மேலும் அறிய

பேத்திகளுக்கு பாலியில் தொல்லை; தாத்தா உள்ளிட்ட 4 பேர் போக்சோவில் கைது!

தான் தொல்லை தந்தது போதாதென்று, பல இடங்களுக்கு பேத்திகளை அழைத்துச் சென்று பாலியல் தொல்லைகள் தந்துள்ளார் தாத்தா.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ளது கழனிவாசல். இந்த பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். 60  வயதான அவருக்கு சீமா என்ற மகள் உண்டு. சீமாவிற்கு 11 வயதிலும், 13 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த எட்டு ஆண்டுக்கு முன் சீமாவின் கணவர் இறந்து விட்டார். இதனால், செல்வத்தின் மகளான சீமா, வேறு ஒரு நபரை மறுமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சீமா தனது இரண்டாவது கணவருடன் தேவகோட்டை அருகே உள்ள கிராமத்தில் தற்போது வசித்து வருகிறார்.


பேத்திகளுக்கு பாலியில் தொல்லை; தாத்தா உள்ளிட்ட 4 பேர் போக்சோவில் கைது!

இதனால், மகளின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தைகள் இருவரும் தாத்தா செல்வத்தின் பராமரிப்பில் தற்போது வளர்ந்து வருகின்றனர். இந்த நிலையில்,  சிறுமிகள் இவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களது தாயான சீமாவிடம் தொலைபேசியில் பேசியுள்ளனர். அப்போது, தாத்தா செல்வம் இருவருக்கும் பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வருவதாக கூறி தாயிடம் அழுதுள்ளனர். இதனால்  அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் தாய் சீமா உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு மைய தொடர்பு எண்ணான 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்  அவர்கள் உடனடியாக இதுதொடர்பாக விசாரணை நடத்தி காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த அந்த சிறுமிகளின் தாத்தா செல்வத்தை போலீசார் கைது செய்தனர். மேலும்  இந்த பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த சுரேஷ், மணி, மற்றும்   தெரசாள் புனிதா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கிய குற்றவாளி எஸ்.டி.ரவிக்குமார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவரை தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் எந்த வித தகவலையும் தெரிவிக்க மறுத்தனர்.


பேத்திகளுக்கு பாலியில் தொல்லை; தாத்தா உள்ளிட்ட 4 பேர் போக்சோவில் கைது!

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக சிறுமிகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் சென்னை பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், தடகள பயிற்சியாளர் நாகராஜ், ஆசிரியர் கெவிராஜ், தனியார் உண்டு உறைவிட பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தொடர்ந்து சிறுமிகள், மாணவிகள் என பெண்களுக்கான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதைத் தொடர்ந்து இந்த குற்றங்களை ஒடுக்க கடுமையான தண்டனைகளை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். போக்சோ போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தும், இது போன்ற குற்றங்கள் தொடர்வது தடுக்கப்பட வேண்டும். 

தலைப்பு செய்திகள்

முன்விரோதம் ; காரை ஏற்றி அரிவாளால் தலையை துண்டித்து இரட்டைக் கொலை !! தப்பியோடிய கும்பல்
முன்விரோதம் ; காரை ஏற்றி அரிவாளால் தலையை துண்டித்து இரட்டைக் கொலை !! தப்பியோடிய கும்பல்
கணவனின் குடிப் பழக்கத்தால் இளம்பெண் விபரீத முடிவு ; சிக்கிய உருக்கமான கடிதம்
கணவனின் குடிப் பழக்கத்தால் இளம்பெண் விபரீத முடிவு ; சிக்கிய உருக்கமான கடிதம்
போலீஸ் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து மரணம் ! சாதிய அவமதிப்பே காரணமா ?
போலீஸ் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து மரணம் ! சாதிய அவமதிப்பே காரணமா ?
அம்மாவின் கள்ளக் காதலனால் நேர்ந்த கொடூரம் !! பள்ளி மாணவி கர்ப்பம் !! வெளிவந்த அதிர்ச்சி உண்மை
அம்மாவின் கள்ளக் காதலனால் நேர்ந்த கொடூரம் !! பள்ளி மாணவி கர்ப்பம் !! வெளிவந்த அதிர்ச்சி உண்மை

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs TVK Govt.: “கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
“கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Samsung Galaxy S25 Ultra Discount: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
Skoda Kodiaq RS Sold Out: தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
Embed widget