மேலும் அறிய

Dharmapuri: கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா..? - தருமபுரியில் கையும் களவுமாக சிக்கிய கும்பல்

சட்டத்திற்கு விரோதமாக ஈடுபட்ட அந்த கும்பல் ஒரு பெண்ணிடம் 26,400 ரூபாய் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து மொரப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

மொரப்பூர் அருகே பாலின சோதனை நடத்தி வந்த கும்பலை காவல்துறையினர் விசாரித்தபோது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஒரு பெண்ணிடம் கருவில் இருக்கும் குழந்தை ஆனா, பெண்ணா என்று சொல்வதற்கு 26,400 ரூபாய் வாங்கியதாக மோசடி கும்பல் வாக்குமூலம் கொடுத்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த வகுத்தானூர் கிராமத்தில் வசித்து வந்த சாக்கம்மாள் (எ) புஷ்பவதி, (52) என்பவர் வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் கருவி மூலம் சொல்வதற்கு பல ஆயிரம் ரூபாய்கள் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. 
 
இந்தத் தகவல் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடந்து வந்த நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் தருமபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. இணைய இயக்குனரின் அறிவுறுத்தலின்படி அரூர் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் ராஜேஷ்கண்ணா, குழுவினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, சட்டத்திற்கு விரோதமாக ஈடுபட்ட அந்த கும்பல் ஒரு பெண்ணிடம் 26,400 ரூபாய் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து மொரப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
 
விசாரணையில் மோசடி கும்பல் கூறியது:
 
கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக வகுத்தானூர் கிராமத்தில் உள்ள சாக்கமாள் (எ) புஷ்பாவதி வீட்டில் புஷ்பாவதி, (52) மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கவியரசன், (28) ஐயப்பன், (34) மூவரும் முறையான மருத்துவம் படிக்காமல் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆனா பெண்ணா என்று சொல்வதற்கு பல ஆயிரம் ரூபாய்கள் வாங்கியதாகவும் மொரப்பூர் காவல் துணை ஆய்வாளர் வான்மதியிடம் மூவரும் வாக்குமூலம் கொடுத்தனர்.
 
இந்த விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையத்தை சேர்ந்த மனோஜ்குமார், (24) என்பவர் டிரைவர் வேலை செய்து வருவதாகவும், இந்த சம்பவ இடத்திற்கு வாடகைக்காக மட்டுமே வந்ததாக தெரிய வந்ததை அடுத்து அவரை விடுவித்தனர்.
 
மேலும் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்த மூன்று நபர்களில் சாக்கம்மாள் (எ) புஷ்பவதி, (52) இவரை சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். கவியரசன் மற்றும் ஐயப்பனை அரூர் கிளை  சிறைக்கு அழைத்து சென்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget