மேலும் அறிய

பேத்திகளுக்கு பாலியில் தொல்லை; தாத்தா உள்ளிட்ட 4 பேர் போக்சோவில் கைது!

தான் தொல்லை தந்தது போதாதென்று, பல இடங்களுக்கு பேத்திகளை அழைத்துச் சென்று பாலியல் தொல்லைகள் தந்துள்ளார் தாத்தா.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ளது கழனிவாசல். இந்த பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். 60  வயதான அவருக்கு சீமா என்ற மகள் உண்டு. சீமாவிற்கு 11 வயதிலும், 13 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த எட்டு ஆண்டுக்கு முன் சீமாவின் கணவர் இறந்து விட்டார். இதனால், செல்வத்தின் மகளான சீமா, வேறு ஒரு நபரை மறுமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சீமா தனது இரண்டாவது கணவருடன் தேவகோட்டை அருகே உள்ள கிராமத்தில் தற்போது வசித்து வருகிறார்.


பேத்திகளுக்கு பாலியில் தொல்லை; தாத்தா உள்ளிட்ட 4 பேர் போக்சோவில் கைது!

இதனால், மகளின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தைகள் இருவரும் தாத்தா செல்வத்தின் பராமரிப்பில் தற்போது வளர்ந்து வருகின்றனர். இந்த நிலையில்,  சிறுமிகள் இவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களது தாயான சீமாவிடம் தொலைபேசியில் பேசியுள்ளனர். அப்போது, தாத்தா செல்வம் இருவருக்கும் பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வருவதாக கூறி தாயிடம் அழுதுள்ளனர். இதனால்  அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் தாய் சீமா உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு மைய தொடர்பு எண்ணான 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்  அவர்கள் உடனடியாக இதுதொடர்பாக விசாரணை நடத்தி காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த அந்த சிறுமிகளின் தாத்தா செல்வத்தை போலீசார் கைது செய்தனர். மேலும்  இந்த பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த சுரேஷ், மணி, மற்றும்   தெரசாள் புனிதா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கிய குற்றவாளி எஸ்.டி.ரவிக்குமார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவரை தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் எந்த வித தகவலையும் தெரிவிக்க மறுத்தனர்.


பேத்திகளுக்கு பாலியில் தொல்லை; தாத்தா உள்ளிட்ட 4 பேர் போக்சோவில் கைது!

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக சிறுமிகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் சென்னை பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், தடகள பயிற்சியாளர் நாகராஜ், ஆசிரியர் கெவிராஜ், தனியார் உண்டு உறைவிட பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தொடர்ந்து சிறுமிகள், மாணவிகள் என பெண்களுக்கான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதைத் தொடர்ந்து இந்த குற்றங்களை ஒடுக்க கடுமையான தண்டனைகளை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். போக்சோ போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தும், இது போன்ற குற்றங்கள் தொடர்வது தடுக்கப்பட வேண்டும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget