மேலும் அறிய

Crime : குஜராத்தில் பயங்கரம்... பலிபீடத்தில் உருண்ட தலைகள்... நரபலி கொடுத்துக் கொண்ட தம்பதி.....!

குஜராத்தில் தலையை துண்டித்துக் கொண்டு தம்பதியினர் தங்களை தாங்களே நரபலி கொடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : குஜராத்தில் தலையை துண்டித்துக் கொண்டு தம்பதியினர் தங்களை தாங்களே நரபலி கொடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பல இடங்களில் பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் நரபலி கொடுக்கும் சம்பவம் அங்காங்கே நடந்து கொண்டு இருக்கிறது. சமீபத்தில் கேரளாவில் இரண்டு பெண்களை 56 துண்டுகளாக வெட்டி நரபலி கொடுத்தது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்று  நரபலி கொடுக்கப்படும் சம்பவங்கள் கேரள மட்டுமின்றி உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் சிறுவர்கள் உட்பட அனைவரையும் மூட நம்பிக்கை என்ற பெயரில் நரபலி கொடுத்து வருகின்றனர்.  அந்த வகையில் தற்போது குஜராத் மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

நரபலி

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமுபாய் மக்வானா (38). இவரது மனைவி ஹன்சாபென் (35). இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு மாந்திரீக பூஜைகளில் நம்பிக்கை இருந்த நிலையில், கடந்த ஓராண்டாக தங்கள் வசிக்கும் வீட்டிலேயே நாள்தோறும் மாந்திரீக பூஜைகளை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை அன்று ஹோமகுண்டம் பூஜை செய்து, மறுநாள் காலை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். 

இந்த நேரத்தில் இவர்களது உறவினர்கள் வீட்டிற்கு வந்த நிலையில், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

தலையை துண்டித்த தம்பதி

அதன்படி, "மூடநம்பிக்கை உள்ள இவர்கள் கடந்த ஓராண்டாக வீட்டிலேயே சில பூஜைகளை செய்து வந்துள்ளனர். கில்லட்டின் (guillotin) போன்ற தலையை துண்டிக்கும் எந்திரம் ஒன்றை உருவாக்கி வீட்டருகே வைத்துள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் மாந்திரீக பூஜைகளை நடத்தி அந்த கருவியைக் கயிற்றின் மூலம் கட்டி இருவரும் தங்களைத் தாங்களே நரபலி கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இவர்கள் தலைகள் துண்டிக்கப்பட்டவுடன் அது உருண்டு நேராக பலி பீடத்துக்கு செல்லும் வகையில் அந்த எந்திரத்தை அமைத்து தலையை துண்டித்துள்ளனர்” என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், இவர்கள் உயிரிழந்த இடத்தில் இருந்து தற்கொலை கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளளது. அதில், தங்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோரை பத்திரமாக பாத்துக் கொள்ள வேண்டும் என உறவினர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தம்பதி தங்களை தாங்களே நரபலி கொடுத்த சம்பவம் குஜராத்தில பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

நெல்லையில் பல் பிடுங்கிய விவகாரம்: 2ம் கட்ட விசாரணையை துவக்கிய அமுதா ஐஏஎஸ் - 5 பேர் ஆஜராகி விளக்கம்

தலைப்பு செய்திகள்

நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
ஒரு மாத காத்திருப்பு... கண்ணீர் மல்கிய கிராமங்கள்: சவுதியில் பலியான சீர்காழி மீனவர்களின் உடல்கள் சொந்த ஊர் வந்தடைந்தன!
ஒரு மாத காத்திருப்பு... கண்ணீர் மல்கிய கிராமங்கள்: சவுதியில் பலியான சீர்காழி மீனவர்களின் உடல்கள் சொந்த ஊர் வந்தடைந்தன!
பெற்றோருடன் இரவு உணவு… காலையில் சடலம்! ஜிப்மர் இளம் பெண் மருத்துவர் உயிரிழப்பு
பெற்றோருடன் இரவு உணவு… காலையில் சடலம்! ஜிப்மர் இளம் பெண் மருத்துவர் உயிரிழப்பு
"குடும்பம் நடத்த வா " மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் 3 பேரை கத்தியால் சரித்த மருமகன்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Karuppu Muruganandam : 'பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்’ நயினார் அதிரடி..!
Karuppu Muruganandam : 'பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்’ நயினார் அதிரடி..!
Durai Vaiko : மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
25,000 வீடுகள் கட்ட அனுமதி வந்தாச்சு.! பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு - விண்ணப்பிப்பது எப்படி.? தகுதி என்ன.?
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.! 25,000 வீடுகள் கட்ட அரசு நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி?
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
TASMAC Bars : டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
New Passport Rules: பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
Embed widget