மேலும் அறிய

கிஷோர் கே சுவாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

தலைவர்கள் மீது அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட கிஷோர் கே சுவாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மறைந்த தலைவர்கள் மீது சமூக வலைதளமான முகநூல், டுவிட்டர்களிலும் யூ டியூப்பிலும் அவதூறு பரப்பும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. இந்த வகையில், கடந்தாண்டுகளில் திராவிட இயக்கத் தலைவர்கள் மீது சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில், மறைந்த முதல்வர் கருணாநிதி, அண்ணா மற்றுமு் பெரியார் மீது கிஷோர் கே சுவாமி என்பவர் சமூக வலைதளங்களிலும், யூ டியூப்பிலும் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றியும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார்.

இந்த நிலையில், அவர் மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த ஜூன் 10-ந் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் 153 கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1) (b) அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுதல், 505(1) (c) ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.

இதனையடுத்து, கிஷோர் கே சுவாமியை ஜூன் 28-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, தாம்பரம் கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, அவரை போலீசார் சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிஷோர் கே சுவாமி மீது இன்று குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கிஷோர் கே சுவாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களையும் மிகவும் இழிவாக பேசிவந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தருமபுரி எம்.பி.யை தரக்குறைவாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வரும் சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு “ சரளமாக ஆங்கிலத்திலோ, தமிழிலோ ஒரு கடிதம் கூட எழுதவராது என்றாலும் படிக்குற எல்லாரும் டாக்டர் ஆயிடனும். அப்புறம் யார்தான் பேஷண்ட்??? எல்லாரும் பல்லக்கு ஏறிட்டா பல்லக்கை யார்தான் தூக்குறதாம்??? குழந்தைகளை படுத்துவது நீட் அல்ல பெற்றோர்கள்தான்.” இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

நீட் தேர்வால் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், கிஷோர் கே சுவாமியின் இந்த பதிவுக்கு பலரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். இதுமட்டுமின்றி தமிழகத்தில் இருந்து இந்திய அணி கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் நடராஜனை சாதிப்பெயர் குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டும் கடுமையான கண்டனங்களுக்கு ஆளாகினார். இதுமட்டுமின்றி, பேரறிவாளன் விடுதலைக்காக போராடி வரும் அற்புதம்மாள் பற்றியும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றியும் மிகவும் அவதூறாக பதிவிட்டுள்ளார். கிஷோர் கே சுவாமி தீவிர தீவிர வலதுசாரி ஆதரவாளர் என்பது  குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு கிஷோர் கே சுவாமி குடித்துவிட்டு தெருவில் ஆடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget