மேலும் அறிய

காட்டிக் கொடுத்தவர் கதையை முடிக்க புறப்பட்ட ரவுடி: வீடு மாறியது தெரியாமல் பெட்ரோல் குண்டு வீசி சிக்கினார்!

பிரபல ரவுடிக்கு நேர்ந்த இந்த ‛நான் அப்டேட்’ சம்பவம், சக ரவுடிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை திரு.வி.க.நகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி மணிகண்டன் என்ற குள்ளமணி. 32 வயதானவர். சில மாதங்களுக்கு முன் அங்குள்ள சுனாமி புதிய குடியிருப்பு பகுதியில் வசிக்கும் திருநங்கை ஒருவருக்கும், மணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு மோதலாக மாற, ஆத்திரமடைந்த குள்ளமணி, திருநங்கையின் பாட்டியை கத்தியால் வெட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திருநங்கையின் உறவினரான மாரிமுத்து என்பவர் தண்டையார்பேட்டை போலீசாருக்கு புகார் செய்துள்ளார்.


காட்டிக் கொடுத்தவர் கதையை முடிக்க புறப்பட்ட ரவுடி: வீடு மாறியது தெரியாமல் பெட்ரோல் குண்டு வீசி சிக்கினார்!

அந்த புகாரின் பேரில் குள்ளமணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறைவாசத்திற்குப் பின் வெளியே ஜாமீனில் வெளியே வந்த குள்ளமணி, தன்னை போலீசில் பிடித்துக் கொடுத்த மாரிமுத்துவை பழிவாங்க திட்டமிட்டார். இதற்காக அவரது குடும்பத்தாரையே தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். திட்டமிட்டபடி பெட்ரோல் குண்டு ஒன்றை தயார் செய்து, மாரிமுத்து வசித்த வீட்டை தேடிப்பிடித்து அங்கு பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். வீட்டின் கதவில் தீப்பற்றியதால் அங்கிருந்து குள்ளமணி தப்பியோடினார். 

பெட்ரோல் குண்டுவீச்சில் மாரிமுத்து கதை முடிந்து போயிருக்கும் என நினைத்திருந்த குள்ளமணிக்கு மறுநாள் பேரதிர்ச்சி காத்திருந்தது. அதே தண்டையார் பேட்டை போலீசார் மீண்டும் குள்ளமணியை தேடி வந்தனர். இந்த முறை நினைத்ததை முடித்த லட்சியத்தோடு சிறைக்குச் செல்ல தயாரானார் குள்ளமணி. ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது, லட்சியம் நிறைவேறவில்லை, தன் லட்சணம் தான் தெரியவந்தது என்று. 



காட்டிக் கொடுத்தவர் கதையை முடிக்க புறப்பட்ட ரவுடி: வீடு மாறியது தெரியாமல் பெட்ரோல் குண்டு வீசி சிக்கினார்!

தான் வசித்து வந்த வீட்டிலிருந்து மாரிமுத்து காலி செய்து வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். இந்த விபரம் தெரியாமல், யாரோ ஒருவர் சொன்ன அடையாளத்தை எடுத்துக் கொண்டு வேறொருவர் வசிக்கும் வீட்டில் குள்ளமணி பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. சென்னை தண்டையார் பேட்டை கைலாச முதலி தெரு சுனாமி புதிய குடியிருப்பில் உள்ள அந்த வீட்டில், ஓய்வு பெற்ற சென்னை துறைமுக ஊழியரான ரூபகாந்தன் என்பவர் தான் வசித்து வந்துள்ளார். 

72 வயதான அவர், தன் மனைவி ஜெயலட்சுமியுடன் வசித்துவந்த நிலையில், திடீரென பெட்ரோல் குண்டு வீசப்பட்டு கதவி தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் அளித்த தகவலின் பேரில் தான் மீண்டும் குள்ளமணி கைது செய்யப்பட்டார். நல்வாய்ப்பாக இந்த குண்டுவீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குள்ளமணியின் அத்தனை பிளான்களும் நமத்து போன பட்டாசாக மாறியதும், மீண்டும் வந்த இடத்திற்கே திரும்ப அடைக்கப்பட்டது தான் நடந்தது. பிரபல ரவுடிக்கு நேர்ந்த இந்த ‛நான் அப்டேட்’ சம்பவம், சக ரவுடிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget