மேலும் அறிய

திண்டுக்கல் பாலியல் கல்லூரி தாளாளர்: போளூர் நீதிமன்றத்தில் சரண்!

திண்டுகல்லில் பாலியல் புகாரில் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு தலைமறைவான தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் போளுர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்

திண்டுக்கல் பழநி சாலையில் உள்ள முத்தனம்பட்டி அருகே உள்ளது சுரபி நர்சிங் கல்லூரி. இந்த கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது அமமுக கட்சியின் அம்மா பேரவை இணைச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். அவரது கல்லூரி விடுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவிகளுக்கு கல்லூரியின் தாளாளர் சுரபி ஜோதிமுருகன் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

மேலும் நள்ளிரவில் கல்லூரிக்கு வரும் ஜோதிமுருகன் மாணவிகளை தனது காரில் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள அவரின் மற்றொரு கல்லூரிக்கு கூட்டி செல்வாராம். அங்கிருந்து சுமார் ஒரு மணிவரை மாணவிகளை தன்னுடன் இருக்க வைத்துவிட்டு பாலியல் சீண்டல்களை தொடர்ந்து கொடுத்து வந்ததாகவும், இதற்கு கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனா என்ற பெண்ணும் உதவியாக இருந்து வந்துள்ளதாக மாணவிகள் புகார் கூறியுள்ளனர். 

 


திண்டுக்கல் பாலியல் கல்லூரி தாளாளர்: போளூர் நீதிமன்றத்தில் சரண்!

 

 

மேலும் கடந்த 19ந் தேதி தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளிடம் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகின்றன. இதனால் நர்சிங் கல்லூரி மாணவிகள் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திடிரென திண்டுக்கல் முத்தனம்பட்டி சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தகவலறிந்த வந்த தனியார் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை சமசரம் செய்ய முயன்ற போது ஆத்திரமடைந்த மாணவ மாணவிகள் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனை தாக்கினார்கள்.


இந்தநிலையில் பாலியல் சீண்டல்களில் பாதிக்கப்பட்ட மூன்று கல்லூரி மாணவிகள் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் இதில் இரண்டு மாணவிகள் பதினெட்டு வயதுக்கு உட்பட்ட மாணவிகள் இதனால் ஜோதி முருகன் மீது தனிதனியாக இரண்டு போக்சோ சட்டங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மற்றொரு பதினெட்டு வயதுக்கு மேல் உள்ள பெண் கொடுத்த புகாரின் கீழ் காவல்துறையினர் 506/2 கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவும் மற்றும் 15  பிரிவின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டது. அதனைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனாவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் தலைமறைவான சுரபி கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை பிடிக்க  5 தனிப்படை காவல்துறையினர் தேடிவந்தனர். 

 


திண்டுக்கல் பாலியல் கல்லூரி தாளாளர்: போளூர் நீதிமன்றத்தில் சரண்!

 

 

இந்நிலையில் தீவிரமாக தேடப்பட்டு வந்தநிலையில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன்  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி வெங்கடேசன் முன்னணியில் ஜோதிமுருகன் சரண்டர் அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஜோதிமுருகன் வருகின்ற 26-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்தநிலையில் சுரபி கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனை நீதிமன்ற பாதுகாப்புடன் காவல்துறையினர் வேலூர் மத்திய சிறைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.  அதனைத்தொடர்ந்து தகவல் அறிந்த திண்டுக்கல் தனிப்படை காவல்துறையினர் போளூர் நீதிமன்றத்திற்கு விரைந்து  வந்தனர். இச்சம்பவம் குறித்து தனிப்படை வட்டாரத்தில் தெரிவிக்கையில் தலைமறைவாக உள்ள ஜோதிமுருகனை நாங்கள் கடந்த மூன்று நாட்கள் மேலாக தேடிவருகிறோம் அவரை நாங்கள் கிட்டதிட்ட நெருங்கி விட்டோம். இதனை அறிந்த ஜோதி முருகன் இன்று போளூர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆகிவிட்டார். மேலும் நீதிமன்றம் காவல் முடிந்த பிறகு நாங்கள் எங்களுடைய கஷ்டடியில் எடுக்கவுள்ளோம் என்று தனிப்படை காவல்துறையினர் வட்டாரத்தில் தெரிவித்தார்

தலைப்பு செய்திகள்

" பேனர் வைப்பதில் தகராறு " ரியல் எஸ்டேட் அதிபர் பட்டப் பகலில் வெட்டிப் கொலை
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
ஆசை வார்த்தை நம்பி ஆப்ப அடிச்ச காதலி! கடைசியில் கம்பி எண்ணும் கள்ளக்காதல் ஜோடி- நடந்தது என்ன?
ஆசை வார்த்தை நம்பி ஆப்ப அடிச்ச காதலி! கடைசியில் கம்பி எண்ணும் கள்ளக்காதல் ஜோடி- நடந்தது என்ன?
" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Embed widget