மேலும் அறிய

பெண்ணை நெருக்கமாக பழகவிட்டு வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல் - சிக்கியது எப்படி?

பெண்ணை நெருக்கமாக பழகவிட்டு வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு.  பெண் உட்பட மூவரைக் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பழனியில் பைனான்சியர்களை குறி வைத்து பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


பெண்ணை நெருக்கமாக பழகவிட்டு வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல் - சிக்கியது எப்படி?

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரைச் சேர்ந்தவர்கள் ராணி சித்ரா, நாராயணன், துர்க்கை ராஜ், ராணி சித்ரா காவல்துறையில் சில காலம் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் ராணி சித்ரா பழனி நகரில் பைனான்ஸ் தொழில் செய்பவர்களை குறி வைத்து ஆசை வார்த்தை கூறி, நெருக்கமாக பழகி பின்னர் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். பழனியைச் சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்யும் சுகுமார் என்பவர் ராணி சித்ராவின் வலையில் விழுந்து பல லட்சம் ரூபாயை இழந்த நிலையில் மீண்டும், மீண்டும் பணம் கேட்டு ராணி சித்ரா மிரட்டியதால் பழனி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் ராணி சித்ரா மற்றும் நாராயணன், துர்க்கைராஜ் ஆகியோர் சேர்ந்து தன்னை மிரட்டி 10 லட்சம் ரூபாய் பணம் கேட்பதாகவும், தர மறுத்தால் ராணி சித்ராவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி நற்பெயரை கெடுத்து விடுவதாகவும் கூறி மிரட்டியதாக புகாரில் தெரிவித்துள்ளார். புகாரைப் பெற்ற பழனி நகர காவல் துறையினர் நாராயணன், துர்க்கை ராஜ் இருவரையும் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது ராணி சித்ராவை  ஆண்களிடம் நெருக்கமாக பழக வைத்து பின்னர் போட்டோ, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்துள்ளது. நாராயணன், துர்க்கைராஜ் இருவரையும் பிடித்த போலீஸார் அவர்களின் செல்போனில் இருந்த வீடியோக்களை பறிமுதல் செய்தனர்.


பெண்ணை நெருக்கமாக பழகவிட்டு வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல் - சிக்கியது எப்படி?

தொடர்ந்து நடத்திய விசாரணையில்  பைனான்சியர் சுகுமார் போன்று பல பேரிடம் ராணி சித்ரா  மிரட்டி பணம் பறித்ததும், பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் பலரும் பயந்து போலீசில் புகார் தெரிவிக்காமல் ராணிசித்ராவிடம் பணத்தை கொடுத்து விட்டு வெளியே சொல்ல முடியாமல் இருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. துர்க்கை ராஜ் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள், அடிதடி கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. பழனியில் ரவுடித்தனம் செய்து வந்த துர்க்கை ராஜை  ராணிசித்ரா பைனான்சியர்களை மிரட்ட பயன்படுத்தியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த ராணி சித்ரா நாராயணன், துர்க்கை ராஜ் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பழனியில் பைனான்சியர்களை மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
Embed widget