மேலும் அறிய

'எத்தனை பேரு என் பொண்ண செதப்பீங்க' - கதறிய தாய், ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

’’ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மற்றும் பூசாரி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது’’

குணசேகரன் என்ற நபர், ராமநாதபுரம் மாவட்டம் நைனார் கோவில் சாலை அருகே உள்ள தொன்னை குருசாமி கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதான மகள் ஒருவர் உள்ள நிலையில், குணசேகரன் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சில நேரங்களில் கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.  பெற்ற தந்தையே இப்படி செய்வதை நினைத்து  மனவேதனை அடைந்த சிறுமியின் தாய், இது குறித்து காவல் நிலையத்தில் தெரிவிக்கவில்லை. மாறாக, சிவக்குமார் என்ற பூசாரி ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளார். இந்த பூசாரி, சூரங்கோட்டை காலணி அருகே உள்ள கொட்டகை கிராமத்தை சேர்ந்தவர். சிறுமியின் தாயார், தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அந்த பூசாரியிடம் கூறியுள்ளார்.


எத்தனை பேரு என் பொண்ண செதப்பீங்க' - கதறிய தாய், ராமநாதபுரத்தில்  16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

இதனையடுத்து, பூசாரி உங்கள் மகளை என்னிடம் அழைத்து வந்து எனது வீட்டில் தங்க வைக்குமாறும், பூஜைகள் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி தாய் தன் மகளை பூசாரியிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பூசாரி, இனிமேல் உங்கள் கணவரிடம் இருந்து சிறுமியை பாதுகாப்பது என் கடமை என ஆசைவார்த்தை தெரிவித்துள்ளார். இதை நம்பிய சிறுமியின் தாய், சிறுமியை அழைத்து வந்து அவரின் வீட்டில் ஒரு நாள் தங்கியுள்ளனர். இதைப் பயன்படுத்திய பூசாரி சிவக்குமார் சிறுமியை இரவில் பாலியல் வன்கொடுமை  செய்துள்ளார். இது குறித்து சிறுமி அவரது தாயாரிடம் அழுது கொண்டே கூறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இது தொடர்பாக ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி, சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சிறுமியின் தந்தை குணசேகரன், பூசாரி சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


எத்தனை பேரு என் பொண்ண செதப்பீங்க' - கதறிய தாய், ராமநாதபுரத்தில்  16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

இந்த கொடுமையான சம்பவம் குறித்து நாம் காவல்துறையினரிடம் விசாரித்தோம்', அவர்கள்  நம்மிடம் கூறுகையில், ராமநாதபுரம் அடுத்த நைனார் கோவில் சாலை அருகே உள்ள தொன்னை குருசாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய 16 வயது மகளான சிறுமியை பாலியல் ரீதியாக தந்தையே துன்புறுத்தல் செய்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக சூரங்கோட்டை காலனி அருகே உள்ள கொட்டகை கிராமத்தில் பூசாரி சிவக்குமார் என்பவரை சிறுமியின் தாயார் சந்தித்து தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை விளக்கமாக தெரிவித்துள்ளார்,

இது தொடர்பாக பூசாரி சிவகுமார் தாயிடம் மகளை என்னிடம் அழைத்து வந்து எனது வீட்டில் தங்க வைக்குமாறும், பூஜைகள் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதனை நம்பி தாய் தன் மகளை பூசாரியிடம் அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து இனிமேல் அவரிடமிருந்து பாதுகாப்பது என் கடமை என ஆசைவார்த்தை தெரிவித்ததால் இதை நம்பி சிறுமியை தாய் அழைத்து வந்து அவரின் வீட்டில் ஒரு நாள் தங்கியுள்ளனர், இதை பயன்படுத்திய பூசாரி சிவக்குமார் சிறுமியை இரவில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி சிறுமி தாயாரிடம் தெரிவித்த பொழுது, அதிர்ச்சியடைந்த தாய் ராமநாதபுரம் பஜார் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.


எத்தனை பேரு என் பொண்ண செதப்பீங்க' - கதறிய தாய், ராமநாதபுரத்தில்  16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

இதை தொடர்ந்து பூசாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக சிறுமியிடம் நாங்கள்  விசாரணை நடத்தியதில், சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் போலீசார் சிறுமியின் தந்தை குணசேகரன், பூசாரி சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறுமி ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர், இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget