மேலும் அறிய

9 வயது சிறுவன் கழிவறையில் தற்கொலை: சீருடை கேலி காரணமா? அதிர்ச்சியில் குடும்பம்

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் பள்ளியில் சீருடை சரியாக அணியாததால் கேலி செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஹைதராபாத்: சீருடை சரியாக அணியாததால் பள்ளியில் கேலி செய்யப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான ஒன்பது வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் ஹைதராபாத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சந்தாநகரைச் சேர்ந்த 4 ஆம் வகுப்பு மாணவன் பிரசாந்த் செவ்வாய்க்கிழமை (நேற்று) மாலை தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பிரசாந்த் பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் வருத்தமாக இருந்துள்ளார். சம்பவம் நடந்த நேரத்தில், அவர் வீட்டில் தனியாக இருந்தார்.  அவர், குளியலறைக்குள் சென்று தனது பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், குடும்ப உறுப்பினர்கள் கவலையடைந்து கதவைத் தட்டினர். எந்த பதிலும் கிடைக்காததால், அவர்கள் கதவை உடைத்துக்கொண்டு பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதிர்ச்சியில் குடும்பம்

பிரசாந்தின் தந்தை சங்கர், குடும்பம் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப் பணிபுரிகிறார், தனது மகன் வழக்கமாக மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பான், முன்பு எந்த மன அழுத்த அறிகுறிகளும் காணப்படவில்லை. பிரசாந்த் படித்த அதே பள்ளியில் சங்கர் முன்பு ஓட்டுநராகப் பணிபுரிந்தார். இந்தக் குடும்பம் முதலில் மேடக் மாவட்டத்தில் உள்ள கோத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தது. சங்கர் மற்றும் அவரது மனைவி பார்வதிக்கு பிறந்த  மகன்களில் பிரசாந்த் இளையவர்.சம்பவம் நடந்த நேரத்தில் பிரசாந்தின் தாயார் வீட்டில் இல்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்களின் வாக்குமூலங்கள் மூலம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

சீரூடை பற்றி கேலி செய்தார்களா?

பிரசாந்தின் பள்ளிச் சீருடையைப் பற்றி வகுப்புத் தோழர்கள் அவரை கேலி செய்தார்களா அல்லது அன்று பள்ளியில் அவர் கண்டிக்கப்பட்டாரா, அதுவே அவரது மன உளைச்சலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். சைபராபாத் கமிஷனரேட்டின் கீழ் உள்ள சந்தாநகர் காவல் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் மரணம் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget