மேலும் அறிய

கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

கரூரில் சென்ன சமுத்திரம் பேரூராட்சி பெண் கவுன்சிலர் உடல் ஆடை கலைந்த நிலையில், அரை நிர்வாணமாக மீட்கப்பட்டதும். சம்பவ இடத்தில் தோடு மற்றும் வளையல்கள் இருந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

கரூரில் திமுக பெண் கவுன்சிலர் ரூபா கொலை வழக்கில் உடன் பணிபுரிந்த பெண் மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகைக்கு ஆசைப்பட்டு கணவருடன் சேர்ந்து தீர்த்துக் கட்டியதாக பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 


கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

கரூர் மாவட்டம், பவுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகில் காட்டுப் பகுதியில் ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி பெண் கவுன்சிலர் ரூபா என்பவர் கொலை செய்யப்பட்டு சடலமாக நேற்று மீட்கப்பட்டார். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் அரவக்குறிச்சி டிஎஸ்பி தலைமையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு கொலை குற்றவாளிகள் யார் என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

 


கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

கொலை நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களைப் பார்த்ததில், சந்தேகத்தின் அடிப்படையில், ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சாலைப்புதூர் பகுதிய சேர்ந்த கணவன், மனைவியான கதிர்வேல் - நித்யா ஆகிய இருவரையும் இன்று காலை சுமார் 8 மணி அளவில் கைது செய்த தனிப்படை போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

 


கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

 

நித்யாவும், ரூபாவும் கரூர் பகுதியில் வீட்டு வேலை செய்வதற்காக ஒரே பேருந்தில் வரும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரூபா நகைகள் அணிந்து பகட்டாக இருப்பதைப் பார்த்து, கணவர் கதிர்வேலிடம் நித்யா தெரிவித்துள்ளார். தொடர்ந்து சதித் திட்டம் தீட்டிய நித்யா - கதிர்வேல் தம்பதி, பவுத்திரம் பகுதியில் வீட்டு வேலை இருப்பதாக கூறி, ரூபாவை அப்பகுதிக்கு அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்துள்ளனர்.

 


கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

 

மேலும், ரூபா அணிந்திருந்த தங்கச் சங்கிலி, தோடு, மூக்குத்தி உள்ளிட்ட ஏழு சவரன் நகைகளை திருடியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கொலையாளிகள் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றம் அழைத்துச் சென்று இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். பெண் கவுன்சிலரை கொலை செய்த கணவன் மனைவி இருவரையும் 24 மணி நேரத்தில் கைது செய்த காவலர்களை எஸ்.பி சுந்தரவதனம் பாராட்டியுள்ளார்.

 

 


கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

காவல்துறை விசாரணை இப்படி இருக்க, பெண் கவுன்சிலர் ரூபா கொலை செய்யப்பட்டபோது மேலாடை கலைந்த நிலையில், அரை நிர்வாணத்துடன் மீட்கப்பட்டதுடன், அவர் காதில் அணிந்து இருந்த தோடு மற்றும் கை வளையல்கள் சம்பவ இடத்தில் இருந்தது, காவல்துறை விசாரணை உண்மைதானா? என பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

 


கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

 

காவல்துறை விசாரணையில் தங்க சங்கிலி, தோடு, மூக்குத்தி உள்ளிட்ட ஏழு சவரன் தங்க நகை திருடியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டதாக கூறியிருந்த நிலையில், சம்பவ இடத்தில் இறந்த கிடந்த ரூபா காதில் தோடு மற்றும் வளையல் இருந்தது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"சும்மா விட மாட்டோம்" பயங்கரவாதிகளுக்கு எதிராக சூளுரைத்த ராஜ்நாத் சிங்
பாகிஸ்தான் சொன்னது என்ன? - பரபரப்பில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாராம்!
பாகிஸ்தான் சொன்னது என்ன? - பரபரப்பில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாராம்!
IPL 2025 MI vs SRH: மும்பை படையை தாங்குமா சன்ரைசர்ஸ்? கம்மின்ஸ் ப்ளான் கைகொடுக்குமா?
IPL 2025 MI vs SRH: மும்பை படையை தாங்குமா சன்ரைசர்ஸ்? கம்மின்ஸ் ப்ளான் கைகொடுக்குமா?
'ஜெய் ஶ்ரீ ராம்' சொல்லு என சிறுவனின் தொடையை கிழித்த கும்பல்...பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பால் தூண்டப்பட்டதா பஹல்காம் தாக்குதல் ?
'ஜெய் ஶ்ரீ ராம்' சொல்லு என சிறுவனின் தொடையை கிழித்த கும்பல்...பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பால் தூண்டப்பட்டதா பஹல்காம் தாக்குதல் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடுAshmitha Shri Vishnu | பெண்களிடம் பாலியல் சேட்டை!”கையில் சரக்கு.. CONDOM..” சிக்கிய தவெக நிர்வாகி!”நான் இப்படி தான் நடிப்பேன்” சிம்ரன் Vs ஜோதிகா?பற்றி எரியும் புது பஞ்சாயத்து | Simran Vs JyotikaAnnamalai: MP ஆகும் அண்ணாமலை இறங்கி வந்த சந்திரபாபு! பாஜக பக்கா ஸ்கெட்ச்! | BJP | Chandrababu Naidu

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சும்மா விட மாட்டோம்" பயங்கரவாதிகளுக்கு எதிராக சூளுரைத்த ராஜ்நாத் சிங்
பாகிஸ்தான் சொன்னது என்ன? - பரபரப்பில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாராம்!
பாகிஸ்தான் சொன்னது என்ன? - பரபரப்பில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாராம்!
IPL 2025 MI vs SRH: மும்பை படையை தாங்குமா சன்ரைசர்ஸ்? கம்மின்ஸ் ப்ளான் கைகொடுக்குமா?
IPL 2025 MI vs SRH: மும்பை படையை தாங்குமா சன்ரைசர்ஸ்? கம்மின்ஸ் ப்ளான் கைகொடுக்குமா?
'ஜெய் ஶ்ரீ ராம்' சொல்லு என சிறுவனின் தொடையை கிழித்த கும்பல்...பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பால் தூண்டப்பட்டதா பஹல்காம் தாக்குதல் ?
'ஜெய் ஶ்ரீ ராம்' சொல்லு என சிறுவனின் தொடையை கிழித்த கும்பல்...பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பால் தூண்டப்பட்டதா பஹல்காம் தாக்குதல் ?
Watch Video: மணமாகி 6 நாட்களில் மரணம்; கண்ணீருடன் கணவருக்கு இறுதிவிடை- கதறிய இளம் மனைவி!
Watch Video: மணமாகி 6 நாட்களில் மரணம்; கண்ணீருடன் கணவருக்கு இறுதிவிடை- கதறிய இளம் மனைவி!
HC on Ponmudi: இழிவான பேச்சு.. அமைச்சர் பொன்முடியை வெளுத்து வாங்கிய உயர்நீதிமன்றம்..
இழிவான பேச்சு.. அமைச்சர் பொன்முடியை வெளுத்து வாங்கிய உயர்நீதிமன்றம்..
20 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: இரவு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
20 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: இரவு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
Puducherry Power Shutdown: மக்களே உஷார்... புதுச்சேரியில் நாளை மின்தடை ; எந்தெந்த பகுதி தெரியுமா?
Puducherry Power Shutdown: மக்களே உஷார்... புதுச்சேரியில் நாளை மின்தடை ; எந்தெந்த பகுதி தெரியுமா?
Embed widget