மேலும் அறிய

9 வயது சிறுவன் கழிவறையில் தற்கொலை: சீருடை கேலி காரணமா? அதிர்ச்சியில் குடும்பம்

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் பள்ளியில் சீருடை சரியாக அணியாததால் கேலி செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஹைதராபாத்: சீருடை சரியாக அணியாததால் பள்ளியில் கேலி செய்யப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான ஒன்பது வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் ஹைதராபாத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சந்தாநகரைச் சேர்ந்த 4 ஆம் வகுப்பு மாணவன் பிரசாந்த் செவ்வாய்க்கிழமை (நேற்று) மாலை தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பிரசாந்த் பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் வருத்தமாக இருந்துள்ளார். சம்பவம் நடந்த நேரத்தில், அவர் வீட்டில் தனியாக இருந்தார்.  அவர், குளியலறைக்குள் சென்று தனது பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், குடும்ப உறுப்பினர்கள் கவலையடைந்து கதவைத் தட்டினர். எந்த பதிலும் கிடைக்காததால், அவர்கள் கதவை உடைத்துக்கொண்டு பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதிர்ச்சியில் குடும்பம்

பிரசாந்தின் தந்தை சங்கர், குடும்பம் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப் பணிபுரிகிறார், தனது மகன் வழக்கமாக மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பான், முன்பு எந்த மன அழுத்த அறிகுறிகளும் காணப்படவில்லை. பிரசாந்த் படித்த அதே பள்ளியில் சங்கர் முன்பு ஓட்டுநராகப் பணிபுரிந்தார். இந்தக் குடும்பம் முதலில் மேடக் மாவட்டத்தில் உள்ள கோத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தது. சங்கர் மற்றும் அவரது மனைவி பார்வதிக்கு பிறந்த  மகன்களில் பிரசாந்த் இளையவர்.சம்பவம் நடந்த நேரத்தில் பிரசாந்தின் தாயார் வீட்டில் இல்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்களின் வாக்குமூலங்கள் மூலம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

சீரூடை பற்றி கேலி செய்தார்களா?

பிரசாந்தின் பள்ளிச் சீருடையைப் பற்றி வகுப்புத் தோழர்கள் அவரை கேலி செய்தார்களா அல்லது அன்று பள்ளியில் அவர் கண்டிக்கப்பட்டாரா, அதுவே அவரது மன உளைச்சலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். சைபராபாத் கமிஷனரேட்டின் கீழ் உள்ள சந்தாநகர் காவல் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் மரணம் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

தலைப்பு செய்திகள்

கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
Embed widget