மேலும் அறிய

Financial institution fraud: அதிக வட்டி தருவதாக ரூ.9 ஆயிரம் கோடி மோசடி: தலைமறைவான நிதி நிறுவன தலைவர்கள்... துப்பு கொடுத்தால் பரிசு

மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றிய நிதி நிறுவனங்களின் தலைவர்கள் துப்பு கொடுத்தால் பரிசு அளிக்க்ப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

நிதி நிறுவனங்கள் மோசடி குறித்து தமிழ்நாடு காவல்துறை நேற்று இரவு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது,

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு, அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் பொதுமக்களிடம் பணம் பெற்றுள்ளன. அதில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம், ஹிஜாவு அசோசியேட்ஸ் பிரைவேட லிமிடெட், எல்.என்.எஸ் சர்வதேச நிதி சேவை என்ற நிறுவனம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை என கூறப்படுகிறது.

மோசடி:

தமிழ்நாட்டில் பல பகுதிகளில், மக்களிடம் பணம் பெற்று, அதிக வட்டி தருவதாக நிதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பின்னர் பணம் தராமல் ஏமாற்றியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து, ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 37 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிறுவனத்தில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 255 பேர் முதலீடு செய்துள்ளதாகவும், பொதுமக்கள் சுமார் ரூ. 2,438 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஆருத்ரா நிறுவனம் தொடர்பாக 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பாஸ்கர், மோகன் பாபு உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ராஜசேகர் ஹரிஸ், மைக்கேல் ராஜ், நாராயணி  ஆகியோர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் எல்.என்.எல் நிறுவனத்தில் ஒரு லட்சம் மக்கள் முதலீடு செய்துள்ளதாகவும், ரூ. 6 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீட்டு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், லட்சுமி  நாராயணன், வேதநாராயணன், ஜனார்த்தனன், மோகன்பாபு ஆகியொர் தேடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஹிஜாவு நிறுவனம் சுமார் 600 கோடி ரூபாய் முதலீடு பெற்றுள்ளதாகவும்  கூறப்படுகிறது. இந்நிறுவன வழக்கில் சவுந்தராஜன் என்பவரும், அவரது மகன் அலெக்சாண்டர் என்பவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Also Read: தீபாவளி சீட்டு நடத்தி மோசடி நடத்திய குடும்பம்! ரூ.20 கோடி வசூல்… கைத்துப்பாக்கியுடன் 4 பேர் கைது!

தக்க சன்மானம்:

இந்நிலையில், 3 நிறுவனங்கள் தொடர்பாக தலைமறைவாக உள்ளவர்கள் மீது புகார் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவிக்கையில், 3 நிறுவனங்களில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் முதலீடு செய்துள்ளனர். மேலும் 9 ஆயிரம் கோடிக்கு மேலாக முதலீடு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் இழந்த பணத்தை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Also Read: Crime: தாபா ஹோட்டல் உரிமையாளர் தாக்கப்பட்டு படுகொலை... தலைமுறைவாக இருந்த பணியாளர் கைது.. நடந்தது என்ன?

Also Read: Crime: அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு - பெரம்பலூரில் கொள்ளையர்கள் கைவரிசை

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Embed widget