மேலும் அறிய

Crime: தொடரும் போதைப் பொருட்கள் கடத்தல் - விழிபிதுங்கும் நிற்கும் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை

வெளிமாநிலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு மது, குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது என பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட  போதைப் பொருள் பயன்பாடு நாள் தோறும் அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும்  இதனால் இளைஞர், முதிர்வர்கள் மற்றும் இன்றி கல்லூரி, பள்ளி மாணவர்கள் கூட அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட பல்வேறு போதை வஸ்துகளை அதிகளவில் பயன்படுத்துவதாக அண்மையில் செய்திகள் வெளியானது. 


Crime: தொடரும் போதைப் பொருட்கள் கடத்தல் - விழிபிதுங்கும் நிற்கும் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை

இதனை அடுத்து, மயிலாடுதுறை மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு அதிக அளவிலான மது மற்றும் இன்றி குட்கா உள்ளிட்ட போதை பொருட்களும் அதிகளவில் கடத்தல் நடப்பதாக மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவல் அடுத்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின்பேரில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் அறிவழகன் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் மாவட்டத்தில் பல கடைகளில் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். 


Crime: தொடரும் போதைப் பொருட்கள் கடத்தல் - விழிபிதுங்கும் நிற்கும் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை

அப்போது, பெரம்பூர் காவல் சரகத்துக்கு உள்பட்ட கடலி கிராமத்தில் உள்ள 27 வயதான பொன்னரசன் என்பவரது கடையில் வைத்து இருவர் ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. அதனை தொடர்ந்து  விசாரணை மேற்கொண்டதில், பொன்னரசன் கடையில் காரைக்கால் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த 45 வயதான ராஜா, 50 வயதான மணிமாறன் என்பதும், அவர்கள் இருவரும் காரைக்காலில் இருந்து புகையிலைப் பொருள்களை கொண்டுவந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

Actor Bala Free Ambulance: மீண்டும் மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் .. நடிகர் பாலாவின் செயலால் நெகிழும் ரசிகர்கள்..!

இதனை தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், விமல் பாக்கு உள்ளிட்ட 55 கிலோ புகையிலை பொருள்கள் மற்றும் ராஜா, மணிமாறன், பொன்னரசன் ஆகிய மூவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து பெரம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் பூங்கா, மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் பல்வேறு போதைப் பொருளை பயன் படுத்தி போதையில் இருந்த நிலையில், அவர்களை பள்ளி ஆசிரியர் ஒருவர் துரத்தி சென்ற அறிவுரை வழங்கி பள்ளிக்கு அழைத்து வந்ததும் அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா அந்த பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டது குறிப்பிட்டத்தக்கது.


Crime: தொடரும் போதைப் பொருட்கள் கடத்தல் - விழிபிதுங்கும் நிற்கும் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை

மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுபோன்ற மது, கஞ்சா, ஹான்ஸ், புகையிலை போன்ற போதை வஸ்துக்கள் விற்பனையும், அதனை பயன்படுத்தும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், இதனை தடுப்பது என்பது காவல்துறையினருக்கு குதிரை கொம்பாக உள்ளதென்றும், இதில் தடுப்பதில் உள்ள சிக்கல் எது என்பதை முதலில் கண்டறிந்து முதல் அதனை சரி செய்தால் மட்டுமே இதை தடுக்கலாம் என்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Embed widget