மேலும் அறிய

சாலையோரத்தில் வாழ்பவர்களைப் போல வேடமிட்டு விசாரித்த காவல்துறையினர்.. பிடிபட்ட கொலையாளி!

மகாராஷ்ட்ராவின் தலைநகர் மும்பையில் காவல்துறையினர் சுமார் 100 சிசிடிவி கேமராக்களில் பார்வையிட்டதோடு, சாலையோரத்தில் வாழ்பவர்களைப் போல வேடமிட்டு, கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரைக் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்ட்ராவின் தலைநகர் மும்பையில் காவல்துறையினர் சுமார் 100 சிசிடிவி கேமராக்களில் பார்வையிட்டதோடு, சாலையோரத்தில் வாழ்பவர்களைப் போல வேடமிட்டு, கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரைக் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி 4 அன்று, மும்பையின் டோங்க்ரி பகுதியில் உள்ள லக்‌ஷ்மண் ஜாதவ் மார்க் என்ற இடத்தில் ரத்த வெள்ளத்தில் சாலையோரத்தில் நபர் ஒருவர் இருப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, பாதிக்கப்பட்ட நபரை அருகில் இருந்த ஜே.ஜே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 

அப்பகுதியைச் சேர்ந்த கடைக்காரர்கள், சாலையோரத்தில் வாழ்பவர்கள் ஆகியோரிடம் புகைப்படம் காட்டி விசாரித்ததில், இறந்தவரின் பெயர் அவிந்தர் வீரேந்திர சிங் எனவும், தினக்கூலியான அவர் தினமும் மது குடிக்கும் பழக்கம் கொண்டவர் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

சாலையோரத்தில் வாழ்பவர்களைப் போல வேடமிட்டு விசாரித்த காவல்துறையினர்.. பிடிபட்ட கொலையாளி!

இறந்தவரின் பிரேத பரிசோதனையில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும், காவல்துறை அதிகாரிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் நூற்றுக்கும் மேலான சிசிடிவி கேமராக்களைப் பார்வையிட்டுள்ளனர். ஜே.ஜே மருத்துவமனை, டோங்க்ரி, வி.பி சாலை முதலான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மறைந்த அவிந்தர் வீரேந்திர சிங்குடன் சிவப்பு நிற பேண்ட் அணிந்த நபருடன் பேசிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

அந்த நபரைத் தேடிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்ததில் அவரது பெயர் ரம்யா என்கிற ஆனந்த நாக்நாத் என்பதும், அவரும் மறைந்த நபரும் மது குடிப்பது தொடர்பான மோதலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. ரம்யா மீது சட்டப்பிரிவு 302 (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

`மறைந்த அவிந்தர் வீரேந்திர சிங்குடன் மோதலுக்குப் பிறகு, ரம்யா அப்பகுதியில் இருந்து தலைமறைவாகியுள்ளார் என்பதை முதலில் கண்டுபிடித்தோம். சாலையோர நடைபாதையில் வாழ்பவர்களைப் போல காவல்துறையினர் வேடமிட்டு, காத்திருந்து குற்றவாளியைப் பிடித்தோம்’ என டோங்க்ரி காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் ஷபானா ஷேக் தெரிவித்துள்ளார். 

சாலையோரத்தில் வாழ்பவர்களைப் போல வேடமிட்டு விசாரித்த காவல்துறையினர்.. பிடிபட்ட கொலையாளி!
காவல் ஆய்வாளர் ஷபானா ஷேக்

 

கடந்த ஜனவரி 17 அன்று, ஜே.ஜே மார்க் பகுதியில் உள்ள போஹ்ரி மொஹல்லாவில் காவல்துறையினர் ரம்யாவைக் கண்டுபிடித்துள்ளனர். அவரைப் பிடித்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்ததில், ரம்யாவும், மறைந்த அவிந்தர் வீரேந்திர சிங்கும் மது குடிக்கும் போது தகராறு ஏற்பட்டதாகவும், அதில் கோபத்தில் அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து அவிந்தர் வீரேந்திர சிங்கின் தலையின் தாக்கி விட்டு, ரம்யா தப்பியதாகவும் ஒப்புக் கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

டோங்க்ரி காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் துரித செயல்பாடும், விசாரணையில் மேற்கொள்ளப்பட்ட வித்தியாசமான அணுகுமுறையும் அப்பகுதி மக்களிடமும், அனைவரிடமும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget