மேலும் அறிய

'எத்தனை பேரு என் பொண்ண செதப்பீங்க' - கதறிய தாய், ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

’’ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மற்றும் பூசாரி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது’’

குணசேகரன் என்ற நபர், ராமநாதபுரம் மாவட்டம் நைனார் கோவில் சாலை அருகே உள்ள தொன்னை குருசாமி கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதான மகள் ஒருவர் உள்ள நிலையில், குணசேகரன் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சில நேரங்களில் கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.  பெற்ற தந்தையே இப்படி செய்வதை நினைத்து  மனவேதனை அடைந்த சிறுமியின் தாய், இது குறித்து காவல் நிலையத்தில் தெரிவிக்கவில்லை. மாறாக, சிவக்குமார் என்ற பூசாரி ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளார். இந்த பூசாரி, சூரங்கோட்டை காலணி அருகே உள்ள கொட்டகை கிராமத்தை சேர்ந்தவர். சிறுமியின் தாயார், தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அந்த பூசாரியிடம் கூறியுள்ளார்.


எத்தனை பேரு என் பொண்ண செதப்பீங்க' - கதறிய தாய், ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

இதனையடுத்து, பூசாரி உங்கள் மகளை என்னிடம் அழைத்து வந்து எனது வீட்டில் தங்க வைக்குமாறும், பூஜைகள் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி தாய் தன் மகளை பூசாரியிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பூசாரி, இனிமேல் உங்கள் கணவரிடம் இருந்து சிறுமியை பாதுகாப்பது என் கடமை என ஆசைவார்த்தை தெரிவித்துள்ளார். இதை நம்பிய சிறுமியின் தாய், சிறுமியை அழைத்து வந்து அவரின் வீட்டில் ஒரு நாள் தங்கியுள்ளனர். இதைப் பயன்படுத்திய பூசாரி சிவக்குமார் சிறுமியை இரவில் பாலியல் வன்கொடுமை  செய்துள்ளார். இது குறித்து சிறுமி அவரது தாயாரிடம் அழுது கொண்டே கூறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இது தொடர்பாக ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி, சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சிறுமியின் தந்தை குணசேகரன், பூசாரி சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


எத்தனை பேரு என் பொண்ண செதப்பீங்க' - கதறிய தாய், ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

இந்த கொடுமையான சம்பவம் குறித்து நாம் காவல்துறையினரிடம் விசாரித்தோம்', அவர்கள்  நம்மிடம் கூறுகையில், ராமநாதபுரம் அடுத்த நைனார் கோவில் சாலை அருகே உள்ள தொன்னை குருசாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய 16 வயது மகளான சிறுமியை பாலியல் ரீதியாக தந்தையே துன்புறுத்தல் செய்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக சூரங்கோட்டை காலனி அருகே உள்ள கொட்டகை கிராமத்தில் பூசாரி சிவக்குமார் என்பவரை சிறுமியின் தாயார் சந்தித்து தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை விளக்கமாக தெரிவித்துள்ளார்,

இது தொடர்பாக பூசாரி சிவகுமார் தாயிடம் மகளை என்னிடம் அழைத்து வந்து எனது வீட்டில் தங்க வைக்குமாறும், பூஜைகள் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதனை நம்பி தாய் தன் மகளை பூசாரியிடம் அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து இனிமேல் அவரிடமிருந்து பாதுகாப்பது என் கடமை என ஆசைவார்த்தை தெரிவித்ததால் இதை நம்பி சிறுமியை தாய் அழைத்து வந்து அவரின் வீட்டில் ஒரு நாள் தங்கியுள்ளனர், இதை பயன்படுத்திய பூசாரி சிவக்குமார் சிறுமியை இரவில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி சிறுமி தாயாரிடம் தெரிவித்த பொழுது, அதிர்ச்சியடைந்த தாய் ராமநாதபுரம் பஜார் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.


எத்தனை பேரு என் பொண்ண செதப்பீங்க' - கதறிய தாய், ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

இதை தொடர்ந்து பூசாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக சிறுமியிடம் நாங்கள்  விசாரணை நடத்தியதில், சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் போலீசார் சிறுமியின் தந்தை குணசேகரன், பூசாரி சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறுமி ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர், இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Embed widget