மேலும் அறிய

பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்த ஜோடி... பக்கா பிளானுடன் பார்த்த கேடி வேலை... குற்றவாளியை பிடிக்க தனிப்படை தீவிரம்!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்து தந்திரமாக திருடிய தம்பதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ராதிகா. கார்த்திக் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளிப்கார்ட்டில் நிறுவனத்தில் சுமார்  44 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச், 44,900 ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினி மற்றும் 546 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருள் என மூன்று பொருட்களை கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்துள்ளார். 

பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு ஈரோடு சங்கு நகர் பகுதியில் செயல்பட்டுவரும் இன்ஸ்டா கார்ட் நிறுவனம் தான் டெலிவரி மற்றும் ரிட்டர்ன் பணிகளை செய்து வந்தது. இந்தநிலையில், அந்த நிறுவனத்தில் டெலிவரி பையனாக  பணிபுரியும் நவீன் என்பவர் சம்பவத்தன்று கார்த்திக் ஆர்டர் செய்த மடிக்கணினி, ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட மூன்று பொருட்களை கார்த்திக் வீட்டில் கொடுத்துள்ளார். 

அப்போது பொருளை பெற்றுக்கொண்ட ராதிகா, தனது கணவர் கார்த்திக்கிடம் அந்த பொருள்களை கொடுத்துவிட்டு டெலிவரி பாய் நவீனிடம் சுமார் 30 நிமிடம் ஜாலியாக பேசி கவனத்தை திசை திருப்பியுள்ளார்.

பின்னர் கார்த்திக் மூன்று பார்சல்களில் ஒரு பார்சலை மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ள 2 பார்சலை நவீனிடம் கொடுத்து விட்டு தன்னால், ஆன்லைனில் பணம் செலுத்த முடியவில்லை என்று தெரிவித்து, வாங்கிய ஒரு பொருளுக்கு மட்டும் ரூ.546 கொடுத்து விட்டு நாளை பேமென்ட் செய்து மற்ற இரண்டு பொருட்களை பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். 

பின்னர் நவீன் மற்ற டெலிவரிகளை முடித்துக் கொண்டு இரவு அலுவலகத்திற்கு வந்து நடந்தவற்றை எல்லாம் தெரிவிக்க, சந்தேகமடைந்த உயரதிகாரிகள் சிசிடிவி முன்பு வைத்து அந்த பார்சலை திறந்து பார்த்தனர். அப்போது பிரித்த பார்சலில் ஆப்பிள் வாட்சுக்கு பதிலாக சாதாரண மலிவான பழைய வாட்ச் வைக்கப்பட்டு இருந்தது.


பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்த ஜோடி... பக்கா பிளானுடன் பார்த்த கேடி வேலை... குற்றவாளியை பிடிக்க தனிப்படை தீவிரம்!

அதேபோல்,  மடிக்கணினிக்கு பதில் மரக்கட்டை வைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து அந்த நிறுவனத்தினர் கார்த்திக் வீட்டுக்கு சென்று அவரது மனைவி ராதிகாவிடம் கேள்வியெழுப்பியபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசி அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தினர் மலையம்பாளையம் காவல்நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 5 ந்தேதி புகார் செய்தனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக் வீட்டுக்கு தேடி சென்றபோது அந்த ஜோடி தப்பி சென்று விட்டது தெரியவந்தது.

இதையடுத்து கார்த்திக் ராதிகா குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது. சேலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பிரிவில் வேலை பார்த்து வந்த கார்த்திக், அதே நிறுவனத்தில் வேலைபார்த்த ராதிகா என்ற பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளான்.

இவர்கள் காப்பீடி மற்றும் வங்கி கடன் ஏஜெண்டாக வேலை பார்த்த அனுபவத்தில் எளிதாக போலி ஆவணங்களை தயார் செய்து மோசடியும், கார்த்திக், ராதிகா தம்பதி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறைக்கும் சென்றுள்ளனர். இவர்கள் மீது கோவை, மதுரை, சென்னை போன்ற இடங்களிலும் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில் தற்போது சென்னையில் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் ராதிகாவை சென்னை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து, சென்னை காவல்துறையினர் கார்த்திக்கை தேடிவரும் நிலையில், தற்போது மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வீழ்ந்த தங்கம், ”அமைதி காக்கும் ஸ்டாலின்” விஜய் ஆவேசம், எடப்பாடி காட்டம் -தமிழகத்தில் இதுவரை
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி கொலை.. கனிமொழி எம்.பி., கடும் கண்டனம்!
இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி கொலை.. கனிமொழி எம்.பி., கடும் கண்டனம்!
Embed widget