மேலும் அறிய

Crime: : 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. ஓட்டுநர் செய்த சித்ரவதை.. ஹைதராபாத்தில் கொடூரம்...

Crime: ஹைதராபாத்தில் 4 வயது சிறுமியை பள்ளி ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Crime: ஹைதராபாத்தில் 4 வயது சிறுமியை பள்ளி ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத் மாநிலம் பஞ்சாரா மலைப்பகுதியில் தனியார் மழலையர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் 4 வயது சிறுமி ஒருவர் படித்து வந்தார். அதே பள்ளியில் முதல்வரின் ஓட்டுநரான ரஜினிகுமார் என்பவர் பள்ளியில் ஆய்வகங்களை பராமரித்தல், பள்ளி அலுவலக வேலையில் போன்றவற்றையில் ஈடுபட்டு வந்திருந்தார். இந்நிலையில் அந்த பள்ளியில் இருக்கும் 4 வயது சிறுமியிடம் அன்பாக பழகுவதுபோல நடித்துவந்தார். அப்போது அந்த சிறுமியுடன் பள்ளியில் நெருக்கமாக பழகி, அந்த சிறுமியை கடந்த இரண்டு மாதங்களாக பள்ளியிலேயே பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ளது. 

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தார். கடந்த இரண்டு மாத காலமாக தினமும்  வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் குழந்தை மிகவும் களைப்புடனும், வலியுடனும் சென்று கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமியை வழக்கமாக செய்யும் வேலைகளில் ஒரு ஈடுபாடு இல்லாமல் இருந்தார். சக சிறுமிகளிடம் விளையாடுதல், படித்தல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் கடந்த இரண்டு மாதமாக இருந்து வந்தார் என கூறப்படுகிறது.கடந்த திங்கட்கிழமை அன்று சிறுமியிடம், பெற்றோர் நடத்தையின் மாற்றம் குறித்து கேட்டனர். அதற்கு அந்த சிறுமி மனம் திறந்து எல்லாவற்றையும் தனது பெற்றோருக்கு தெரிவித்தார். பின்பு பாதிக்கப்பட்ட சிறுமி மறுநாள் அதாவது நேற்று பெற்றோருடன் பள்ளிக்கு சென்றார். தன்னை பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபரை, சிறுமி தன் தாயிடம் சுட்டிக்காட்டினர் என கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பஞ்சாரா காவல்துறையில் புகார் ஒன்று அளித்தார். புகாரை அடுத்த அந்த பள்ளியில் பணியாற்றிய ஓட்டுநர் ரஜினிகுமாரை அதே பள்ளியில் பஞ்சாரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை பெற்றோர் கவனித்த பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வந்த அந்த சிறுமிக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த ஆலோசனையில் அந்த சிறுமிக்கு என்ன நடந்தது என்பது கேட்கப்பட்டிருந்தது. அதற்கு அந்த சிறுமி தனக்கு நடந்த அனைத்தையும் வெளிப்படையாக தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஓட்டுநர் ரஜினிகுமாரை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக மற்ற பெற்றோர்களும் ரஜினிகுமார் மீது பள்ளி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ரஜினிகுமார், மற்ற மாணவர்களிடமும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாரை என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget