மேலும் அறிய

பாம்புக்கடிக்கு சிகிச்சை பெற சென்ற விவசாயி தற்கொலை: அரசு மருத்துமனையில் அதிர்ச்சி சம்பவம்!

சேகராஜை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை கடித்தது கட்டுவிரியன் பாம்பு என்றும், இதனால் விஷம் அவருடைய கால் முழுவதும் பரவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கு சிகிச்சைப் பெற்று வந்த விவசாயி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகேயுள்ள கலிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சேகராஜ். விவசாயியான இவரை கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி வீட்டு தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தப்போது, புதருக்குள் பதுங்கி இருந்த பாம்பு கடித்தது. இதனால் வலியால் அலறி துடித்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சேகராஜை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை கடித்தது கட்டுவிரியன் பாம்பு என்றும், இதனால் விஷம் அவருடைய கால் முழுவதும் பரவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சேகராஜூக்கு மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் விஷத்தால் ஏற்பட்ட பாதிப்பு அவருக்கு குறையவில்லை என சொல்லப்படுகிறது. இதனிடையே நேற்று அதிகாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறிய சேகராஜ், அறுவை சிகிச்சை அறைக்கு செல்லும் வழியில் உள்ள இரும்பு கேட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

அதிகாலை நேரம் என்பதால் மருத்துவமனையில் அந்த பாதையில் பொதுமக்கள், மருத்துவ பணியாளர்கள் நடமாட்டம் குறைவாக இருந்துள்ளதால், சேகராஜ் தற்கொலை செய்துக் கொண்டதை யாரும் கவனிக்கவில்லை. பின்னர் பொழுது விடிந்ததும் ஒருவர் தூக்கில் தொங்குவதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவித்தனர். உடனடியாக நிர்வாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சேகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பாம்பு கடிக்கு சிகிச்சைப் பெற வந்த சேகராஜூக்கு விஷ பாதிப்பால் கால்களில் தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

₹10 எக்ஸ்ட்ரா வாங்குவது ஏன்? - சீக்ரெட் லிஸ்ட்டை உடைத்த டாஸ்மாக் ஊழியர்கள்!
₹10 எக்ஸ்ட்ரா வாங்குவது ஏன்? - சீக்ரெட் லிஸ்ட்டை உடைத்த டாஸ்மாக் ஊழியர்கள்!
கோவையை அதிரவைத்த கள்ள நோட்டு கும்பல் – 1998 குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்பு ?
கோவையை அதிரவைத்த கள்ள நோட்டு கும்பல் – 1998 குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்பு ?
நெஞ்சை பதறவைத்த சம்பவம் : போக்சோ நீதிமன்றம் அதிரடி - ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை
நெஞ்சை பதறவைத்த சம்பவம் : போக்சோ நீதிமன்றம் அதிரடி - ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை
Crime: அடங்காத காதல்.. கணவனை கொன்ற மனைவி.. உதவிய முன்னாள், இந்நாள் காதலன்!
Crime: அடங்காத காதல்.. கணவனை கொன்ற மனைவி.. உதவிய முன்னாள், இந்நாள் காதலன்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Kanimozhi Santhosh issue | ”மகாராணி-னு நினைப்போ
யானை விழுந்து மனைவி பலி கண்களை தானம் செய்த கணவர் “அவ கடைசி வரை பார்க்கணும்”
பினராயி கோட்டையை வீழ்த்தியகாங்கிரஸின் பிரம்மாஸ்திரம் !யார் இந்த வி.டி.சதீசன்?
Elephant Attack | கையில் குழந்தையுடன் போராடிய கணவன்..யானை மிதித்து தாய் பலி!வைரல் வீடியோ
PTR Palanivel Thiagarajan | ”தோத்துருவேனு நினைக்கல! விஜய்க்கு இவ்ளோ ஓட்டா” PTR எமோஷனல் பதிவு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam : தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Vijay: தவெகவின் முதல் MP யார்? டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஜாக்பாட் யாருக்கு? - விஜய் தீவிர ஆலோசனை
தவெகவின் முதல் MP யார்? டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஜாக்பாட் யாருக்கு? - விஜய் தீவிர ஆலோசனை
Annamalai : ’அவர் மீண்டும் வரனும் – பாஜகவில் எழத் தொடங்கியது கலக குரல்’ தலைவராகிறாரா அண்ணாமலை..?
’அண்ணாமலைக்கு ஆதரவாக எழும் குரல்கள்’ மீண்டும் பாஜக தலைவர் ?
Karthigai Deepam: திடீர் என்ட்ரி கொடுத்த ராஜா சேதுபதி.. மாப்பிள்ளைக்கு மாமியாரின் புது சேலஞ்ச்!
Karthigai Deepam: திடீர் என்ட்ரி கொடுத்த ராஜா சேதுபதி.. மாப்பிள்ளைக்கு மாமியாரின் புது சேலஞ்ச்!
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
குறையுமா குற்றங்கள்? மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கும்பல் அட்டூழியம்
குறையுமா குற்றங்கள்? மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கும்பல் அட்டூழியம்
TN Govt Vs GCC: ஜார்ஜ் கோட்டையை உரசும் ரிப்பன் பில்டிங்..! CM-ஐ இதுவரை சந்திக்காத மேயர் - கவுன்சிலர்கள் ஆப்சென்ட்
ஜார்ஜ் கோட்டையை உரசும் ரிப்பன் பில்டிங்..! CM-ஐ இதுவரை சந்திக்காத மேயர் - கவுன்சிலர்கள் ஆப்சென்ட்
Embed widget