மேலும் அறிய

பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்த ஜோடி... பக்கா பிளானுடன் பார்த்த கேடி வேலை... குற்றவாளியை பிடிக்க தனிப்படை தீவிரம்!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்து தந்திரமாக திருடிய தம்பதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ராதிகா. கார்த்திக் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளிப்கார்ட்டில் நிறுவனத்தில் சுமார்  44 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச், 44,900 ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினி மற்றும் 546 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருள் என மூன்று பொருட்களை கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்துள்ளார். 

பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு ஈரோடு சங்கு நகர் பகுதியில் செயல்பட்டுவரும் இன்ஸ்டா கார்ட் நிறுவனம் தான் டெலிவரி மற்றும் ரிட்டர்ன் பணிகளை செய்து வந்தது. இந்தநிலையில், அந்த நிறுவனத்தில் டெலிவரி பையனாக  பணிபுரியும் நவீன் என்பவர் சம்பவத்தன்று கார்த்திக் ஆர்டர் செய்த மடிக்கணினி, ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட மூன்று பொருட்களை கார்த்திக் வீட்டில் கொடுத்துள்ளார். 

அப்போது பொருளை பெற்றுக்கொண்ட ராதிகா, தனது கணவர் கார்த்திக்கிடம் அந்த பொருள்களை கொடுத்துவிட்டு டெலிவரி பாய் நவீனிடம் சுமார் 30 நிமிடம் ஜாலியாக பேசி கவனத்தை திசை திருப்பியுள்ளார்.

பின்னர் கார்த்திக் மூன்று பார்சல்களில் ஒரு பார்சலை மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ள 2 பார்சலை நவீனிடம் கொடுத்து விட்டு தன்னால், ஆன்லைனில் பணம் செலுத்த முடியவில்லை என்று தெரிவித்து, வாங்கிய ஒரு பொருளுக்கு மட்டும் ரூ.546 கொடுத்து விட்டு நாளை பேமென்ட் செய்து மற்ற இரண்டு பொருட்களை பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். 

பின்னர் நவீன் மற்ற டெலிவரிகளை முடித்துக் கொண்டு இரவு அலுவலகத்திற்கு வந்து நடந்தவற்றை எல்லாம் தெரிவிக்க, சந்தேகமடைந்த உயரதிகாரிகள் சிசிடிவி முன்பு வைத்து அந்த பார்சலை திறந்து பார்த்தனர். அப்போது பிரித்த பார்சலில் ஆப்பிள் வாட்சுக்கு பதிலாக சாதாரண மலிவான பழைய வாட்ச் வைக்கப்பட்டு இருந்தது.


பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்த ஜோடி... பக்கா பிளானுடன் பார்த்த கேடி வேலை... குற்றவாளியை பிடிக்க தனிப்படை தீவிரம்!

அதேபோல்,  மடிக்கணினிக்கு பதில் மரக்கட்டை வைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து அந்த நிறுவனத்தினர் கார்த்திக் வீட்டுக்கு சென்று அவரது மனைவி ராதிகாவிடம் கேள்வியெழுப்பியபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசி அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தினர் மலையம்பாளையம் காவல்நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 5 ந்தேதி புகார் செய்தனர். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக் வீட்டுக்கு தேடி சென்றபோது அந்த ஜோடி தப்பி சென்று விட்டது தெரியவந்தது.

இதையடுத்து கார்த்திக் ராதிகா குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது. சேலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பிரிவில் வேலை பார்த்து வந்த கார்த்திக், அதே நிறுவனத்தில் வேலைபார்த்த ராதிகா என்ற பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளான்.

