மேலும் அறிய

பணி ஓய்வுக்குப்பின்னும் தேடிய போலீஸ்! 9 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுமி கண்டுபிடிப்பு!

ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், பூஜா காணாமல்போன கவலையில் மன அழுத்தத்துக்குச் சென்ற அவளுடைய தந்தை சந்தோஷ் தற்போது இல்லாதது கவலையை ஏற்படுத்துவதாக பூஜாவின் தாய் தெரிவித்துள்ளார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஏழு வயது சிறுமியாக காணாமல் போனவரை மும்பை காவல் துறையினர் கண்டுபிடித்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ள செயல் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

கடத்தல் தம்பதி கைது

2013ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி அந்தேரியில் உள்ள முனிசிபல் பள்ளிக்கு செல்லும் வழியில் பூஜா கவுட் எனும் 7 வயது சிறுமி காணாமல் போனார். இந்நிலையில்,  பல ஆண்டுகளாக விடாமல் தேடப்பட்டு வந்த அவரைக் கடத்திய எலக்ட்ரீஷியன் ஹாரி  டிசோசா மற்றும் அவரது மனைவி சோனி இருவரையும் மும்பை காவல் துறையினர் கைது செய்தனர்.

தற்போது 16 வயதை எட்டியுள்ள இப்பெண்ணை ஜூஹு கல்லி பகுதியில் வசிக்கும் அவரது தாய் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் முன்னதாக மும்பை காவல் துறையினர் சேர்த்து வைத்தனர்.

பணி ஓய்வுக்குப் பிறகும் தேடிய காவல் ஆய்வாளர்

டிஎன் நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட காணாமல் போனவர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத வழக்காக இவ்வழக்கு விளங்கி வந்த நிலையில், அங்கு பணியாற்றி வந்த உதவி காவல் ஆய்வாளர் ராஜேந்திர போசலே (வயது 66) 2015ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

ஆனால் இவ்வழக்கு குறித்து தன் பணி ஓய்வுக்குப் பிறகும் தொடர்ந்து யோசித்து வந்த ராஜேந்திர போசலே தொடர்ந்து தான் மும்பையைச் சுற்றி பயணிக்கும்போதெல்லாம் சிறுமியின் புகைப்படத்தை எடுத்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

வீட்டு வேலை செய்ய வைத்த தம்பதி

கடந்த ஆண்டு பூஜாவின் தந்தை மற்றும் தாத்தா, பாட்டி உயிரிழந்த நிலையில், குழந்தை இல்லாத தம்பதியால் சிறுமி கடத்தப்பட்டதாக  உள்ளூர்வாசிகள் அளித்த  தகவலைக் கொண்டு காவல் துறையினர் தொடர்ந்து அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில் சில காலம் கழித்து தங்களுக்கு குழந்தை பிறந்ததும், பூஜாவை இத்தம்பதி பல இடங்களில் வீட்டு வேலை செய்ய வைத்து சம்பாதித்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் முன்னதாக் பூஜா தொலைந்து போனது குறித்து நினைவுகூர்ந்த அவரது சகோதரர் ரோஹித், "எனக்கு அவள் பள்ளி சீருடையில் இருந்தது நினைவிருக்கிறது. அவள் முனிசிபல் பள்ளிக்கு அருகில் ஒரு கட்டை மீது அமர்ந்து கொண்டு உடன் வர மறுத்துவிட்டாள். நான் 10 அடி முன் நடந்துசென்ற நிலையில், பள்ளிக்கு 15 நிமிடங்கள் தாமதமானதால், அவளை வரச் சொல்லிவிட்டு முன் சென்று விட்டேன்.

பள்ளிக்கு அருகே கடத்தல்

டி.என்.நகர் மூத்த ஆய்வாளர் மிலிந்த் குர்டே கூறுகையில் ”கடத்தல்காரர்கள் ஹாரி டிசோசாவும் அவரது மனைவி சோனியும் அவளை பள்ளியிலிருந்து சிறிது தூரத்தில் கடத்திச் சென்றுள்ளனர். ஐஸ் வாங்கித் தருவதாக உறுதியளித்து டிசோசா அழைத்துச் சென்ற நிலையில், தங்களுக்கு குழந்தை இல்லாததால் அவரது பெயரை ஆனி என மாற்றினர்.

எனினும் அவரை வீட்டு வேலை செய்ய வைத்து வந்த டிசோசா தம்பதி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்கு குழந்தை பிறந்ததும் அவளை வேறு இடங்களில் வேலைக்காரியாக வேலை செய்ய வைத்தனர்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் பூஜாவைத் தாக்கியும் அவரது சம்பளத்தை பிடுங்கிக் கொண்டும் கொடுமைப்படுத்தியும் வந்த நிலையில், அவர்கள் தன் பெற்றோர் அல்ல என்பதை என்பதை பூஜா உணர்ந்ததாகவும் மிலிந்த் குர்டே தெரிவித்துள்ளார்.

தாய் மகிழ்ச்சி

கடலை விற்று வேலை செய்துவரும் பூஜாவின் தாய் பூனம் பூஜாவை இனி தான் பார்ப்பேன் என்ற நம்பிக்கையை இழந்திருந்ததாகவும், பூஜா மீண்டும் கிடைத்ததில் அவரது வீட்டினர் அனைவரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் பூஜாவைப் பார்க்க முடியாமல் துக்கத்தில் உயிரிழந்த அவரது தாத்தா, பாட்டி மற்றும் பூஜா காணாமல்போன கவலையில் மன அழுத்தத்துக்குச் சென்ற அவளுடைய தந்தை சந்தோஷும் தற்போது இல்லாதது கவலையை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடத்தப்பட்டு ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு சிறுமியை மீண்டும் அவரது குடும்பத்தினருடன் இணைக்க டிஎன் நகர் காவல் குழு மேற்கொண்ட இந்த வெற்றிகரமான முயற்சிக்கு மும்பை காவல் ஆணையர் விவேக் பன்சால்கர் பாராட்டு தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget