மேலும் அறிய

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் சீர்காழி காவலர்கள்! கண் பார்வையற்றவரின் பரபரப்பு வீடியோ!

கண்பார்வை அற்ற மாற்று திறனாளியை தாக்கியதாக சீர்காழி காவலர் மீது சமூக வலைதளங்களில்  குற்றச்சாட்டு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு புற்றடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பிரகாரத்தில் பேச்சியம்மன், துர்க்கை, நாகர், ஆஞ்சநேயர், ஐயப்பன் ஆகிய சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர்.  இத்தலத்தில் திருமண வரம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலை முன்வைக்கும் பக்தர்கள் அவை  நிறைவேறியதும் அம்பாளுக்கு மாவிளக்கு இட்டு நேர்த்திக்கடன் செலுத்தி தீ மிதிப்பது வழக்கம். ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் தீமிதி விழாவில் பிரார்த்தனை நிறைவேறிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தீமிதி திருவிழா அவை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.


அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் சீர்காழி காவலர்கள்! கண் பார்வையற்றவரின் பரபரப்பு வீடியோ!

இத்தகைய சிறப்பு பெற்ற கோயில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வை செய்திட கோயில் நிர்வாகிகள் முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து திருப்பணி பணிகளை மேற்கொண்டு நிறைவு செய்து.  அதனை தொடர்ந்து கடந்த மாதம் ஏப்ரல் 29 ம் தேதி காலை தருமபுரம் ஆதினம் இருபத்தி ஏழாவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில்  கும்பாபிஷேக நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் சீர்காழி காவலர்கள்! கண் பார்வையற்றவரின் பரபரப்பு வீடியோ!

இந்நிலையில் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள சீர்காழி அருகே உள்ள திருவாலி கிராமத்தை சேர்ந்த கண்பார்வை அற்ற சரவணன் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது கும்பாபிஷேக விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த சீர்காழி காவல்நிலைய காவலர் ஒருவர் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதாக தன்னை கண்பார்வை அற்றவர் என்றும் பாராமல் கடுமையாக தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தன்னை தாக்கிய காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சரவணன் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

 


அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் சீர்காழி காவலர்கள்! கண் பார்வையற்றவரின் பரபரப்பு வீடியோ!

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், சீர்காழி காவல் நிலையத்தில் உள்ளேயே காவலரை மிரட்டிய வீடியோ, சீர்காழி காவலரை போனில் மிரட்டிய ஆடியோ, சாராய விற்பனைக்கு காவலர்கள் துணை போவதாக வெளியாக வீடியோ என பல்வேறு பதிவுகள் சீர்காழி காவல்நிலையம் பற்றி தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் கண்பார்வை அற்ற மாற்று திறனாளி தாக்கியதாக பரவும் வீடியோ சீர்காழி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சீர்காழி காவல் நிலையம் குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவுகளின் அடிப்படையில் உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget