மேலும் அறிய

Actor Bala Free Ambulance: மீண்டும் மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் .. நடிகர் பாலாவின் செயலால் நெகிழும் ரசிகர்கள்..!

இந்த வருடத்திற்குள் பத்து ஆம்புலன்ஸ்களை மக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் வழங்க உள்ளேன் என பாலா கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது முறையாக மலை கிராமத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக சின்னத்திரை நடிகர் விஜய் டிவி பாலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கிய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி சின்னத்திரை காமெடி தொடரில் பிரபலமானவர் நடிகர் பாலா, ஆதரவற்ற முதியோர்கள். ஆதரவற்ற குழந்தைகள் உள்ளிட்ட காப்பாகங்கள் நடத்தி வருவதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு கொடுத்து வருகிறார்.  மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக  அறந்தாங்கி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல் முறையாக ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலை கிராமத்தில் உட்பட்ட குன்றி மலைப்பகுதியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மலை கிராம மக்கள் பயன்படுத்தும் விதமாக ரூபாய் 10 லட்சம் மதிப்பில் ஆம்புலன்ஸ் சேவையினை நடிகர் விஜய் டிவி பாலா தன்னுடைய சொந்த செலவில் வழங்கினார்.

இதே போல் தொடர்ந்து மலைகளின் மக்கள் தேவைக்கு ஏற்ப வழங்குவது என தெரிவித்திருந்த பாலா, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பகுதிக்கு உட்பட்ட சோழகனை மலை கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் நடிகர் பாலா தன்னுடைய சொந்த செலவில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் சோழகனை மலை கிராம மக்கள் பயன்படுத்தும் விதமாக மேலும் அதே பகுதியில் 24 மணி நேரமும் நிறுத்தி வைக்கும் விதமாகவும் சிறிய ரக ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை பர்கூர் மலை கிராமத்திற்கு உட்பட்ட சோழகனை மலை கிராமத்தில் வழங்கினார். 

Actor Bala Free Ambulance: மீண்டும் மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் .. நடிகர் பாலாவின் செயலால் நெகிழும் ரசிகர்கள்..!

இது குறித்து அப்பகுதி மலை கிராம மக்கள் கூறுகையில், சோழகனை மலை கிராமத்தில்  இருந்து பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதற்கு 20 கிலோமீட்டர் தொலைவு இருப்பதாகவும். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் மருத்துவ வசதிக்காக கர்ப்பிணிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை டோலி கட்டி தூக்கி செல்லும் அவல நிலை இருந்து வந்ததாகவும். இது குறித்து மலை கிராம மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில்‌, இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த தன்னார்வலர் அமைப்பான உணர்வுகள் அமைப்பு சார்பில் நடிகர் பாலாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

உடனடியாக ரூபாய் 5 லட்சம் ரூபாய் செலவில் ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கி தருவதாக பாலா தெரிவித்தார். இதையடுத்து சோழகனை மலை கிராம மக்கள் பயன்பாட்டிற்காக ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி மலை கிராமத்தில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் பாலா மற்றும் நடிகர் அமுதவாணன், தன்னார்வலர் அமைப்பை சேர்ந்த மக்கள் ராஜன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் மற்றும் மலை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Actor Bala Free Ambulance: மீண்டும் மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் .. நடிகர் பாலாவின் செயலால் நெகிழும் ரசிகர்கள்..!

இதனைத் தொடர்ந்து பாலாவின் சொந்த செலவில் மலை கிராமத்தை சேர்ந்த 125 விவசாயிகளுக்கு.,  மண்வெட்டி, கடற்பாரை, கூடை உள்ளிட்ட வேளாண் உபகரணங்களும் வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக மலை கிராம மக்கள் தங்களது பாரம்பரிய இசை வாசித்தும் நடனமாடியும் நடிகர் பாலா வழங்கிய ஆம்புலன்சை உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பாலா, பலர் தன்னை விமர்சித்து வந்தாலும் கூட நான் எந்த விமர்சனங்களையும் உட்படுத்தாமல் மக்கள் பணியாற்றுவேன். இந்த வருடத்திற்குள் பத்து ஆம்புலன்ஸ்களை மக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் வழங்க உள்ளேன். எந்த செயலை செய்தாலும் விமர்சனங்கள் வரத்தான் செய்யும் அதை பொருட்படுத்தாமல் நாம் நமது செயலில் மட்டுமே நோக்கமாக இருந்து மக்களுக்கு உதவ வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Israel Attack | நேரலையில் செய்தி வாசித்த பெண்.. திடீரென தாக்கிய இஸ்ரேல்! பதற வைக்கும் வீடியோThirupattur | ”வெளிய வா உன்ன...” கத்தியை காட்டி மிரட்டல்!அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்!Annamalai vs EPS | Annamalai vs EPS |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Covid 19 Lockdown: என்னாது.. கொரோனா பரவலால் ஞாயிறு முழு ஊரடங்கா? அமைச்சர் மா.சு. சொன்னது என்ன?
Covid 19 Lockdown: என்னாது.. கொரோனா பரவலால் ஞாயிறு முழு ஊரடங்கா? அமைச்சர் மா.சு. சொன்னது என்ன?
ADGP Jayaraman: ஏடிஜிபியை கதறவிட்ட அஸ்ரா கார்க், ஏன் ஏரியாவில் என்ன வேலை? தவிக்கும் ஜெயராமன், சிக்கியது எப்படி?
ADGP Jayaraman: ஏடிஜிபியை கதறவிட்ட அஸ்ரா கார்க், ஏன் ஏரியாவில் என்ன வேலை? தவிக்கும் ஜெயராமன், சிக்கியது எப்படி?
போலி கையெழுத்து இட்டு கூட்டு சதி - ஏமாற்றப்பட்ட விவசாயி நீதி கேட்டு பல ஆண்டுகளாக போராட்டம்...!
போலி கையெழுத்து இட்டு கூட்டு சதி - ஏமாற்றப்பட்ட விவசாயி நீதி கேட்டு பல ஆண்டுகளாக போராட்டம்...!
Embed widget