மேலும் அறிய

Crime: கட்டாய கணவனுக்கு டாடா: காதலனுடன் குடும்பம் நடத்திய மனைவி: ஆத்திரத்தில் கொலை செய்த கணவர் கைது!

திருவள்ளூர் மாவட்டம் புழல் லட்சுமிபுரம் கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுதாசந்தர் என்ற 22 வயது இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தனது மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்திய காதலன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் புழல் லட்சுமிபுரம் கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுதாசந்தர் என்ற 22 வயது இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி இளம்பெண் ஒருவருடன் புழல் வினாயகபுரம் பகுதியில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த கும்பல் ஒன்று ஆட்டோவை மறித்து நிறுத்தியதோடு, சுதாசந்தருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் கத்தியால் அவரை பல இடங்களில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் சுதாசந்தர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தகவலறிந்த புழல் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சுதாசந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். 

பின்னர் நடைபெற்ற விசாரணையில்  சுதாசந்தருடன் ஆட்டோவில் சென்றது ஆவடியை அடுத்த மோரை பகுதியை சேர்ந்த ராகிணி என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதாவது கடந்த 3 வருடங்களாக சுதாசந்தரும் ராகிணியும் காதலித்து வந்த நிலையில், ராகிணி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு முன் ராகிணியை பெற்றோர்  வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து ராகிணி சுதாசந்தருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். 

இதுகுறித்து அறிந்த ராகிணியின் கணவர் வசந்த், அவரது அண்ணன்கள் ராகிணியை கண்டித்துள்ளனர். இதில் தகராறு ஏற்படவே ராகிணி ஒரு மாதத்திற்கு முன் வீட்டை விட்டு வெளியேறி சுதாசந்தருடன் சென்றுள்ளார். இருவரும் ரெட்டேரி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது தெரிய வந்தது. மேலும் சுதாசந்தரை ராகிணியின் கணவர் திட்டமிட்டு கொலை செய்தது கண்டறியப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் கார்த்திக், பரத். உதயா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ராகிணியின் கணவர் வசந்த், அவரது தந்தை வாசுதேவன் இருவரும் 10 நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று மாலை அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
Top 10 News Headlines: SIR 4 நாட்கள் சிறப்பு முகாம், தேவாலயத்தில் மோடி, முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்? - 11 மணி செய்திகள்
SIR 4 நாட்கள் சிறப்பு முகாம், தேவாலயத்தில் மோடி, முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்? - 11 மணி செய்திகள்
Gold Rate Dec.25th: 1 லட்சம் ரூபாய தாண்டியும் அடங்க மாட்டேங்குதே.?! புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி; இன்றைய விலை
1 லட்சம் ரூபாய தாண்டியும் அடங்க மாட்டேங்குதே.?! புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி; இன்றைய விலை
Tamilnadu Roundup: முதல்வர், இபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து, தவெகவில் டிடிவி, ஓபிஎஸ்?, புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி - 10 மணி செய்திகள்
முதல்வர், இபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து, தவெகவில் டிடிவி, ஓபிஎஸ்?, புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி - 10 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
Top 10 News Headlines: SIR 4 நாட்கள் சிறப்பு முகாம், தேவாலயத்தில் மோடி, முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்? - 11 மணி செய்திகள்
SIR 4 நாட்கள் சிறப்பு முகாம், தேவாலயத்தில் மோடி, முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்? - 11 மணி செய்திகள்
Gold Rate Dec.25th: 1 லட்சம் ரூபாய தாண்டியும் அடங்க மாட்டேங்குதே.?! புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி; இன்றைய விலை
1 லட்சம் ரூபாய தாண்டியும் அடங்க மாட்டேங்குதே.?! புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி; இன்றைய விலை
Tamilnadu Roundup: முதல்வர், இபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து, தவெகவில் டிடிவி, ஓபிஎஸ்?, புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி - 10 மணி செய்திகள்
முதல்வர், இபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து, தவெகவில் டிடிவி, ஓபிஎஸ்?, புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி - 10 மணி செய்திகள்
Russia Ukraine War End.?: அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
Election Commission: SIR படிவத்தில் தவறான தகவல்.! 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.? விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்கம்
SIR படிவத்தில் தவறான தகவல்.! 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.? விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்கம்
OTP Mandatory Tatkal Ticket Booking : இனி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய வழிமுறை.! என்ன தெரியுமா.? தெற்கு ரயில்வே அறிவிப்பு
இனி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய வழிமுறை.! என்ன தெரியுமா.? தெற்கு ரயில்வே அறிவிப்பு
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Embed widget