மேலும் அறிய

கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

கரூரில் சென்ன சமுத்திரம் பேரூராட்சி பெண் கவுன்சிலர் உடல் ஆடை கலைந்த நிலையில், அரை நிர்வாணமாக மீட்கப்பட்டதும். சம்பவ இடத்தில் தோடு மற்றும் வளையல்கள் இருந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

கரூரில் திமுக பெண் கவுன்சிலர் ரூபா கொலை வழக்கில் உடன் பணிபுரிந்த பெண் மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகைக்கு ஆசைப்பட்டு கணவருடன் சேர்ந்து தீர்த்துக் கட்டியதாக பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 


கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

கரூர் மாவட்டம், பவுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகில் காட்டுப் பகுதியில் ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி பெண் கவுன்சிலர் ரூபா என்பவர் கொலை செய்யப்பட்டு சடலமாக நேற்று மீட்கப்பட்டார். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் அரவக்குறிச்சி டிஎஸ்பி தலைமையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு கொலை குற்றவாளிகள் யார் என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

 


கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

கொலை நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களைப் பார்த்ததில், சந்தேகத்தின் அடிப்படையில், ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சாலைப்புதூர் பகுதிய சேர்ந்த கணவன், மனைவியான கதிர்வேல் - நித்யா ஆகிய இருவரையும் இன்று காலை சுமார் 8 மணி அளவில் கைது செய்த தனிப்படை போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

 


கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

 

நித்யாவும், ரூபாவும் கரூர் பகுதியில் வீட்டு வேலை செய்வதற்காக ஒரே பேருந்தில் வரும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரூபா நகைகள் அணிந்து பகட்டாக இருப்பதைப் பார்த்து, கணவர் கதிர்வேலிடம் நித்யா தெரிவித்துள்ளார். தொடர்ந்து சதித் திட்டம் தீட்டிய நித்யா - கதிர்வேல் தம்பதி, பவுத்திரம் பகுதியில் வீட்டு வேலை இருப்பதாக கூறி, ரூபாவை அப்பகுதிக்கு அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்துள்ளனர்.

 


கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

 

மேலும், ரூபா அணிந்திருந்த தங்கச் சங்கிலி, தோடு, மூக்குத்தி உள்ளிட்ட ஏழு சவரன் நகைகளை திருடியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கொலையாளிகள் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றம் அழைத்துச் சென்று இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். பெண் கவுன்சிலரை கொலை செய்த கணவன் மனைவி இருவரையும் 24 மணி நேரத்தில் கைது செய்த காவலர்களை எஸ்.பி சுந்தரவதனம் பாராட்டியுள்ளார்.

 

 


கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

காவல்துறை விசாரணை இப்படி இருக்க, பெண் கவுன்சிலர் ரூபா கொலை செய்யப்பட்டபோது மேலாடை கலைந்த நிலையில், அரை நிர்வாணத்துடன் மீட்கப்பட்டதுடன், அவர் காதில் அணிந்து இருந்த தோடு மற்றும் கை வளையல்கள் சம்பவ இடத்தில் இருந்தது, காவல்துறை விசாரணை உண்மைதானா? என பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

 


கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

 

காவல்துறை விசாரணையில் தங்க சங்கிலி, தோடு, மூக்குத்தி உள்ளிட்ட ஏழு சவரன் தங்க நகை திருடியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டதாக கூறியிருந்த நிலையில், சம்பவ இடத்தில் இறந்த கிடந்த ரூபா காதில் தோடு மற்றும் வளையல் இருந்தது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget