மேலும் அறிய

வாட்ஸாப்பில் முத்தலாக் கொடுத்த கணவர்... போலீசில் புகார் செய்த மனைவி!

வாட்ஸாப்பில் முத்தலாக் அனுப்பியதாக புனேவில் 28 வயது இஸ்லாமிய பெண் தன் கணவர் மீது புகார் அளித்துள்ளார்.

நானா பேட்டின் சம்தே கல்லில் வசிக்கும் 28 வயதான ஆலியா மொஹமது யூசுப் என்னும் பெண் சமரதா காவல் நிலையத்தில் தன் கணவர் வாட்ஸாப்பில் முத்தலாக் தெரிவித்ததாக புகாரளித்ததை அடுத்து அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்தது. அவரது புகாரில் அவரது கணவர் பெயர் சஜித் மக்தம் ஷைக் என்றும் அவரது மாமியார் பெயர் ஸைபுநிஷா என்றும் தெரிகிறது. அவர்கள் கஞ்ச் பேட்டில் உள்ள லோஹியா நகரில் வசிக்கின்றனர். தன் கணவரும் தாயும் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் தனது அப்பாவிடம் இருந்து காசு வாங்கி வர சொல்லி வற்புறுத்தியதாகவும் புகார் அளித்துள்ளார். மேலும் அவரை வீட்டிற்கு ஏர் கூலர் வாங்கி தர சொல்லியும், அயர்ன் பாக்ஸ் வாங்கி தர சொல்லியும் அடித்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி ஒரு வீடு வாங்கி தர சொல்லி துன்புறுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தன் தந்தையின் வீட்டில் வாழ்ந்து வந்திருக்கிறார்.

வாட்ஸாப்பில் முத்தலாக் கொடுத்த கணவர்... போலீசில் புகார் செய்த மனைவி!

இந்நிலையில், கடந்த மார்ச் 10 ஆம் தேதி தனது கணவர் வாட்ஸாப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதனை திறந்து பிளே செய்து பார்த்த ஆலியாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது கணவர் அதில் மூன்று முறை தலாக்… தலாக்… தலாக்… என்று கூறியிருந்தார். இஸ்லாமிய மத முறை படி தலாக் என்று மூன்று முறை கூறினால் தன் மனைவியை விவாகரத்து செய்வது என்று அர்த்தம். இவ்வாறு புகாரளித்த ஆலியாவின் புகார் மனுவை கருத்தில் கொண்டு உடனடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கினர். போலீசார் அவரது கணவர் மீது IPC 498 A, 323, 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அது மட்டுமின்றி இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு சட்டம் 2019 இன் 3 மற்றும் 4 வது செக்ஷனின் கீழும் வழக்கு பதிய பட்டுள்ளது. கடந்த 11 ஆம் தேதி இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. காவல்துறை சப் - இன்ஸ்பெக்டர் பி.ஹெச். கோபடே இந்த வழக்கை விசாரித்த வருகிறார். 

வாட்ஸாப்பில் முத்தலாக் கொடுத்த கணவர்... போலீசில் புகார் செய்த மனைவி!

இஸ்லாமிய பெண்களை தலாக் கூறி கணவர் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடைவிதிக்கும் அவசர சட்டத்தை கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. இதற்கு மாற்றான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரிலான இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து முத்தலாக்கிற்கு எதிரான புதிய சட்டம்  2019ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கலாம். மனைவி மற்றும் குழந்தைக்கு கணவன் நிதி வழங்குவது குறித்து நீதிபதி முடிவு செய்யலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை மக்களே... அண்ணாசாலை பக்கம் போறீங்களா.. நாளை முதல் மிகப்பெரிய மாற்றம்! நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே... அண்ணாசாலை பக்கம் போறீங்களா.. நாளை முதல் மிகப்பெரிய மாற்றம்! நோட் பண்ணிக்கோங்க
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
ஏஐ தவறான ஆலோசனை: உப்புக்கு பதில் ப்ரோமைட்? அதிர்ச்சியூட்டும் சுய மருத்துவம்! எச்சரிக்கை பதிவு!
ஏஐ தவறான ஆலோசனை: உப்புக்கு பதில் ப்ரோமைட்? அதிர்ச்சியூட்டும் சுய மருத்துவம்! எச்சரிக்கை பதிவு!
பொறியியல் சேர்க்கை: தள்ளிப்போகும் துணை கலந்தாய்வு? 40,000 இடங்களுக்கு என்ன நடக்கும்?
பொறியியல் சேர்க்கை: தள்ளிப்போகும் துணை கலந்தாய்வு? 40,000 இடங்களுக்கு என்ன நடக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை மக்களே... அண்ணாசாலை பக்கம் போறீங்களா.. நாளை முதல் மிகப்பெரிய மாற்றம்! நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே... அண்ணாசாலை பக்கம் போறீங்களா.. நாளை முதல் மிகப்பெரிய மாற்றம்! நோட் பண்ணிக்கோங்க
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
Minister Periyasamy: திமுகவின் நிதி ஆதாரம்..! யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி - அரசியல் பயணமும், வழக்கும்..
ஏஐ தவறான ஆலோசனை: உப்புக்கு பதில் ப்ரோமைட்? அதிர்ச்சியூட்டும் சுய மருத்துவம்! எச்சரிக்கை பதிவு!
ஏஐ தவறான ஆலோசனை: உப்புக்கு பதில் ப்ரோமைட்? அதிர்ச்சியூட்டும் சுய மருத்துவம்! எச்சரிக்கை பதிவு!
பொறியியல் சேர்க்கை: தள்ளிப்போகும் துணை கலந்தாய்வு? 40,000 இடங்களுக்கு என்ன நடக்கும்?
பொறியியல் சேர்க்கை: தள்ளிப்போகும் துணை கலந்தாய்வு? 40,000 இடங்களுக்கு என்ன நடக்கும்?
உளவுத்துறையில் வேலை; 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்- 4987 காலிப் பணியிடங்கள், நாளை கடைசி! விண்ணப்பிப்பது எப்படி?
உளவுத்துறையில் வேலை; 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்- 4987 காலிப் பணியிடங்கள், நாளை கடைசி! விண்ணப்பிப்பது எப்படி?
Free AI Courses: 5 இலவச ஏஐ படிப்புகளை அறிமுகம் செய்த அரசு- என்னென்ன? உங்கள் எதிர்காலத்தை மாற்றும் வாய்ப்பு!
Free AI Courses: 5 இலவச ஏஐ படிப்புகளை அறிமுகம் செய்த அரசு- என்னென்ன? உங்கள் எதிர்காலத்தை மாற்றும் வாய்ப்பு!
7 வயதில்தான் கல்வி; 16 வரை தேர்வு இல்லை- ஃபின்லாந்து குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ரகசியம்! அறிய ஆவலா?
7 வயதில்தான் கல்வி; 16 வரை தேர்வு இல்லை- ஃபின்லாந்து குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ரகசியம்! அறிய ஆவலா?
Cheapest Electric SUV: இனி இதுதான் மலிவு விலை மின்சார எஸ்யுவி.. அலறப்போகும் இந்திய சந்தை, மிரட்டும் சீனா கார்
Cheapest Electric SUV: இனி இதுதான் மலிவு விலை மின்சார எஸ்யுவி.. அலறப்போகும் இந்திய சந்தை, மிரட்டும் சீனா கார்
Embed widget