இவர்கள் காப்பீடி மற்றும் வங்கி கடன் ஏஜெண்டாக வேலை பார்த்த அனுபவத்தில் எளிதாக போலி ஆவணங்களை தயார் செய்து மோசடியும், கார்த்திக், ராதிகா தம்பதி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறைக்கும் சென்றுள்ளனர். இவர்கள் மீது கோவை, மதுரை, சென்னை போன்ற இடங்களிலும் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில் தற்போது சென்னையில் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் ராதிகாவை சென்னை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து, சென்னை காவல்துறையினர் கார்த்திக்கை தேடிவரும் நிலையில், தற்போது மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சேலத்தில் கொடூரம்: பள்ளி மாணவனைக் கொன்று வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் - காரணம் என்ன?
சேலத்தில் கொடூரம்: பள்ளி மாணவனைக் கொன்று வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் - காரணம் என்ன?
Crime: சொந்த மகன் பிறப்பின் மீது சந்தேகம்.. கொடுமைப்படுத்தியே கொலை செய்த தந்தை
Crime: சொந்த மகன் பிறப்பின் மீது சந்தேகம்.. கொடுமைப்படுத்தியே கொலை செய்த தந்தை
திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை... வைகை ஆற்றில் வைத்து கொடூரம் !
திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை... வைகை ஆற்றில் வைத்து கொடூரம் !
பெற்ற மகளையே கொன்று நாடகமாடிய தாய்: விழுப்புரத்தில் பயங்கரம்! சிக்கியது எப்படி ?
பெற்ற மகளையே கொன்று நாடகமாடிய தாய்: விழுப்புரத்தில் பயங்கரம்! சிக்கியது எப்படி ?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK Clash: இரண்டாக உடைந்த அதிமுக; இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்; அடுத்த நகர்வு என்ன.?
இரண்டாக உடைந்த அதிமுக; இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்; அடுத்த நகர்வு என்ன.?
AIADMK: உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!
உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!
CM Vijay: எல்லாரையும் பார்த்த விஜய் இபிஎஸ்-ஐ சந்திக்காதது ஏன்? இதுதான் காரணமோ!
CM Vijay: எல்லாரையும் பார்த்த விஜய் இபிஎஸ்-ஐ சந்திக்காதது ஏன்? இதுதான் காரணமோ!
US Iran War Netanyahu: “உள்ள புகுந்து எடுக்கணும்“; ட்ரம்ப் கூறியது என்ன.? ‘போர் முடியவில்லை‘ என எச்சரிக்கும் நெதன்யாகு.!
“உள்ள புகுந்து எடுக்கணும்“; ட்ரம்ப் கூறியது என்ன.? ‘போர் முடியவில்லை‘ என எச்சரிக்கும் நெதன்யாகு.!
வறுமையில் வளர்ந்தாரா? சுத்தப்பொய் ! பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜயின் ஸ்கூல் மேட்
வறுமையில் வளர்ந்தாரா? சுத்தப்பொய் ! பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜயின் ஸ்கூல் மேட்
Most Unsafe Cars: ஐய்யோ, இந்த பிரபலமான குடும்ப கார்கள்ல பாதுகாப்பே இல்லையா.?! அதிர்ச்சியளிக்கும் NCAP மதிப்பீடுகள்
ஐய்யோ, இந்த பிரபலமான குடும்ப கார்கள்ல பாதுகாப்பே இல்லையா.?! அதிர்ச்சியளிக்கும் NCAP மதிப்பீடுகள்
CM Vijay-Vaiko Meet: ’’விசிலுக்கு ஓட்டு போட்டாங்க’’ வீட்டு ஊழியர்களை அறிமுகம் செய்த துரை வைகோ- திருஷ்டி சுற்றிய விஜய்
CM Vijay-Vaiko Meet: ’’விசிலுக்கு ஓட்டு போட்டாங்க’’ வீட்டு ஊழியர்களை அறிமுகம் செய்த துரை வைகோ- திருஷ்டி சுற்றிய விஜய்
புதுச்சேரியில் மீண்டும் 'ரங்கசாமி' சகாப்தம்: மே 13-ல் பதவியேற்பு விழா... அமைச்சரவை பட்டியல் தயார் - முழு விவரம் உள்ளே!
புதுச்சேரியில் மீண்டும் 'ரங்கசாமி' சகாப்தம்: மே 13-ல் பதவியேற்பு விழா... அமைச்சரவை பட்டியல் தயார் - முழு விவரம் உள்ளே!
Embed widget