மேலும் அறிய

Crime: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கைவரிசை; சிவகாசியில் திருடி மாட்டிக் கொண்ட இருவர்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த  இருவர் சிவகாசியில் திருடி மாட்டிகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சிந்துராஜபுரம் தேவி நகரில் வசித்து வருபவர்கள்  பத்மநாபன், தனசேகர், சிவக்குமார், சிவ சிதம்பரம் ஆகியோர். இவர்கள் கடந்த 25 ஆம் தேதி வீடுகளை பூட்டி   விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அதிகாலையில் பூட்டப்பட்ட 4 வீடுகளிலும் அடுத்தடுத்து புகுந்து பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். மேலும் பீரோவில் இருந்த நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் பத்மநாபன் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து பத்மநாபன் சிவகாசி டவுண் போலிசில் புகார் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது அருகே உள்ள 3 வீடுகள் என மொத்தம் 4 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதில் பத்மநாபன் வீட்டில் மட்டும் 90 சவரன் நகைகள் கொள்ளை போயுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார், செல்வராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து கொள்ளை சம்பவம் மற்றும் கொள்ளை முயற்சி நடைபெற்ற வீடுகளில் ஆய்வு செய்தனர். அப்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இது போன்று தமிழகத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் குறித்து தகவல்களை சேகரித்தோடு இதில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களையும் சேகரித்தனர். அப்போது இதே போன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த சூர்யா(30), மற்றும் சிவா(27) ஆகிய 2 பேர் சிவகாசி அருகே சித்துராஜபுரம் தேவி நகரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையாக இருவரது முகவரி மற்றும் விவரங்களை சேகரித்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்த போலிசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் தமிழகத்தில் ஈரோடு, காரைக்குடி, திருச்ச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததுள்ளது.

இதுமட்டுமின்றி இவர்கள் கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தெலுங்கானாவில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைவது வழக்கம் எனவும் போலிசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  மேலும் கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து சுமார் 25 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இக்கொள்ளை சம்பவங்களில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த  இருவர் சிவகாசியில் திருடி மாட்டிகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget