![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ஆசிட் வீசி கொல்லப்பட்ட தங்கை : இளைஞரை கொன்று பழிதீர்த்த சகோதரர்கள்.. நடந்தது என்ன?
உத்தரபிரதேசத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட தனது தங்கைக்காக, இளைஞரை கோடாரியால் வெட்டி கொலை செய்து சகோதரர்கள் பழிதீர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![ஆசிட் வீசி கொல்லப்பட்ட தங்கை : இளைஞரை கொன்று பழிதீர்த்த சகோதரர்கள்.. நடந்தது என்ன? Gorakhpur Shocker Ahead of Bhai Dooj, Two Brothers 'Avenge' Killing of Sister Murder Man Who Killed Her With Acid for Rejecting Love Proposal ஆசிட் வீசி கொல்லப்பட்ட தங்கை : இளைஞரை கொன்று பழிதீர்த்த சகோதரர்கள்.. நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/15/79050eb3fe9f248cbd47f159f92fa6fc1700041286481102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள முக்கிய நகரம் கோரக்பூர். இந்த நகரத்தில் அமைந்துள்ளது நௌஷத் சௌகி பகுதியில் அமைந்துள்ள கிராமம் பிப்ரி கிராமம். இந்த நிலையில், இந்த பகுதியில் வசித்து வரும் இளைஞர் உமேஷ் சவுகான். அவருக்கு வயது 35. வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
மாயமான இளைஞர்:
பாய் தூஜ் பண்டிகை கொண்டாட்டத்திற்காக மக்கள் தயாராக இருந்த நிலையில், உமேஷ் சவுகான் திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் காணாத அவரது குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். தீபாவளி பண்டிகை இரவு அன்று காணாமல்போன உமேஷ் சவுகானை, தேடிக் கண்டுபிடித்து தருமாறு அந்த பகுதியில் உள்ள போலீசாரிடம் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
இதையடுத்து, போலீசார் உமேஷ் சவுகானைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பிப்ரி கிராமத்திற்கு அருகில் உள்ள புது காலனியில் ரத்தக்கறை இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த பகுதியில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த பகுதியில் வசித்து வரும் சகோதரர்கள் இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பழிக்குப்பழி:
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாரிடம் சிக்கிய சகோதரர்களின் தங்கையை உமேஷ் சவுகான் ஒரு தலையாக காதலித்ததாகவும், ஆனால் உமேஷின் காதலை ஏற்க அவர்களின் சகோதரி மறுப்பு தெரிவித்ததாகவும் கூறினர். மேலும், உமேஷின் காதலை ஏற்காத காரணத்தால் உமேஷ் அவர்களது சகோதரி மீது ஆசிட் ஊற்றி கொலை செய்து விட்டதாக அதிர்ச்சிகரமான தகவல்களை கூறினர்.
இதன் காரணமாக, தங்களது சகோதரி மரணத்திற்கு காரணமான உமேஷை கொலை செய்ய வேண்டும் என்று சகோதரர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, திட்டமிட்டு தீபாவளியன்று உமேஷை திட்டமிட்டபடி கொலை செய்துள்ளனர். உமேஷை கடத்தி அவரை கோடாரியில் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர், உமேஷின் உடலை இரு சக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்று ராப்தி நதியில் புதைத்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, போலீசார் சகோதரர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும், ராப்தி நதியில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் உமேஷின் உடலையும் போலீசார் தேடி வருகின்றனர். தங்கையின் மரணத்திற்கு காரணமான இளைஞரை 10 ஆண்டுகளுக்கு பிறகு கோடாரியில் வெட்டி சகோதரர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: ஆம்னி பேருந்தில் மருத்துவ மாணவிக்கு பாலியல் சீண்டல் - கல்லூரி மாணவர்களுக்கு உறவினர்கள் தர்ம அடி
மேலும் படிக்க: சேலத்தில் பல கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் மோசடி.. காவல் நிலையத்தில் குவியும் புகார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)