மேலும் அறிய

Crime: உலக்கையாலே அடித்துக் கொலை! மனைவியை கொன்று தற்கொலை செய்த கணவன் - தென்காசியில் சோகம்

தென்காசி அருகே மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவன், அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கீழத்திருவேங்கடம் தெற்கு பாறைப்பட்டியை  சேர்ந்தவர் கருப்பசாமி (72). இவரது மனைவி சீதாலட்சுமி (65). இந்த தம்பதிகளுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் நான்கு பேருக்கும் திருமணம் முடிந்த நிலையில் சீதாலெட்சுமி மட்டும் தனியாக ஊரில் வசித்து வருகிறார். கணவர் கருப்பசாமி திருவேங்கடம் பகுதியில் கொத்தனாராக இதற்கு முன் வேலை பார்த்து வந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சென்னையில்  வாட்ச்மேனாக வேலை செய்து வருகிறார். அதோடு ஆறு  மாதத்திற்கு ஒரு முறை, வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி தற்போது ஊருக்கு வந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

உலக்கையால் அடித்துக் கொலை:

குறிப்பாக தனக்கு பிடிக்காத அக்கம் பக்கத்து உறவினர்களிடம் பேச கூடாது என கருப்பசாமி கூறி பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. அதில் இருவருக்கும் பிரச்சினை முற்றவே ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து மனைவி சீதாலெட்சுமி மண்டையில் ஓங்கி அடித்துள்ளார். இரத்த வெள்ளத்தில் சீதாலெட்சுமி நிலைகுலைந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

தற்கொலை:

கோபத்தில் சற்றும் யோசிக்காமல்  மனைவியை கொலை செய்த கருப்பசாமி, அதன்பின்னர் தாயை கொலை செய்தது மகன்களுக்கு தெரிந்தால்  சும்மா விடமாட்டார்கள் என்ற பயத்தில் தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இரவில் இச்சம்பவம் நடந்தது யாருக்கும் தெரியாத நிலையில் காலையில் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்துள்ளது. அதன்பின்னர் இது குறித்து திருவேங்கடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதோடு அருகில் உள்ள மக்கள் அனைவரும் கருப்பசாமியின் வீட்டின் முன் குவிந்தனர். தொடர்ந்து அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கருப்பசாமியை மீட்ட காவல்துறையினர்  சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருப்பசாமி சுய நினைவை இழந்து வருவதாக தெரிவித்த சற்று நேரத்தில் அவர் உயிரிழந்தார். 

மேலும் இறந்த சீதாலெட்சுமியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். கோபத்தில் மனைவியை கொலை செய்து விட்டு பின் மகன்கள் மீது உள்ள பயத்தில் கணவரும் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சென்னை அருகே பரபரப்பு ; 3 பேர் கொலைக்கு பழிக்குப் பழியாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை
சென்னை அருகே பரபரப்பு ; 3 பேர் கொலைக்கு பழிக்குப் பழியாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை – ஒரு மாதம் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல் !
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை – ஒரு மாதம் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல் !
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
புகாரளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் ; SI - அதிரடி சஸ்பெண்ட் ! டிஐஜி அதிரடி உத்தரவு
புகாரளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் ; SI - அதிரடி சஸ்பெண்ட் ! டிஐஜி அதிரடி உத்தரவு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Silver Rate May 25th: வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ஏறுமுகத்திற்கு மாறிய தங்கம் விலை; இப்போது எவ்வளவு தெரியுமா.?
வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ஏறுமுகத்திற்கு மாறிய தங்கம் விலை; இப்போது எவ்வளவு தெரியுமா.?
Virat Kohli: மானம் போகுது..! ஹெட்டின் மனைவி மீது வன்மத்தை கொட்டிய கோலி ரசிகர்கள்- குவியும் கண்டனம்
Virat Kohli: மானம் போகுது..! ஹெட்டின் மனைவி மீது வன்மத்தை கொட்டிய கோலி ரசிகர்கள்- குவியும் கண்டனம்
Top 10 News Headlines: முதல்வர் விஜய் ஆலோசனை, தங்கம் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை சரிவு, ட்ரம்ப் அச்சுறுத்தல் - 11 மணி செய்திகள்
முதல்வர் விஜய் ஆலோசனை, தங்கம் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை சரிவு, ட்ரம்ப் அச்சுறுத்தல் - 11 மணி செய்திகள்
Chennai Corporation: ஆட்சி மாறியதும் ஆப்சென்டான கவுன்சிலர்கள்..! முடங்கிய பணிகள்? கலக்கத்தில் சென்னை வாசிகள்
ஆட்சி மாறியதும் ஆப்சென்டான கவுன்சிலர்கள்..! முடங்கிய பணிகள்? கலக்கத்தில் சென்னை வாசிகள்
17 வயது சிறுவனை வெட்டிக் கொன்ற கும்பல்..! கொண்டாட்டங்கள் போதும் CM சார் - அண்ணாமலை ஆவேசம்
17 வயது சிறுவனை வெட்டிக் கொன்ற கும்பல்..! கொண்டாட்டங்கள் போதும் CM சார் - அண்ணாமலை ஆவேசம்
ADMK: நீங்க சொன்னா கரெக்ட்..! எடப்பாடி போட்ட ரூல்ஸ், ஒகே சொல்லி ஐக்கியமாகும் வேலுமணி டீம்? யார் அவுட்?
நீங்க சொன்னா கரெக்ட்..! எடப்பாடி போட்ட ரூல்ஸ், ஒகே சொல்லி ஐக்கியமாகும் வேலுமணி டீம்? யார் அவுட்?
Petrol Diesel Price: 2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
TN Weather Update: வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
Embed widget