மேலும் அறிய

மதுரை : ”ஆசிர்வாதம் வாங்கலாம் வா” : கர்ப்பிணி மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் தீவிர விசாரணை !

ஜோதிமணி கொலையை தனியாளாக செய்தாரா? இல்லை நண்பர்களுடன் இணைந்து கொலையை செய்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

திருமணமாகி மூன்றாவது நாளிலேயே கர்ப்பிணி புதுப்பெண் எரித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் கணவர் கைது செய்யப்பட்டார்.
 
மதுரை சோழவந்தானை அடுத்த ராயபுரதைச் சேர்ந்தவர்கள் சகாயராஜ் - செல்வமேரி தம்பதி. இவர்களது மகள் கிளாடிஸ் ராணி வயது (21) என்பவர் மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரி அருகே உள்ள வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த ஜோதிமணி வயது 23 என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. தோழிகள் சிலர் கண்டித்தும் கிளாடிஸ் ராணி கேட்கவில்லை என சொல்லப்படுகிறது. கிளாடிஸ் ராணி - ஜோதிமணி காதல் ஒரு கட்டத்திற்கு மேல் எல்லை மீற கிளாடிஸ் ராணி, 5 மாதம் கருவுற்றிருக்கும் தகவல் அவரின் வீட்டுக்குத் தெரியவந்துள்ளது. 

மதுரை : ”ஆசிர்வாதம் வாங்கலாம் வா” : கர்ப்பிணி மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் தீவிர விசாரணை !
அப்போது கிளாடிஸ் ராணி, பெரியார் நகரை சேர்ந்த ஜோதிமணி என்பவர்தான் தனது காதலர் எனவும், குழந்தையின் தந்தை எனவும் உண்மையை உடைத்துள்ளார். கிளாடிஸ் ராணியின் பெற்றோர் அவரது காதலன் ஜோதிமணியை  அழைத்துப் பேசியுள்ளனர். அப்போது ஜோதிமணி ’கர்ப்பத்திற்கு காரணம் நான் இல்லை’ என கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து ஜோதிமணியை கண்டித்து, ஜோதிமணியின் பெற்றோருக்கு தெரியாமல் இருவருக்கும் கடந்த ஆகஸ்ட் 2- ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர் கிளாடிஸின் பெற்றோர்.  இதனை தொடர்ந்து ஜோதிமணி வைக்கம் பெரியார் நகரில் உள்ள  அவரது வீட்டிற்கு, ’ஆசிர்வாதம் வாங்கலாம் வா’ என அழைத்து செல்வதாக கடந்த 4- ம் தேதி கிளாடிஸ் ராணியை அழைத்துச் சென்று அவனியாபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் உள்ள முட்புதரில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார். 

மதுரை : ”ஆசிர்வாதம் வாங்கலாம் வா” : கர்ப்பிணி மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் தீவிர விசாரணை !
இதைத்தொடர்ந்து, ஜோதிமணி மனைவியை காணவில்லை என பெண்ணின் பெற்றோரிடம் கூறியதைத் தொடர்ந்து சோழவந்தான் காவல் நிலையத்தில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஜோதிமணியிடம் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவனியாபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கிளாடிஸ் ராணியை எரித்துக்கொலை செய்ததாக கணவர் ஜோதிமணி ஒப்புக்கொண்டார்.எனவே சம்பவ இடத்திற்கு சென்ற சோழவந்தான் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஜோதிமணியின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

மதுரை : ”ஆசிர்வாதம் வாங்கலாம் வா” : கர்ப்பிணி மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தில் தீவிர விசாரணை !
 
ஜோதிமணி கொலையை தனியாளாக செய்தாரா இல்லை நண்பர்களுடன் இணைந்து கொலையை செய்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தலைப்பு செய்திகள்

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
Embed widget