மேலும் அறிய

காஞ்சிபுரத்தில் துணை வட்டாட்சியரின் மனைவி தற்கொலை..? - சாவில் சந்தேகமென பெற்றோர் புகார்

அவரது கணவர் தான் கழுத்து நெறித்து கொலை செய்துள்ளார் என பெற்றோர்கள், உறவினர்கள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணிபுரிபவர் சதீஷ். இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது மனைவி சங்கீதா மற்றும் இரு குழந்தைகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். துணை வட்டாட்சியராகிய சதீஷ் மது போதைக்கு அடிமையாகி நாள்தோறும் குடித்துவிட்டு வந்து காதல் மனைவி சங்கீதா உடன் தகராறு செய்து வந்துள்ளார்.


காஞ்சிபுரத்தில் துணை வட்டாட்சியரின் மனைவி தற்கொலை..? - சாவில் சந்தேகமென பெற்றோர் புகார்

கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் நிலையில் சங்கீதா தனது தாய் வீட்டிற்கும் சென்று தங்கி உள்ளார். பின்னர் சதீஷ், மாமியார் வீட்டில் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்துகொண்டு மனைவியை தனது வீட்டிற்கு அழைத்து  வந்துள்ளார். இந்நிலையில் நேற்றும் கணவன் மனைவி இடையே  மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் சங்கீதா தனது வீட்டின் அறையில் மர்மமான முறையில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரது கணவர் போலீசாருக்கும்,உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரத்தில் துணை வட்டாட்சியரின் மனைவி தற்கொலை..? - சாவில் சந்தேகமென பெற்றோர் புகார்

அதன்பின்  காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து  துணை வட்டாட்சியர் சதீஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் சங்கீதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி  சதீஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சங்கீதாவின் தாய் மற்றும் குடும்பத்தினர் புகார் அளித்ததன் பேரில் காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


காஞ்சிபுரத்தில் துணை வட்டாட்சியரின் மனைவி தற்கொலை..? - சாவில் சந்தேகமென பெற்றோர் புகார்

மேலும் தனது மகள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக அவரது கணவர் நாடகமாடுவதாகவும், சங்கீதாவை  அவரது கணவர் தான் கழுத்து நெறித்து கொலை செய்துள்ளார் என சங்கீதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காஞ்சிபுரத்தில் குடும்பப் பிரச்சனை காரணமாக துணை வட்டாட்சியரின் மனைவி  சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Suicidal Trigger Warning

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

 


 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Embed widget