மேலும் அறிய

வேலை போச்சு.. அம்மா இறந்துட்டாங்க.. ஆத்திரத்தில் முன்னாள் மனைவியை கொலை செய்த கணவன்!

இருவரும் மகிழ்ச்சியாக தங்கள் வாழ்க்கையை தொடங்கலாம் என நினைக்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட தொடங்கியது. இதனால் அந்த பெண் இந்த பிரச்னையை சரி செய்ய இந்தியாவுக்கு திரும்பினர். 

தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் இளம்பெண் ஒருவரை முன்னாள் கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏன் இந்த கொலை நடந்தது என்பது பற்றிப் பார்க்கலாம். 

குற்றம் சாட்டப்பட்ட நபரும், கொலை செய்யப்பட்ட ஐடியில் பணியாற்றும்  அந்த பெண்ணும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியாக இவர்களின் திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் அந்த நபர் தனது மனைவியை அழைத்துக் கொண்டு கனடாவுக்கு சென்றார். இருவரும் மகிழ்ச்சியாக தங்கள் வாழ்க்கையை தொடங்கலாம் என நினைக்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட தொடங்கியது. இதனால் அந்த பெண் இந்த பிரச்னையை சரி செய்ய இந்தியாவுக்கு திரும்பினர். 

இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்படாத நிலையில் மகாராஷ்ட்ராவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர். இவர்களுக்கு 2024ம் ஆண்டு விவாகரத்து கிடைத்தது. அதன்பின் அந்த பெண் 2025ம் ஆண்டு மறுமணம் செய்துக் கொண்டார். இதற்கிடையில்2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த நபரின் தாயார் உயிரிழந்தார். இதற்காக அவர் கனடாவில் இருந்து இந்தியா திரும்பினார்.

ஆனால் விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கில் அந்த நபருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் வெளிநாடு செல்வதில் சிக்கல் எழுந்தது. அவரால் கனடா திரும்ப முடியாமல் போனதால் வேலையும் பறிபோனது. இதன் காரணமாக தெலுங்கானாவின் பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் அந்த நபர் வசித்து வந்தார். 

இதற்கிடையில் தன்னுடைய வேலை பறிபோனதற்கும், கனடா போக முடியாமல் சென்ற காரணத்திற்கும், தன் தாயார் மன உளைச்சலால் உயிரிழந்ததற்கும் அந்த பெண் தான் காரணம் என இந்த நபர் நம்பினார். இதனால் கடும் கோபம் கொண்ட அவர் தனது முன்னாள் மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார். அவரை சமூக வலைத்தளங்கள் வாயிலாக பின் தொடர்ந்து வீட்டு முகவரியை கண்டுபிடித்தார்.  இரண்டு மாதங்களுக்கு முன் ஹைதராபாத் வந்த அந்த நபர் அங்கிருந்த மேன்ஷன் ஒன்றில் தங்கியிருந்தார். இந்த நேரத்தில் அந்த பெண் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியதை அறிந்த நபர் நேராக திட்டமிட்டபடி அங்கு சென்றார்.

இரண்டு கத்திகள், ஒரு துளையிடும் இயந்திரம் மற்றும் ஐந்து லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்ட ஒரு கேனுடன் சென்ற  அந்த நபர் அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து அவரை ஒரு அறைக்குள் அடைத்து தள்ளி கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அப்பெண் அங்கேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் நடைபெற்றபோது அந்த பெண்ணின் மாமியார் பால்கனியில் இருந்தார். மருமகள் அலறல் சத்தம் கேட்டு வந்த அவர் அறைக்கதவை தட்டிய நிலையில் அந்த நபர் திறக்கவில்லை. உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் அந்த நபர் அந்த அறை முழுவதும் பெட்ரோல் ஊற்றி பாத்ரூமிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். கதவை உடைத்து வந்தால் தீ பற்ற வைப்பேன் என மிரட்டினார்.ஒருவழியாக போலீசார் அந்த அறைக்கதவை உடைத்து அந்த நபரை கைது செய்தனர்.

 

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget