மேலும் அறிய

Crime : குஜராத்தில் பயங்கரம்... பலிபீடத்தில் உருண்ட தலைகள்... நரபலி கொடுத்துக் கொண்ட தம்பதி.....!

குஜராத்தில் தலையை துண்டித்துக் கொண்டு தம்பதியினர் தங்களை தாங்களே நரபலி கொடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : குஜராத்தில் தலையை துண்டித்துக் கொண்டு தம்பதியினர் தங்களை தாங்களே நரபலி கொடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பல இடங்களில் பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் நரபலி கொடுக்கும் சம்பவம் அங்காங்கே நடந்து கொண்டு இருக்கிறது. சமீபத்தில் கேரளாவில் இரண்டு பெண்களை 56 துண்டுகளாக வெட்டி நரபலி கொடுத்தது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்று  நரபலி கொடுக்கப்படும் சம்பவங்கள் கேரள மட்டுமின்றி உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் சிறுவர்கள் உட்பட அனைவரையும் மூட நம்பிக்கை என்ற பெயரில் நரபலி கொடுத்து வருகின்றனர்.  அந்த வகையில் தற்போது குஜராத் மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

நரபலி

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமுபாய் மக்வானா (38). இவரது மனைவி ஹன்சாபென் (35). இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு மாந்திரீக பூஜைகளில் நம்பிக்கை இருந்த நிலையில், கடந்த ஓராண்டாக தங்கள் வசிக்கும் வீட்டிலேயே நாள்தோறும் மாந்திரீக பூஜைகளை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை அன்று ஹோமகுண்டம் பூஜை செய்து, மறுநாள் காலை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். 

இந்த நேரத்தில் இவர்களது உறவினர்கள் வீட்டிற்கு வந்த நிலையில், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

தலையை துண்டித்த தம்பதி

அதன்படி, "மூடநம்பிக்கை உள்ள இவர்கள் கடந்த ஓராண்டாக வீட்டிலேயே சில பூஜைகளை செய்து வந்துள்ளனர். கில்லட்டின் (guillotin) போன்ற தலையை துண்டிக்கும் எந்திரம் ஒன்றை உருவாக்கி வீட்டருகே வைத்துள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் மாந்திரீக பூஜைகளை நடத்தி அந்த கருவியைக் கயிற்றின் மூலம் கட்டி இருவரும் தங்களைத் தாங்களே நரபலி கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இவர்கள் தலைகள் துண்டிக்கப்பட்டவுடன் அது உருண்டு நேராக பலி பீடத்துக்கு செல்லும் வகையில் அந்த எந்திரத்தை அமைத்து தலையை துண்டித்துள்ளனர்” என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், இவர்கள் உயிரிழந்த இடத்தில் இருந்து தற்கொலை கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளளது. அதில், தங்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோரை பத்திரமாக பாத்துக் கொள்ள வேண்டும் என உறவினர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தம்பதி தங்களை தாங்களே நரபலி கொடுத்த சம்பவம் குஜராத்தில பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

நெல்லையில் பல் பிடுங்கிய விவகாரம்: 2ம் கட்ட விசாரணையை துவக்கிய அமுதா ஐஏஎஸ் - 5 பேர் ஆஜராகி விளக்கம்

தலைப்பு செய்திகள்

லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget