மேலும் அறிய

கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

கரூரில் சென்ன சமுத்திரம் பேரூராட்சி பெண் கவுன்சிலர் உடல் ஆடை கலைந்த நிலையில், அரை நிர்வாணமாக மீட்கப்பட்டதும். சம்பவ இடத்தில் தோடு மற்றும் வளையல்கள் இருந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

கரூரில் திமுக பெண் கவுன்சிலர் ரூபா கொலை வழக்கில் உடன் பணிபுரிந்த பெண் மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகைக்கு ஆசைப்பட்டு கணவருடன் சேர்ந்து தீர்த்துக் கட்டியதாக பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 


கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

கரூர் மாவட்டம், பவுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகில் காட்டுப் பகுதியில் ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி பெண் கவுன்சிலர் ரூபா என்பவர் கொலை செய்யப்பட்டு சடலமாக நேற்று மீட்கப்பட்டார். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் அரவக்குறிச்சி டிஎஸ்பி தலைமையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு கொலை குற்றவாளிகள் யார் என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

 


கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

கொலை நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களைப் பார்த்ததில், சந்தேகத்தின் அடிப்படையில், ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சாலைப்புதூர் பகுதிய சேர்ந்த கணவன், மனைவியான கதிர்வேல் - நித்யா ஆகிய இருவரையும் இன்று காலை சுமார் 8 மணி அளவில் கைது செய்த தனிப்படை போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

 


கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

 

நித்யாவும், ரூபாவும் கரூர் பகுதியில் வீட்டு வேலை செய்வதற்காக ஒரே பேருந்தில் வரும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரூபா நகைகள் அணிந்து பகட்டாக இருப்பதைப் பார்த்து, கணவர் கதிர்வேலிடம் நித்யா தெரிவித்துள்ளார். தொடர்ந்து சதித் திட்டம் தீட்டிய நித்யா - கதிர்வேல் தம்பதி, பவுத்திரம் பகுதியில் வீட்டு வேலை இருப்பதாக கூறி, ரூபாவை அப்பகுதிக்கு அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்துள்ளனர்.

 


கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

 

மேலும், ரூபா அணிந்திருந்த தங்கச் சங்கிலி, தோடு, மூக்குத்தி உள்ளிட்ட ஏழு சவரன் நகைகளை திருடியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கொலையாளிகள் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றம் அழைத்துச் சென்று இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். பெண் கவுன்சிலரை கொலை செய்த கணவன் மனைவி இருவரையும் 24 மணி நேரத்தில் கைது செய்த காவலர்களை எஸ்.பி சுந்தரவதனம் பாராட்டியுள்ளார்.

 

 


கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

காவல்துறை விசாரணை இப்படி இருக்க, பெண் கவுன்சிலர் ரூபா கொலை செய்யப்பட்டபோது மேலாடை கலைந்த நிலையில், அரை நிர்வாணத்துடன் மீட்கப்பட்டதுடன், அவர் காதில் அணிந்து இருந்த தோடு மற்றும் கை வளையல்கள் சம்பவ இடத்தில் இருந்தது, காவல்துறை விசாரணை உண்மைதானா? என பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

 


கரூரில் திமுக பெண் கவுன்சிலர் கொலை; 7 பவுன் நகைக்காக பெண்ணே கணவனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம்!

 

காவல்துறை விசாரணையில் தங்க சங்கிலி, தோடு, மூக்குத்தி உள்ளிட்ட ஏழு சவரன் தங்க நகை திருடியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டதாக கூறியிருந்த நிலையில், சம்பவ இடத்தில் இறந்த கிடந்த ரூபா காதில் தோடு மற்றும் வளையல் இருந்தது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

ஆகஸ்ட் 26-ல் டாஸ்மாக் இயங்குமா? மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு இதுதான்..
ஆகஸ்ட் 26-ல் டாஸ்மாக் இயங்குமா? மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு இதுதான்..
தொழிற்சாலைக்குள் நுழைய தடை... தவெக எம்எல்ஏ புகார்; 2 ஹெச்ஆர் மேலாளர்கள் உட்பட 30 பேர் மீது வழக்கு!
தொழிற்சாலைக்குள் நுழைய தடை... தவெக எம்எல்ஏ புகார்; 2 ஹெச்ஆர் மேலாளர்கள் உட்பட 30 பேர் மீது வழக்கு!
மதுரை: மதுபோதையில் சிறுவன் மீது கார் மோதல்; போலீஸ் SPயின் உறவினர் எனக்கூறி தப்பிக்க முயற்சி !
மதுரை: மதுபோதையில் சிறுவன் மீது கார் மோதல்; போலீஸ் SPயின் உறவினர் எனக்கூறி தப்பிக்க முயற்சி !
" நிதி நிறுவன ஊழியருடன் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பழக்கம் " கடையில் நடந்த கத்தி குத்து சம்பவம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
Parandur Airport: பரந்தூர் இனி கிடையாது.. அப்போ சென்னை புது ஏர்போர்ட் இந்த 3 ஏரியாவுல ஒரு இடத்துலதானா?
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
தப்பிச்சு வந்த 2 பேர்; இல்லைன்னா.. உதயநிதி, ஈபிஎஸ்ஸை மறைமுகமாக கிண்டலடித்த அமைச்சர் செங்கோட்டையன்
Vijayabaskar election case : 5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
5 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை.! விஜயபாஸ்கருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்- நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்
Iran Vs US Hormuz: “பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
“பொருளாதார போர் தொடர்ந்தா, ஒரு துளி எண்ணெய் கூட...“ அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கர எச்சரிக்கை
Udhayanidhi Stalin: “அற்ப அரசியலுக்காக விமான நிலைய திட்டத்தை கைவிட்டால், அண்டை மாநிலங்களுக்கே லாபம்“ உதயநிதி ஸ்டாலின்
“அற்ப அரசியலுக்காக விமான நிலைய திட்டத்தை கைவிட்டால், அண்டை மாநிலங்களுக்கே லாபம்“ உதயநிதி ஸ்டாலின்
US Iran War: “அடக்குமுறை ஈரான் அரசுக்கு ஆதவான எல்லா பொருளாதார உயிர்நாடியும் துண்டிக்கப்படும்''-செல்றது யார் தெரியுமா.?
“அடக்குமுறை ஈரான் அரசுக்கு ஆதவான எல்லா பொருளாதார உயிர்நாடியும் துண்டிக்கப்படும்''-செல்றது யார் தெரியுமா.?
Stalin vs Vs Babu : நான் தான் வெற்றி பெற்றேன்.! வி.எஸ்.பாபுவிற்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்- நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்
நான் தான் வெற்றி பெற்றேன்.! வி.எஸ்.பாபுவிற்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்- நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்
பரந்தூர் ரத்து: பின்னோக்கிச் செல்லும் அபாயம்; புது விமான நிலைய இடத்தை விரைந்து கண்டறியக் கோரிக்கை!
பரந்தூர் ரத்து: பின்னோக்கிச் செல்லும் அபாயம்; புது விமான நிலைய இடத்தை விரைந்து கண்டறியக் கோரிக்கை!
Embed widget