மேலும் அறிய

Savukku Shankar : பெண் காவலர்களை இழிவாக பேசிய சங்கர்? பெண் காவலர்களை வைத்தே சவுக்கை சுழற்றும் காவல்துறை!

"காவல்துறையில் பெண் காவலர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் அவர்களின் பணியையும் வெளிக்காட்டும் விதத்தில் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு காவல்துறை எடுத்துள்ளது”

பிரபல யூடுபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை இழிவாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் முதலில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டர். பின்னர், திருச்சி மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.  அடுத்தடுத்து சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சவுக்கு சங்கர் மீது தொடர்ச்சியாக வழக்கு பதியப்பட்டுக்கொண்டே இருக்கிறது.Savukku Shankar : பெண் காவலர்களை இழிவாக பேசிய சங்கர்? பெண் காவலர்களை வைத்தே சவுக்கை சுழற்றும் காவல்துறை!

பெண் காவலர்களை வைத்தே பாடம் புகட்டும் தமிழ்நாடு காவல்துறை

இந்நிலையில், பெண் காவலர்களை இழிவாக பேசியதாக கூறப்படும் சவுக்கு சங்கருக்கு பெண் காவலர்களை வைத்தே தமிழ்நாடு காவல்துறை பாடம் புகட்ட முடிவு செய்தது. அதன் அடிப்படையில், சவுக்கு சங்கரின் நண்பரும் ரெட் பிக்ஸ் யூடுப் நிறுவனருமான பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் சவுக்கை பேட்டி எடுத்ததற்காக வழக்கு பதிவு செய்து, அவரை டெல்லி சென்று திருச்சி மாவட்ட போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.

பெண் காவலர்களை வைத்தே நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பெலிக்ஸ்

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும்போது ஆண் காவலர்களை தவிர்த்து முழுக்க முழுக்க பெண் காவலர்களை வைத்தே அவரை நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு காவல்துறை அழைத்து சென்றது. நீதிமன்ற காவலில் பெலிக்சை வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அவரை சிறைக்கும் பெண் காவலர்களே அழைத்துச் சென்றனர்.

பெண் காவலர்களால் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படும் சவுக்கு

அதே பாணியில், கோவை சிறையில் இருந்து இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சவுக்கு சங்கரை முழுக்க முழுக்க திருச்சி மாவட்ட பெண் காவலர்களே அழைத்து செல்கின்றனர். போலீஸ் வேனில் கடைசி இருக்கையில் அமர வைக்கப்பட்ட சவுக்கு சங்கருக்கு இருபுறமும் பெண் காவலர்களே அமர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டுச் செல்கின்றனர்.Savukku Shankar : பெண் காவலர்களை இழிவாக பேசிய சங்கர்? பெண் காவலர்களை வைத்தே சவுக்கை சுழற்றும் காவல்துறை!

பெண் காவலர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நடவடிக்கை

பெண் காவலர்களை தவறாக பேசியதால், அவர்களின் பணியையும் உழைப்பையும் சவுக்கு சங்கருக்கு உணர்த்தும் வகையிலும், அவருக்கு பாடம் புகட்டும் விதத்திலும் இந்த ஏற்பாட்டை தமிழ்நாடு காவல்துறை செய்துள்ளது. அதேபோல், பெண் காவலர்களை அலட்சியமாக பார்க்கும் மற்றவர்களும் பெண் காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு அளிக்கும் முக்கியத்துவம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதால், பெண் காவலர்களே இந்த வழக்கில் முழுக்க முழுக்க ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சவுக்கு சங்கர் மீதான வழக்கின் பின்னணி

காவல் உயர் அதிகாரி ஒருவரையும் பெண் காவலர்களையும் தொடர்ந்து சவுக்கு சங்கர் இழிவாக பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு அவரது யூடுயூப் சேனலுக்கு நேர்காணல் அளித்த சவுக்கு சங்கர், அந்த நேர்காணலில் பெண் காவலர்கள் குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்ததாகவும் அந்த காவல்துறை உயர் அதிகாரி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை எந்த ஆதாரமும் இன்றி பேசியதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

அதன்பிறகு, சவுக்கு சங்கர் நடத்தும் யூடுயூப் சேனலில் இருந்து நீதிமன்றமன்ற செய்திகளை வழங்கும் செய்தியாளர் ராஜினமா செய்தார். இவரை மோசடி வழக்கில் அதற்கு முன்னர் காவல்துறை கைது செய்திருந்தது. அடுத்ததாக, அந்த சேனலின் எடிட்டராக இருந்த முத்துலீஃப் என்பரும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதற்கிடையில் தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் அங்கு சென்று கைது செய்தனர். அப்போது, அவர் காரில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததாக தனியாக ஒரு வழக்கும் சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்ட காவல்துறையால் பதியப்பட்டது.

பின்னர், திருச்சி மாவட்டத்தில் ஏ.எஸ்.பி.யாக இருக்கும் யாஸ்மின் என்ற பெண் போலீஸ்  அதிகாரி கொடுத்த புகாரின்பேரிலும் சவுக்கு சங்கர் மீது திருச்சி சைபர் கிரைம் போலீசார் தனியாக இன்னொரு வழக்கை பதிவு செய்து, அவரை சிறையில் இருக்கும்போதே கைது செய்தனர். இந்நிலையில், அந்த வழக்கில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து திருச்சி அழைத்துவரும்போதுதான், முழுக்க முழுக்க பெண் போலீசாரே அவரை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தும்போது, போலீஸ் கஸ்டடி கேட்டு திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
" என் புருஷனை விடு , இல்லைனா ரயில் முன்னாடி விழுவேன் " ரயில் நிலையத்தில் பரபரத்த வடமாநில பெண்
விழுப்புரத்தில் பயங்கரம்! சொகுசு பஸ் - கார் - பைக் அடுத்தடுத்து மோதி ரத்தக் களறியான நெடுஞ்சாலை: 2 பேர் துடிதுடித்து பலி!
விழுப்புரத்தில் பயங்கரம்! சொகுசு பஸ் - கார் - பைக் அடுத்தடுத்து மோதி ரத்தக் களறியான நெடுஞ்சாலை: 2 பேர் துடிதுடித்து பலி!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget