மேலும் அறிய

சாலையோரத்தில் வாழ்பவர்களைப் போல வேடமிட்டு விசாரித்த காவல்துறையினர்.. பிடிபட்ட கொலையாளி!

மகாராஷ்ட்ராவின் தலைநகர் மும்பையில் காவல்துறையினர் சுமார் 100 சிசிடிவி கேமராக்களில் பார்வையிட்டதோடு, சாலையோரத்தில் வாழ்பவர்களைப் போல வேடமிட்டு, கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரைக் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்ட்ராவின் தலைநகர் மும்பையில் காவல்துறையினர் சுமார் 100 சிசிடிவி கேமராக்களில் பார்வையிட்டதோடு, சாலையோரத்தில் வாழ்பவர்களைப் போல வேடமிட்டு, கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரைக் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி 4 அன்று, மும்பையின் டோங்க்ரி பகுதியில் உள்ள லக்‌ஷ்மண் ஜாதவ் மார்க் என்ற இடத்தில் ரத்த வெள்ளத்தில் சாலையோரத்தில் நபர் ஒருவர் இருப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, பாதிக்கப்பட்ட நபரை அருகில் இருந்த ஜே.ஜே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 

அப்பகுதியைச் சேர்ந்த கடைக்காரர்கள், சாலையோரத்தில் வாழ்பவர்கள் ஆகியோரிடம் புகைப்படம் காட்டி விசாரித்ததில், இறந்தவரின் பெயர் அவிந்தர் வீரேந்திர சிங் எனவும், தினக்கூலியான அவர் தினமும் மது குடிக்கும் பழக்கம் கொண்டவர் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

சாலையோரத்தில் வாழ்பவர்களைப் போல வேடமிட்டு விசாரித்த காவல்துறையினர்.. பிடிபட்ட கொலையாளி!

இறந்தவரின் பிரேத பரிசோதனையில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும், காவல்துறை அதிகாரிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் நூற்றுக்கும் மேலான சிசிடிவி கேமராக்களைப் பார்வையிட்டுள்ளனர். ஜே.ஜே மருத்துவமனை, டோங்க்ரி, வி.பி சாலை முதலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மறைந்த அவிந்தர் வீரேந்திர சிங்குடன் சிவப்பு நிற பேண்ட் அணிந்த நபருடன் பேசிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

அந்த நபரைத் தேடிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்ததில் அவரது பெயர் ரம்யா என்கிற ஆனந்த நாக்நாத் என்பதும், அவரும் மறைந்த நபரும் மது குடிப்பது தொடர்பான மோதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. ரம்யா மீது சட்டப்பிரிவு 302 (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

`மறைந்த அவிந்தர் வீரேந்திர சிங்குடன் மோதலுக்குப் பிறகு, ரம்யா அப்பகுதியில் இருந்து தலைமறைவாகியுள்ளார் என்பதை முதலில் கண்டுபிடித்தோம். சாலையோர நடைபாதையில் வாழ்பவர்களைப் போல காவல்துறையினர் வேடமிட்டு, காத்திருந்து குற்றவாளியைப் பிடித்தோம்’ என டோங்க்ரி காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் ஷபானா ஷேக் தெரிவித்துள்ளார். 

சாலையோரத்தில் வாழ்பவர்களைப் போல வேடமிட்டு விசாரித்த காவல்துறையினர்.. பிடிபட்ட கொலையாளி!
காவல் ஆய்வாளர் ஷபானா ஷேக்

 

கடந்த ஜனவரி 17 அன்று, ஜே.ஜே மார்க் பகுதியில் உள்ள போஹ்ரி மொஹல்லாவில் காவல்துறையினர் ரம்யாவைக் கண்டுபிடித்துள்ளனர். அவரைப் பிடித்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்ததில், ரம்யாவும், மறைந்த அவிந்தர் வீரேந்திர சிங்கும் மது குடிக்கும் போது தகராறு ஏற்பட்டதாகவும், அதில் கோபத்தில் அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து அவிந்தர் வீரேந்திர சிங்கின் தலையின் தாக்கி விட்டு, ரம்யா தப்பியதாகவும் ஒப்புக் கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

டோங்க்ரி காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் துரித செயல்பாடும், விசாரணையில் மேற்கொள்ளப்பட்ட வித்தியாசமான அணுகுமுறையும் அப்பகுதி மக்களிடமும், அனைவரிடமும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. 

தலைப்பு செய்திகள்

சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்
கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
Nissan Tekton Review: மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
Embed widget