மேலும் அறிய

“வீடும் வேண்டாம்; சொத்தும் வேண்டாம்” - கடிதம் எழுதி வைத்துவிட்டு குடும்பத்துடன் ஆன்மீக பயணம்? போலீஸ் விசாரணை!

"எங்களை யாரும் தேட வேண்டாம் என டைரியில் எழுதியுள்ளது"

ஹீலிங் செய்வது
 
செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் ராதாநகர் 3வதுதெரு பகுதியில் வசித்து வருபவர், குணசேகரன்(40). இவர் திருச்சியை பூர்வீகமாக கொண்டவர். இவருக்கும் கடலூரை சேர்ந்த வசுமதி என்பவருக்கும் (33) திருமணமாகி இவர்களுக்கு அஜீத்குமார்(13) மித்தேஷ் (10) என இரண்டு மகன்களும் உள்ளனர்.  குணசேகரன் ஆன்லைனின் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வசுமதியின் தாய் தந்தை இறந்துவிட்டனர். வசுமதி ஒரே மகள் உடன்பிறந்தவர்கள் யாருமில்லை. அதனால் சில மாதங்களாக ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட வசுமதி ( ஹீலிங் செய்வது ) எப்போதும் ஆன்மீக சிந்தனையிலேயே இருந்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து கணவரையும் இரண்டு மகன்களையும், தன் வழிக்கு கொண்டு வந்துவிட்டார்.

“வீடும் வேண்டாம்; சொத்தும் வேண்டாம்” - கடிதம் எழுதி வைத்துவிட்டு குடும்பத்துடன் ஆன்மீக பயணம்? போலீஸ் விசாரணை!
வீட்டை பூட்டாமல் கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள்
இதற்கிடையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டாமல் கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் அனைத்து பொருட்களையும் அப்படியே விட்டு விட்டு நடந்தே எங்கோ சென்றுவிட்டனர். அக்கம்பக்கத்தினர் வெளியில் சென்ற குணசேகரன் குடும்பத்தினர் திரும்ப வரவில்லை. வீடு திறந்தபடியே உள்ளது என செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில் குணசேகரன் வீட்டுக்கு சென்ற தாலுகாபோலீசார் வீட்டை பூட்டி சாவியை எடுத்து சென்றுவிட்டனர். குணசேகரனின் சகோதரர் தொடர்ந்து குணசேகரன் மற்றும் அவரது மனைவிக்கு போன் பண்ணியும் எடுக்காததால் திம்மாவரத்தில் குணசேகரன் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீடு பூட்டியிருந்தது.

“வீடும் வேண்டாம்; சொத்தும் வேண்டாம்” - கடிதம் எழுதி வைத்துவிட்டு குடும்பத்துடன் ஆன்மீக பயணம்? போலீஸ் விசாரணை!
இனி எங்களுக்கு வீடு சொத்து ஆசை
 
அக்கம்பக்கத்தினர் நடந்த விஷயத்தை சொல்லியுள்ளனர். அதனை தொடர்ந்து தாலுகா போலீசார் முன்னிலையில் குணசேகரன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ஒரு டைரியில் வசுமதி கடிதம் எழுதி வைத்துள்ளது கிடைத்துள்ளது.
 
அதில் " இனி எங்களுக்கு வீடு, சொத்து ஆசை பாசம் "  என எதுவும் வேண்டாம்.  ஆகையால் எங்களது இந்த வீடு கார் இருசக்கர வாகனம் என எங்களது அசையும் அசையா சொத்துக்களை அப்படியே விட்டு விட்டு நான் என் கணவர் மற்றும் எனது இரண்டு மகன்கள் ஆகிய நான்கு பேரும் குடும்பத்தோடு செல்கிறோம். கோயில் கோயிலாக சென்று மக்களிடம் காசு பணம் வாங்காமல், அருள்வாக்கு சொல்லி கோய்ல்களில் வழங்கும் பிரசாதத்தை சாப்பிட்டு அப்படியே எங்களுடைய வாழ்க்கையை நடத்த முடிவு செய்து சொத்துபத்துகளை விட்டு விட்டு நடைபயணமாக செல்கிறோம்.
 
எங்களை யாரும் தேட வேண்டாம்
 
எங்களை யாரும் தேட வேண்டாம்” என டைரியில் எழுதியுள்ளது. குணசேகரனின் குடும்பத்தை கண்டுபிடித்து தருமாறு சகோதரர் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நன்றாக வாழ்ந்துவந்த குடும்பம் ஆசாபாசத்நை துறந்து ஆன்மீகத்தை தேடி சென்ற சம்பவம் அப்பகுதியில், பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget