மேலும் அறிய

சிதம்பரம்: திருமணத்தை மீறிய உறவு... தட்டிக்கேட்ட மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவன்

சிதம்பரம் அருகே புவனகிரியில் திருமணத்தை மீறிய உறவை தட்டிக் கேட்ட மனைவியை  சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு கணவன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த  புவனகிரி சின்னப்ப முதலி தெருவைச் சேர்ந்தவர் கரிகாலன் (52). இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கும்  பச்சையம்மாள்  (43)  என்பவருடன் திருமணமாகி 2 மகள் உள்ளனர். இந்நிலையில்  கரிகாலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு பல ஆண்டுகளாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.  இந்த சூழலில் அவ்வப்போது வீட்டிற்கு வந்து மனைவி பச்சையம்மாவிடம்  தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் வீட்டிற்கு வந்த கரிகாலனுக்கும் அவரது மகள் கெளசல்யாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கரிகாலன் மகளை அடிக்க முயன்றுள்ளார். இதைப் பார்த்த பச்சையம்மாள் கரிகாலனை தடுக்க முயன்றார்.  


சிதம்பரம்: திருமணத்தை மீறிய உறவு... தட்டிக்கேட்ட மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவன்

அப்போது கரிகாலன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது மனைவி பச்சையம்மாளை தலை, கழுத்து, தாடை உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக வெட்டி உள்ளார்.  இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் அலறி துடித்து கீழே விழுந்த பச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கரிகாலன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.


சிதம்பரம்: திருமணத்தை மீறிய உறவு... தட்டிக்கேட்ட மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவன்

இச்சம்பவம் தொடர்பாக அருகில் உள்ளவர்கள் புவனகிரி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலை அடுத்து புவனகிரி காவல்நிலைய காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதனைத்  தொடர்ந்து கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த பச்சையம்மாளின் சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் உடல்கூறு ஆய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து பச்சையம்மாள் மகள் கௌசல்யா அளித்த புகாரின் பேரில் புவனகிரி காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கரிகாலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


சிதம்பரம்: திருமணத்தை மீறிய உறவு... தட்டிக்கேட்ட மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவன்

இந்த கொரோனா வைரஸ் தொற்றின் பேரிடர் காலத்தில் பலரும் தங்கள் உயிரைக் காக்க வீடுகளில் முடங்கி கிடக்கும் வேளையில் பிரித்து சென்ற கணவன் மீண்டும் வந்து மனைவியிடம் சண்டையிட்டு அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொரோனோ வைரஸ் தொற்றின் அச்சம், ஊரடங்கு உத்தரவால் வேலை இழப்பு, வெளி நிகழ்வுகளில் பங்கேற்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு என எந்த ஒரு செயல்களிலும் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக கொலை,கொள்ளை,பாலியல் வன்கொடுமை, தற்கொலை முயற்சி என ஏராளமான சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.  இதற்காக தீர்வு காண்பதற்கு அரசு இலவச தொடர்பு எண்களை அறிவித்து மனநல ஆலோசகர்களை நியமனம் செய்து ஆலோசனை பெற வழிவகை செய்துள்ளது. 


சிதம்பரம்: திருமணத்தை மீறிய உறவு... தட்டிக்கேட்ட மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவன்

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.

தலைப்பு செய்திகள்

மதுரை மாவட்ட காவல்துறையின் (Storming Operation) - ஒரே நாளில் 22 குற்றவாளிகள் கைது !
மதுரை மாவட்ட காவல்துறையின் (Storming Operation) - ஒரே நாளில் 22 குற்றவாளிகள் கைது !
கஞ்சா கடத்தல் ; கள்ளக் காதலியுடன் சிக்கிய மதிமுக நிர்வாகி !! வடசென்னையில் பரபரப்பு
கஞ்சா கடத்தல் ; கள்ளக் காதலியுடன் சிக்கிய மதிமுக நிர்வாகி !! வடசென்னையில் பரபரப்பு
பிள்ளைகளிடம் வண்டியை கொடுத்தால் ஜெயில் தான்..! புதுச்சேரியில் சிறார்களின் பெற்றோர்கள் மீது பாய்ந்தது FIR
பிள்ளைகளிடம் வண்டியை கொடுத்தால் ஜெயில் தான்..! புதுச்சேரியில் சிறார்களின் பெற்றோர்கள் மீது பாய்ந்தது FIR
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்
காதலிக்கு ஐபோன் - தங்கச் சங்கிலி பறிப்பு !! வரிக்குதிரை படத்தால் சிக்கிய நபர்

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijaya Baskar Gutkha case : தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்
தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
Embed widget