மேலும் அறிய

கிஷோர் கே சுவாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

தலைவர்கள் மீது அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட கிஷோர் கே சுவாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மறைந்த தலைவர்கள் மீது சமூக வலைதளமான முகநூல், டுவிட்டர்களிலும் யூ டியூப்பிலும் அவதூறு பரப்பும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. இந்த வகையில், கடந்தாண்டுகளில் திராவிட இயக்கத் தலைவர்கள் மீது சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில், மறைந்த முதல்வர் கருணாநிதி, அண்ணா மற்றுமு் பெரியார் மீது கிஷோர் கே சுவாமி என்பவர் சமூக வலைதளங்களிலும், யூ டியூப்பிலும் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றியும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார்.

இந்த நிலையில், அவர் மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த ஜூன் 10-ந் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் 153 கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1) (b) அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுதல், 505(1) (c) ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.

இதனையடுத்து, கிஷோர் கே சுவாமியை ஜூன் 28-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, தாம்பரம் கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, அவரை போலீசார் சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிஷோர் கே சுவாமி மீது இன்று குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கிஷோர் கே சுவாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களையும் மிகவும் இழிவாக பேசிவந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தருமபுரி எம்.பி.யை தரக்குறைவாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வரும் சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு “ சரளமாக ஆங்கிலத்திலோ, தமிழிலோ ஒரு கடிதம் கூட எழுதவராது என்றாலும் படிக்குற எல்லாரும் டாக்டர் ஆயிடனும். அப்புறம் யார்தான் பேஷண்ட்??? எல்லாரும் பல்லக்கு ஏறிட்டா பல்லக்கை யார்தான் தூக்குறதாம்??? குழந்தைகளை படுத்துவது நீட் அல்ல பெற்றோர்கள்தான்.” இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

நீட் தேர்வால் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், கிஷோர் கே சுவாமியின் இந்த பதிவுக்கு பலரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். இதுமட்டுமின்றி தமிழகத்தில் இருந்து இந்திய அணி கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் நடராஜனை சாதிப்பெயர் குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டும் கடுமையான கண்டனங்களுக்கு ஆளாகினார். இதுமட்டுமின்றி, பேரறிவாளன் விடுதலைக்காக போராடி வரும் அற்புதம்மாள் பற்றியும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றியும் மிகவும் அவதூறாக பதிவிட்டுள்ளார். கிஷோர் கே சுவாமி தீவிர தீவிர வலதுசாரி ஆதரவாளர் என்பது  குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு கிஷோர் கே சுவாமி குடித்துவிட்டு தெருவில் ஆடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

தலைப்பு செய்திகள்

Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Embed widget