மேலும் அறிய

சிறுமி கடத்தல்: இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு, அதிர்ச்சியூட்டும் முடிவு! போலீசார் அதிரடி கைது

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடந்த குற்றச் செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.

பள்ளி சென்று வீடு திரும்பாத சிறுமி

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அரசு பள்ளியில் 9 - ம் வகுப்பு படிக்கும் மாணவி , கடந்த 2 - ம் தேதி காலை பள்ளிக்குச் சென்றுள்ளார். மாலையில் வீடு திரும்பவில்லை. விசாரணையில் சிறுமி செய்த தவறுக்காக தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி 'இன்ஸ்டாகிராம்' எனும் சமூக வலைதளம் மூலம் பழக்கமான பிராட்வேயைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சஞ்சய் ( வயது 20 ) என்பவருடன் மூன்று நாட்களாக ஊர் சுற்றித் திரிந்தது தெரிய வந்தது. விசாரித்த போலீசார் சிறுமியை கடத்திய வழக்கில் சஞ்சயை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கஞ்சா கடத்திய ஆட்டோ ஓட்டுனர் கைது

சென்னை திருநின்றவூர் அடுத்த கொட்டாமேடு சோதனை சாவடியில் நேற்று முன் தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் , அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் 1.100 கிலோ கஞ்சா இருந்துள்ளது. பூந்தமல்லி அடுத்த விநாயகர்புரத்தைச் சேர்ந்த பிரேம்குமார் ( வயது 25 ) என்ற ஆட்டோ ஒட்டுநரை போலீசார் கைது செய்தனர். இதே போல் , செங்குன்றம் , செட்டிமேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசாரின் வாகன சோதனையின் போது , இருசக்கர வாகனத்தில் போதை பொருள் கடத்திய நாரவாரிகுப்பத்தைச் சேர்ந்த முகமதுபயாஸ் ( வயது 22 ) என்பவர் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 85 கிலோ குட்கா உள்ளிட்ட போதை பொருட்களான பான்பராக் , ஹான்ஸ்களை பறிமுதல் அ. அவரது கூட்டாளி ராமு ( வயது 38 ) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

லிப்ட் கேட்டு ஏறி , தனியார் வங்கி மேலாளருக்கு கத்தியை காட்டி கொலை மிரட்டல்

சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் அஜய் ( வயது 24 ) தனியார் வங்கி மேலாளர். ஒத்தக்கடை தெரு வழியாக 2ம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற இவரிடம் , அயனாவரம் வரை செல்ல உதவி கேட்டு இருவர் ஏறினர். ஓட்டேரி அருகே கத்தியை காட்டி பணம் கேட்டு அஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை விசாரித்த போலீசார் ஓட்டேரியைச் பகுதியை சேர்ந்த சூர்யா ( வயது 26 ) நந்தகுமார் ( வயது 28 ) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இரு தரப்பினரிடையே வாக்குவாதம் - தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல்

சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்தவர்வர்கள் அர்ஜுனன் மற்றும் லட்சுமணன். கடந்த 4ம் தேதி சக பணியாளர்களுடன் தி.நகர் ரங்கநாதன் தெருவில் கிடந்த குப்பையை பிளாஸ்டிக் பைகளில் பைகளில் சேகரித்து, அருகில் உள்ள தனியார் துணிக்கடையின் வாசலில் வைத்துள்ளார். அங்கு வந்த கடையின் உரிமையாளர் நாகூர் மீரான் , குப்பையை எடுக்கும்படி தகாத வார்த்தையால் அவரை பேசியுள்ளார். இதை துப்பரவு மேற்பார்வையாளர் லட்சுமணன் தட்டிக் கேட்டுள்ளார். இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு நாகூர் மீரான் மற்றும் கடையின் ஊழியர்கள் , அர்ஜுனனையும் , லட்சுமணனையும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். துாய்மை பணியாளர்களின் புகாரையடுத்து , நாகூர் மீரான் ( வயது 32 ) மற்றும் ஊழியர் தர்மதுரை ( வயது 33 ) ஆகிய இருவரையும் மாம்பலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தவறுதலாக கால் பட்டதால் , அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய இளைஞர்கள்

திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் மோத்தி ( வயது 30 ) மாநகர பேருந்து நடத்துநர். இவர் பிராட்வே பேருந்து நிலையம் அருகே கடையில் டீ குடித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அருகில் நின்றவரின் மீது தவறுதலாக கால்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவர் தன் நண்பருடன் சேர்ந்து மோத்தியை சரமாரியாக தாக்கியுள்ளார். படுகாயமடைந்த மோத்த, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிந்து , நடத்துநரை தாக்கிய பாரிமுனையைச் சேர்ந்த மணிகண்டன் ( வயது 18 ) , கவுதம் ( வயது 19 ) ஆகியோரை கைது செய்தனர்.

தலைப்பு செய்திகள்

"எங்களுக்குப் புற்றுநோய் வந்துடும்!" - மயிலாடுதுறையில் அஞ்சும் பொதுமக்கள்: வீதிக்கு வந்து போராட்டம்!
நச்சுப் புகையால் திணறும் ஆன்மீக நவகிரக ஸ்தலம்;  திருவெண்காட்டில் தொடரும் சுகாதாரச் சீர்கேடு!
நச்சுப் புகையால் திணறும் ஆன்மீக நவகிரக ஸ்தலம்;  திருவெண்காட்டில் தொடரும் சுகாதாரச் சீர்கேடு!
நண்பனைக் காப்பாற்றச் சென்று உயிரை விட்ட சோகம்... விஷவாயு தாக்கி ஒருவர் பலி; ஆபத்தான நிலையில் 3 பேர்..
நண்பனைக் காப்பாற்றச் சென்று உயிரை விட்ட சோகம்... விஷவாயு தாக்கி ஒருவர் பலி; ஆபத்தான நிலையில் 3 பேர்..
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Embed widget