மேலும் அறிய
Advertisement
‛பாலியல் வழக்கில் அரசியல் முட்டுக்கட்டு; சி.பி.ஐ விசாரணை வேண்டும்’ - ஹெச்.ராஜா கோரிக்கை!
காரைக்குடியில் நடந்துள்ள இச்சம்பவம் சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் - பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா கோரிக்கை.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தனியார் பள்ளியைச் சேர்ந்த, பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர், அப்பகுதியில் உள்ள பியூட்டி பார்லரில் தனது தோழியுடன் சென்று வந்தார். இதில் அழகு நிலைய பெண் பொறுப்பாளருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது உதவியுடன், அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
பியூட்டி பார்லர் வந்த ப்ளஸ் 2 மாணவிக்கு பாலியல் சீண்டல்: 4 பேர் கைது; டார்ஜிலிங் பெண் தலைமறைவு! https://t.co/VnXWoNcTxt
— Arunchinna (@iamarunchinna) November 20, 2021
சிவகங்கை : மாணவிக்கு பாலியல் தொல்லை ; பியூட்டி பார்லர் மேனேஜர் கைது !#SexulaHarassment https://t.co/kkTxHW7pid
— ABP Nadu (@abpnadu) November 20, 2021
இது தொடர்பாக மாணவியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸில், தேவகோட்டையைச் சேர்ந்த மணிமாறன் மகன் விக்னேஷ் (28), காரைக்குடியைச் சேர்ந்த பொன்னுவேல் மனைவி லட்சுமி (45) உட்பட 4 பேர் மீது காரைக்குடி மகளிர் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, லட்சுமி, விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான மன்ஸிலை தேடி வந்தனர். மன்ஸில் தலைமறைவான நிலையில் காவல்துறையினர் முக்கிய குற்றவாளியான மன்ஸில்லை கைது செய்தனர்.
காரைக்குடியில் நடந்துள்ள இச்சம்பவம் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சில அரசியல் பிரபலங்கள் வழக்கிற்கு முட்டுக்கட்டை போடுவதாக தகவல்கள் வருகின்றன. எனவே தமிழக முதல்வர் மற்றும் DGP இது தொடர்பாக நேரடி கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி வழங்கிட வேண்டும் @CMOTamilnadu pic.twitter.com/sfvIjd7xBD
— H Raja (@HRajaBJP) November 20, 2021
இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார் அதில்..,” காரைக்குடியில் நடந்துள்ள இச்சம்பவம் சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சில அரசியல் பிரபலங்கள் வழக்கிற்கு முட்டுக்கட்டை போடுவதாக தகவல்கள் வருகின்றன. எனவே தமிழக முதல்வர் மற்றும் DGP இது தொடர்பாக நேரடி கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி வழங்கிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion