மேலும் அறிய

Crime : காதலன்தான் வேணும்.. கணவரை கொல்ல மனைவியும், காதலனும் செய்த பயங்கரம்.. நாமக்கல்லில் பகீர்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய கூலிக்கு ஆளை அனுப்பிய மனைவியை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை ஈண்முகா நகரை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி கிருத்திகா இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். நடராஜன் வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். 

இந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை (நேற்று) காலை கிருத்திகா பரமத்தியில் உள்ள கடை ஒன்றுக்கு சென்று வருவதாக கணவர் நடராஜனிடம் கூறிவிட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது, வீட்டில் நடராஜன் மட்டும் தனியாக இருந்தநிலையில், மர்ம நபர் ஒருவர் திடீரென வீட்டுக்குள் அரிவாளால் நடராஜனின் கழுத்து கை கால் ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். முடிந்தளவு தடுக்க முயன்ற நடராஜன் ஒரு கட்டத்தில் தன்னிலை மறந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார். 

நடராஜனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது நடராஜன் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். மேலும், தாக்குதலில் ஈடுப்பட்ட நபர் அக்கம் பக்கத்தினரை பார்த்ததும் தப்பி ஓடியுள்ளார். அந்த மர்ம நபரை விரட்டிச்சென்ற அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து பரமத்திவேலூர் காவல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த கிடந்த நடராஜனை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நடராஜனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

கொலை வெறி தாக்குதல் நடத்தியவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நடராஜனின் மனைவி கிருத்திகாவுக்கு கோபாலன் என்ற நபருக்கும் தொடக்கத்தில் நட்பு ஏற்பட்டு நாளடையில் அது தவறான உறவாக மாறியுள்ளது.  இருவரும் நெருங்கிப் பழகி வந்ததை அறிந்த கணவர நடராஜன், தனது மனைவியை கண்டித்ததால் பலமுறை அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, தங்கள் காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் நடராஜனை தீர்த்துக் கட்ட முடிவெடுத்த கிருத்திகா. காதலன் கோபாலுடன். சேர்ந்து தனியார் உணவு விடுதி ஒன்றில் வேலைபார்த்து வந்த யோகேஸ்வரனை கூலிக்கு அமர்த்தி நடராஜனை தீர்த்துக்கட்ட சதி திட்டம் தீட்டியுள்ளனர்.

தொடர்ந்து, திட்டமிட்டபடி சம்பவத்துக்கு முன்னதாக வீட்டை விட்டு வெளியேறிய கிருத்திகா வீட்டில் கணவர் நடராஜன் தனியாக இருக்கும் தகவலை காதலன் கோபாலிடம் தெரிவித்துள்ளார். தகவல் கிடைத்ததும் கொடுத்ததும் யோகேஸ்வரன் அரிவாளுடன் வீடு புகுந்து நடராஜனை சரமாரியாக வெட்டியதாக காவல்துறையில்  தெரிவித்துள்ளார். கணவனை கொலை செய்ய கூலிக்கு ஆள் அனுப்பி விட்டு அப்பாவி போல் நாடகமாடிய மனைவி கிருத்திகாவை கைது செய்த  காவல்துறையினர் தலைமறைவான காதலன் கோபாலை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"என் உயிர் போனாலும் பரவாயில்லை.." சீர்காழியில் தமிழருக்காக தன் வாழ்வைப் பணயம் வைத்த வடமாநில கேட் கீப்பர்..!
" சித்தப்பா இன்னும் தூங்குறாரு " ரத்தக் கறையை துடைத்து விட்டு காபி குடித்த மனைவி
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
Seeman Slams Keerthana : ‘இதெல்லாம் என்ன? அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு..!
‘அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு!
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
Renault Kwid Best Variant: தெறிக்கவிடும் ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட்; அதுல பெஸ்ட் வேரியண்ட் எதுன்னு தெரியுமா.? ஒப்பீடு இதோ
தெறிக்கவிடும் ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட்; அதுல பெஸ்ட் வேரியண்ட் எதுன்னு தெரியுமா.? ஒப்பீடு இதோ
US Iran Hormuz: துக்கத்திற்கு நடுவிலும் தாக்குதல்.! ஹார்முஸில் தாக்கப்பட்ட 2 கப்பல்கள்; ஈரானை கைகாட்டும் அமெரிக்கா
துக்கத்திற்கு நடுவிலும் தாக்குதல்.! ஹார்முஸில் தாக்கப்பட்ட 2 கப்பல்கள்; ஈரானை கைகாட்டும் அமெரிக்கா
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
Embed widget