்ததால் தகராறில் ஈடுபட்ட பெண்ணை அறைந்ததாக தெரிகிறது.இதனால் கோபமடைந்த அந்தப் பெண் கையில் இருந்த கத்தியால் குத்தியதை அடுத்து அந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















