மேலும் அறிய

காட்டிக் கொடுத்தவர் கதையை முடிக்க புறப்பட்ட ரவுடி: வீடு மாறியது தெரியாமல் பெட்ரோல் குண்டு வீசி சிக்கினார்!

பிரபல ரவுடிக்கு நேர்ந்த இந்த ‛நான் அப்டேட்’ சம்பவம், சக ரவுடிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை திரு.வி.க.நகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி மணிகண்டன் என்ற குள்ளமணி. 32 வயதானவர். சில மாதங்களுக்கு முன் அங்குள்ள சுனாமி புதிய குடியிருப்பு பகுதியில் வசிக்கும் திருநங்கை ஒருவருக்கும், மணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு மோதலாக மாற, ஆத்திரமடைந்த குள்ளமணி, திருநங்கையின் பாட்டியை கத்தியால் வெட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திருநங்கையின் உறவினரான மாரிமுத்து என்பவர் தண்டையார்பேட்டை போலீசாருக்கு புகார் செய்துள்ளார்.


காட்டிக் கொடுத்தவர் கதையை முடிக்க புறப்பட்ட ரவுடி: வீடு மாறியது தெரியாமல் பெட்ரோல் குண்டு வீசி சிக்கினார்!

அந்த புகாரின் பேரில் குள்ளமணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறைவாசத்திற்குப் பின் வெளியே ஜாமீனில் வெளியே வந்த குள்ளமணி, தன்னை போலீசில் பிடித்துக் கொடுத்த மாரிமுத்துவை பழிவாங்க திட்டமிட்டார். இதற்காக அவரது குடும்பத்தாரையே தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். திட்டமிட்டபடி பெட்ரோல் குண்டு ஒன்றை தயார் செய்து, மாரிமுத்து வசித்த வீட்டை தேடிப்பிடித்து அங்கு பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். வீட்டின் கதவில் தீப்பற்றியதால் அங்கிருந்து குள்ளமணி தப்பியோடினார். 

பெட்ரோல் குண்டுவீச்சில் மாரிமுத்து கதை முடிந்து போயிருக்கும் என நினைத்திருந்த குள்ளமணிக்கு மறுநாள் பேரதிர்ச்சி காத்திருந்தது. அதே தண்டையார் பேட்டை போலீசார் மீண்டும் குள்ளமணியை தேடி வந்தனர். இந்த முறை நினைத்ததை முடித்த லட்சியத்தோடு சிறைக்குச் செல்ல தயாரானார் குள்ளமணி. ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது, லட்சியம் நிறைவேறவில்லை, தன் லட்சணம் தான் தெரியவந்தது என்று. 



காட்டிக் கொடுத்தவர் கதையை முடிக்க புறப்பட்ட ரவுடி: வீடு மாறியது தெரியாமல் பெட்ரோல் குண்டு வீசி சிக்கினார்!

தான் வசித்து வந்த வீட்டிலிருந்து மாரிமுத்து காலி செய்து வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். இந்த விபரம் தெரியாமல், யாரோ ஒருவர் சொன்ன அடையாளத்தை எடுத்துக் கொண்டு வேறொருவர் வசிக்கும் வீட்டில் குள்ளமணி பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. சென்னை தண்டையார் பேட்டை கைலாச முதலி தெரு சுனாமி புதிய குடியிருப்பில் உள்ள அந்த வீட்டில், ஓய்வு பெற்ற சென்னை துறைமுக ஊழியரான ரூபகாந்தன் என்பவர் தான் வசித்து வந்துள்ளார். 

72 வயதான அவர், தன் மனைவி ஜெயலட்சுமியுடன் வசித்துவந்த நிலையில், திடீரென பெட்ரோல் குண்டு வீசப்பட்டு கதவி தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் அளித்த தகவலின் பேரில் தான் மீண்டும் குள்ளமணி கைது செய்யப்பட்டார். நல்வாய்ப்பாக இந்த குண்டுவீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குள்ளமணியின் அத்தனை பிளான்களும் நமத்து போன பட்டாசாக மாறியதும், மீண்டும் வந்த இடத்திற்கே திரும்ப அடைக்கப்பட்டது தான் நடந்தது. பிரபல ரவுடிக்கு நேர்ந்த இந்த ‛நான் அப்டேட்’ சம்பவம், சக ரவுடிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
EPS: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விஷக் காய்ச்சல்; நோயாளிகளுக்கு ஒரே ஊசி? வேடிக்கை பார்க்கும் அரசு- ஈபிஎஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விஷக் காய்ச்சல்; நோயாளிகளுக்கு ஒரே ஊசி? வேடிக்கை பார்க்கும் அரசு- ஈபிஎஸ் கண்டனம்
Tirupati Laddu Row: ’திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் கூடாது’- புதிய குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்!
Tirupati Laddu Row: ’திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் கூடாது’- புதிய குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman AIIMS Controversy : ’’தற்குறி.. உளறாதே!’’கட்சியை காப்பாத்திக்கோ’’ சீமானை விளாசிய  திமுகPriyanka Mohan : மொத்தமாக சரிந்த மேடை! விழுந்த பிரியங்கா மோகன்! ஷாக்கான ரசிகர்கள்Pawan Kalyan on Udhayanidhi : VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
EPS: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விஷக் காய்ச்சல்; நோயாளிகளுக்கு ஒரே ஊசி? வேடிக்கை பார்க்கும் அரசு- ஈபிஎஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விஷக் காய்ச்சல்; நோயாளிகளுக்கு ஒரே ஊசி? வேடிக்கை பார்க்கும் அரசு- ஈபிஎஸ் கண்டனம்
Tirupati Laddu Row: ’திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் கூடாது’- புதிய குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்!
Tirupati Laddu Row: ’திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் கூடாது’- புதிய குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்!
Breaking News LIVE OCT 4: அடுத்த ஹிஸ்புல்லா தலைமை கொல்லப்பட்டதாக தகவல். லெபனானில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE OCT 4: அடுத்த ஹிஸ்புல்லா தலைமை கொல்லப்பட்டதாக தகவல். லெபனானில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
Embed widget