மேலும் அறிய

கன்னியாகுமரி: மக்கள் நடமாடும் மார்க்கெட் பகுதியில் கிலோ கணக்கில் நகைகள் கொள்ளை...!

குமரி மாவட்டத்தில் உள்ள நகைக்கடையில் அரைகிலோ தங்கம் கொள்ளை. மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள நகைக்கடையில் அரைகிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்த்தாண்டத்தில் தங்க நகை கடையின் பூட்டை உடைத்து அரைகிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து மார்த்தாண்டம் போலீசார் தடயங்கள் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா செல்வின்ராஜ். இவர் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ காம்பிளக்சில் ரோஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் கடையை அடைத்து சென்றவர் இன்று கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 
 

கன்னியாகுமரி: மக்கள் நடமாடும் மார்க்கெட் பகுதியில் கிலோ கணக்கில் நகைகள் கொள்ளை...!
 
இதனையடுத்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் கடையை திறந்து பார்த்தபோது அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 600 கிராம் எடையில் கொலுசு, கம்மல், மாலை, மோதிரம், செயின் ஒட்டியானம் என்ன விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தக்கலை டிஎஸ்பி கணேசன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
மேலும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தடயங்களை சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் உள்ள நகைக்கடையில் கொள்ளயடிக்கபட்டிருப்பது அப்பகுதியிலுள்ள வர்த்தகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 

 
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
TN Govt: அரசு பல்கலை.களில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப முடிவு? எழும் எதிர்ப்புகள்!
TN Govt: அரசு பல்கலை.களில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப முடிவு? எழும் எதிர்ப்புகள்!
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
TN Govt: அரசு பல்கலை.களில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப முடிவு? எழும் எதிர்ப்புகள்!
TN Govt: அரசு பல்கலை.களில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நிரப்ப முடிவு? எழும் எதிர்ப்புகள்!
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
Embed widget