மேலும் அறிய

மதுரை மங்கி குல்லா திருடர்கள் மதுரையில் மாட்டியது எப்படி?

மதுரை மாநகர் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாநகர் பகுதிகளான செல்லூர், அய்யர்பங்களா, சுப்பிரமணியபுரம், எஸ்.எஸ்.காலனி போன்ற இடங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து தொடர்ச்சியாக திருட்டு மற்றும் கொள்ளைச்சம்பவங்கள் நடைபெற்று வருவதாக, மதுரை மாநகர காவல்துறைக்கு தொடர் புகார்கள் வந்தன. இரவு நேரங்களில் நடைபெறும் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் 2-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டன. இதில் திருட்டுச்சம்பவங்கள் நடைபெற்ற பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு அதனடிப்படையில், தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான தேனி மாவட்டம், அல்லிநகரத்தை சேர்ந்த சோனிராஜா, மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த பெரியராமு, சுலைமான், அழகர்சாமி, ராஜ்குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
 
மதுரை மங்கி குல்லா திருடர்கள் மதுரையில் மாட்டியது எப்படி?
இதில் குற்றவாளி சோனி ராஜாவிடமிருந்து 5 இடங்களில் திருடப்பட்ட விலை உயர்ந்த பைக், எல்.இ.டி டி.வி, மற்றும் 6 பவுன் தங்க நகைகளும், சுலைமானிடமிருந்து 8 வழக்குகளில் தொடர்புடைய 32 சவரன் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன. பெரியராமுவிடமிருந்து 7 சவரன் தங்க நகைகள் ஒரு கிலோ வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் காவல்துறையின் விசாரணையில் ஐந்து பேரும் திருப்பூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும், சின்னாளபட்டியில் கோவில் உண்டியல்களில் திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  தடயம் இல்லாமல் திருட்டில் ஈடுபடுவதற்காக குற்றவாளிகள் பயன்படுத்திய கையுறைகள் மற்றும் மங்கி குல்லா உள்ளிட்டவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மதுரை மங்கி குல்லா திருடர்கள் மதுரையில் மாட்டியது எப்படி?

குற்றவாளிகள் ஐந்து பேரிடம் இருந்து மொத்தம் 14 வழக்குகளில் திருடுபோன 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள 55 பவுன் தங்க நகைகள், ரூ.17,5000 மதிப்புள்ள ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், 1 லட்சம் மதிப்புள்ள இரண்டு இருசக்கர வாகனங்கள், உண்டியல் திருட்டில் களவுபோன 42ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 25,ஆயிரம் மதிப்புள்ள கலர் டி.வி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேற்படி வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டறிந்து வழக்குகளில் பறிபோன சுமார் ரூ.24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், மற்றும் பொருட்களை கைப்பற்றிய தனிப்படை காவல்துறையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பாராட்டினார்.

மதுரை மங்கி குல்லா திருடர்கள் மதுரையில் மாட்டியது எப்படி?
மதுரை மாநகரில் இதுவரை 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள், தங்களது வசிப்பிடங்கள் மற்றும் தங்களது வணிக நிறுவன வளாகங்களில் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்தி சமூக விரோத மற்றும் குற்றசம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த உதவிடுமாறு மதுரை மாநகர காவல்துறை கமிஷனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Embed widget