மேலும் அறிய

சிதம்பரம்: திருமணத்தை மீறிய உறவு... தட்டிக்கேட்ட மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவன்

சிதம்பரம் அருகே புவனகிரியில் திருமணத்தை மீறிய உறவை தட்டிக் கேட்ட மனைவியை  சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு கணவன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த  புவனகிரி சின்னப்ப முதலி தெருவைச் சேர்ந்தவர் கரிகாலன் (52). இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கும்  பச்சையம்மாள்  (43)  என்பவருடன் திருமணமாகி 2 மகள் உள்ளனர். இந்நிலையில்  கரிகாலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு பல ஆண்டுகளாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.  இந்த சூழலில் அவ்வப்போது வீட்டிற்கு வந்து மனைவி பச்சையம்மாவிடம்  தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் வீட்டிற்கு வந்த கரிகாலனுக்கும் அவரது மகள் கெளசல்யாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கரிகாலன் மகளை அடிக்க முயன்றுள்ளார். இதைப் பார்த்த பச்சையம்மாள் கரிகாலனை தடுக்க முயன்றார்.  


சிதம்பரம்: திருமணத்தை மீறிய உறவு... தட்டிக்கேட்ட மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவன்

அப்போது கரிகாலன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது மனைவி பச்சையம்மாளை தலை, கழுத்து, தாடை உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக வெட்டி உள்ளார்.  இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் அலறி துடித்து கீழே விழுந்த பச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கரிகாலன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.


சிதம்பரம்: திருமணத்தை மீறிய உறவு... தட்டிக்கேட்ட மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவன்

இச்சம்பவம் தொடர்பாக அருகில் உள்ளவர்கள் புவனகிரி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலை அடுத்து புவனகிரி காவல்நிலைய காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதனைத்  தொடர்ந்து கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த பச்சையம்மாளின் சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் உடல்கூறு ஆய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து பச்சையம்மாள் மகள் கௌசல்யா அளித்த புகாரின் பேரில் புவனகிரி காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கரிகாலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


சிதம்பரம்: திருமணத்தை மீறிய உறவு... தட்டிக்கேட்ட மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவன்

இந்த கொரோனா வைரஸ் தொற்றின் பேரிடர் காலத்தில் பலரும் தங்கள் உயிரைக் காக்க வீடுகளில் முடங்கி கிடக்கும் வேளையில் பிரித்து சென்ற கணவன் மீண்டும் வந்து மனைவியிடம் சண்டையிட்டு அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொரோனோ வைரஸ் தொற்றின் அச்சம், ஊரடங்கு உத்தரவால் வேலை இழப்பு, வெளி நிகழ்வுகளில் பங்கேற்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு என எந்த ஒரு செயல்களிலும் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக கொலை,கொள்ளை,பாலியல் வன்கொடுமை, தற்கொலை முயற்சி என ஏராளமான சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.  இதற்காக தீர்வு காண்பதற்கு அரசு இலவச தொடர்பு எண்களை அறிவித்து மனநல ஆலோசகர்களை நியமனம் செய்து ஆலோசனை பெற வழிவகை செய்துள்ளது. 


சிதம்பரம்: திருமணத்தை மீறிய உறவு... தட்டிக்கேட்ட மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவன்

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Embed widget